I tamil web

I tamil web


யானா குப்தா ஆங்கில இதழுக்கு கொடுத்த முழு நீளக் கவர்ச்சி போஸ்! (படங்கள் இணைப்பு)

Posted: 11 May 2012 04:01 AM PDT

பாலிவுட்டின் கவர்ச்சி சூறாவளி யானா குப்தா, மேக்ஸிம் ஆங்கில இதழுக்கு முழு நீள கவர்ச்சி காட்டி கொடுத்துள்ள போஸ்கள் பாலிவுட்டில் சூட்டைக் கிளப்பியுள்ளன. கவர்ச்சி காட்டி மட்டுமே நடிப்பது என்ற பாலிசியுடன் பாலிவுட்டைக் கலக்கி வருபவர் யானா குப்தா. பாலிவுட் மட்டுமல்லாது கோலிவுட்டிலும் தனது கவர்ச்சியின் வீச்சைக்காட்டி விட்டு இளம் உள்ளங்களை இம்சித்து விட்டுப் போனவர். நடிக்கிறாரோ இல்லையோ, கவர்ச்சியில் எந்தக் குறையும் வைப்பதில்லை யானா குப்தா. இதனாலேயே அவரை வைத்து படம் எடுப்பவர்கள் கவர்ச்சி பற்றிக் கவலைப்படுவதே இல்லை. வாங்கிய டப்புக்கு டபுள் மடங்காக கவர்ச்சியில் கலக்குபவர் யானா. இப்போது மேக்ஸிம் ஆங்கில இதழுக்கு முழு நீள கவர்ச்சி காட்டி அவர் கொடுத்துள்ள போஸ்கள் பாலிவுட்டில் பட்டையைக் கிளப்பியுள்ளன. படு சூடான அந்த போஸ்களால் மேக்ஸிம் இதழுக்கே புதுக் கவர்ச்சி வந்து விட்டது என்கிறார்கள் பாலிவுட்டில். இந்தியாவின் பிளேபாய் என்ற ரேஞ்சுக்குப் போய்க் கொண்டிருக்கும் மேக்ஸிம் இதழ் தனது முதல் இதழில் குஷ்புவை குண்டக்க மண்டக்க போஸில் பிரசுரித்து வாங்கிக் கொண்டது என்பது நினைவிருக்கலாம். ஆனாலும் தனது கவர்ச்சி சேவையில் கொஞ்சமும் தொய்வில்லாமல் ஜெட் வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது மேக்ஸிம். லேட்டஸ்டாக வெளியாகியுள்ள யானாவின் விஸ்வரூப ஸ்டில்கள்தான் இப்போது பாலிவுட்டின் சூடான பேச்சாக உள்ளது. யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன். அதேபோல யானா எப்படி போஸ் கொடுத்தாலும் அது கவர்ச்சிதான்.





கோலாகலமாக இடம்பெற்ற - சினேகா பிரசன்னா திருமணம்! (படங்கள் இணைப்பு)

Posted: 11 May 2012 03:56 AM PDT


சினிமா நட்சத்திரங்கள் சினேகா - பிரசன்னா திருமணம் சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்தது.தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் சினேகா. புன்னகையரசி என்று எல்லோரும் வர்ணிக்கப்படும் சினேகா அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் சேர்ந்து நடித்தார்.அப்போது அவர்களுக்குள் ஆரம்பமான நட்பு பின்னர் காதலாக மாறியது. ஆனால் இந்த காதலை இருவரும் வெளிகாட்டிக்கொள்ளாமல் ரகசியம் காத்து வந்தனர்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த காதலை ‌போட்டு உடைத்தார் நடிகர் பிரசன்னா. இவர்களது திருமணத்திற்கும் இருவரது வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததையடுத்து திருமணம் நிச்சயமானது.


அதன்படி நேற்று மாலை திருமண நிச்சயதார்த்தமும், வரவேற்பும் நடந்தது. முன்னதாக மணமகன் பிரசன்னா அலங்கரிக்கப்பட்ட தேரில் அழைத்து வரப்பட்டார். சினேகாவை ஒரு இளவரசி போல அலங்கரித்து, மலர் அலங்காரம் செய்யப்பட்ட பல்லக்கில் அமர வைத்து அழைத்து வந்தனர்.பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டு மேடையில் நின்றனர். தொடர்ந்து இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். அவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர்.இன்று(11.05.12) காலை இருவரது திருமணமும் சென்னை, வாணகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் நடந்தது. மணமகள் சினேகா கழுத்தில் பிரசன்‌னா தாலி கட்டி தனது மனைவியாக ஏற்றுக்கொண்டார். இந்த திருமணத்தில் ஏராளமான திரை நட்சத்திரங்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.






செமக் காமெடிப்பா! செமக் காமெடி! (வீடியோ இணைப்பு)

Posted: 11 May 2012 03:51 AM PDT

வாழ்க்கையில் பின்னிப் பிணைந்ததுதான் காமெடி. அதற்காக ரூம் போட்டே சிலர் யோசிப்பாங்க. ஆனால் இப்படியெல்லாமா செய்வாங்க? ஹையோ... ஹையோ...









பாலைவனத்தில ஆடை மாற்றிய இலியானா! (சூடான வீடியோ இணைப்பு)

Posted: 10 May 2012 08:57 PM PDT


அண்மையில் வெளிவந்து சக்கை போடு போட்ட நண்பன் திரைப்படத்தில் நடித்த இலயானாவை முன்பிருந்தே அறியாதவர்கள் இருக்க முடியாது. இவர் திரையுலகின் மெல்லியை அழகி என சிம்ரனிற்கு நிகராகப் பெயர் பெற்றவர்.


ஹிந்திப்பட சூட்டிங் ஒன்றின் போது இலியானா பாலைவனத்தில் கொழுத்தும் வெய்யிலிலும் தனது ஆடையைக் கழற்றி மாற்றியுள்ளார்.

அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள டைம்ஸ் சஞ்சிகையின் அட்டைப் படம்! (படங்கள் இணைப்பு)

Posted: 10 May 2012 08:25 PM PDT


பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் பிரபல சஞ்சிகையான டைம்ஸ் ஆனது பிரபலங்களின் கவர்ச்சியான படங்களை தனது அட்டைப்படமாக பிரசுரிப்பது வழமை.


எனினும் தற்போது வெளியிட்டுள்ள படமானது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 26 வயதான ஜெம்மி லைன் குறுநெட் என்ற பெண் மூன்றே வயதான தனது மகனுக்கு பாலூட்டுவது போன்ற காட்சியமைப்பைக் கொண்ட ஆபாசம் நிறைந்த படத்தை பிரசுரித்துள்ளது.





தாம்பத்திய உறவின்போது நல்லதை நினைத்தால் நல்ல குழந்தை பிறக்கும்!

Posted: 10 May 2012 07:37 PM PDT


புதிதாக திருமணமான தம்பதியர் முதன் முதலாக தாம்பத்ய உறவில் ஈடுபடும்போது நல்ல, நேர்மறையான எண்ணங்களை மனதில் நினைக்க வேண்டும் என்று காமசூத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பொழுதுதான் ஆரோக்கியமான, புத்திசாலியான குழந்தைகள் பிறக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.தாம்பத்ய உறவில் இணையும் தம்பதியர் குழந்தை பெற்றுக்கொள்வதில் அனுசரிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. படுக்கை அறைக்குள் செல்லும் முன்பாக பெரியோர்களை மதித்து அவர்களிடம் நல்வாக்குப் பெற வேண்டும். உறவில் ஈடுபடும் வேளையில் ஆண், பெண்ணின் மனதில் நல்ல சிந்தனைகளே ஓட வேண்டும்.


பெண், மனம் லயிக்கும் இசைகளைக் கேட்க வேண்டும். ஆன்மீக சிந்தனை வேண்டும். பிறர்க்கு உதவிடும் எண்ணம் வேண்டும். அறிவுக்கு விருந்தாகும் சிறந்த புத்தகங்களைப் படிக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்து வந்தால் தான், கருவில் உருவாகும் குழந்தை, அதே போல, நல்ல திறமைசாலியாக, பிறர்க்கு பயன் உள்ளவனாக, சாதனையாளனாக வர முடியும் என்கிறது காமசூத்திரம்.



  • பரிசுத்தமான உணவு



தாம்பத்ய உறவில் ஈடுபடும் கணவனது விந்து பரிசுத்தமானதாக, ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது அவசியம். இதற்காக அவன் தனது உணவு முறையில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். பச்சைக்காய்கறிகள், இளநீர், பழ வகைகள் போன்ற இயற்கை உணவுப் பொருட்களையே உட்கொள்ளவேண்டும்.செயற்கை உணவுப் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். அப்போது தான் விந்து பரிசுத்தமாக, வீரியம் மிக்கதாக இருக்கும். இப்படிப்பட்ட விந்தினால் தான், உடனே கருப்பிடிக்க ஏதுவாகும். அல்லது வீரியமற்ற விந்து உருவாகி, அதனால் கருத்தரிப்பில் தாமதம் ஏற்படலாம்.


எப்படி பாலைக் காய்ச்சி, சிறிதளவு தயிரில் ஊற்றினால், அது எல்லாம் தயிராகிறதோ, அது போல, நல்ல விந்தானது, கருப்பையில் சென்ற உடனே, அங்குள்ள கரு முட்டையோடு இணைந்து கருத்தரித்தல் நடக்கிறது.



  • ஆணா? பெண்ணா?



உறவின் போது விந்தணுக்கள் அதிகமாக இருந்தால், அது ஆண் குழந்தையாகவும், பெண்ணின் சுரோநிதம் என்ற பொருள் அதிகமாக இருந்தால் அது பெண் குழந்தையாகவும் ஜனிப்பதாக, காமசூத்திரம் சொல்கிறது. ஆணின் விந்தணுச் சுரப்பிலும், பெண்ணின் சுரோனிதச் சுரப்பிலும் ஏற்றத்தாழ்வுகள் நிகழலாம். ஆனால் இரண்டுமே சம அளவில் நிகழ்ந்தால், ஒன்றை ஒன்று டாமினேட் செய்ய முடியாமல், இறுதியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்ட அரவாணியாக குழந்தை உருவாகிறது.


எனவே உறவில் ஈடுபடுவது உடல் மகிழ்ச்சிக்காக மட்டுமல்ல அது ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கவும்தான் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். எனவே நல்ல சிந்தனையோடு நேர்மறை எண்ணத்தோடு அணுகுங்கள் நல்ல குழந்தைகளை உருவாக்கலாம்.

பிஞ்சுக் குழந்தையை வதைக்கும் மோசக்காரத் தாய்! (வீடியோ இணைப்பு)

Posted: 10 May 2012 07:32 PM PDT


எட்டு மாத பெண் குழந்தை ஒன்றை மலேசிய தாய் ஒருவர் அடித்து கொடுமைப் படுத்துகின்றமையை காட்டுகின்ற வீடியோ ஒன்று சமூக இணைப்பு தளங்களில் நேற்று மாலை வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இப்பெண் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று மலேசியர்கள் உரக்க குரல் கொடுக்கலாயினர். இப்பெண்ணை கைது செய்ய சொல்லி 300 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் ரோயல் மலேசிய பொலிஸாருக்கு கிடைத்து உள்ளன.


ஆனால் இவ்வீடியோ பழையது என்பதையும் கொடுமைக்கார பெண் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றார் என்பதையும் பொலிஸார் உடனடியாக கண்டுபிடித்து உள்ளார்கள்.


Petaling Jaya என்கிற இடத்தில் கடந்த வருடம் மே 29 ஆம் திகதி குழந்தை கொடுமைப்படுத்தப்பட்டு இருக்கின்றது. அன்றைய தினமே பெண்ணும் உடனடியாக கைது செய்யப்பட்டு இருக்கின்றார். கைது செய்யப்பட்ட பெண் கடந்த 18 மாத காலமாக சிறையில் உள்ளார். குழந்தை சமூக நல திணைக்களத்தின் பாதுகாப்பில் உள்ளது. வீடியோ எடுத்தவர் இது சம்பந்தப்பட்ட வழக்கில் பொலிஸ் தரப்பு சாட்சியாக உள்ளார்.


வீடியோ நான்கு நிமிடங்கள் வரையான காட்சியைத்தான் கொண்டது. கட்டிலில் அமர்ந்து இருக்கின்ற பெண் தலையணையாலும், கையாலும், காலாலும் குழந்தையை தொடர்ச்சியாக நைய புடைக்கின்றமையை இது காட்டுகின்றது.

பிரம்மாண்டமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தி அமேஸிங் ஸ்பைடர் மேன்! (ரெயிலர் இணைப்பு)

Posted: 10 May 2012 06:34 PM PDT


வருகிற ஜுலை மாதம் 3ம் திகதி மிகப் பெரும் புகழை பெற்ற திரைப்படமான ஸ்பைடர் மேன் திரைப்படம் "தி அமேஸ்சிங் ஸ்பைடர்மேன்" எனும் பெயரில் வெளியாகவுள்ளது. இத் திரைப்படத்தின் ட்ரெயிலர் யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.


பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் THE AMAZING SPIDERMAN இன் கதைக்களம் இதுவரை சொல்லப்படாத பீட்டர் பார்க்கரின் மற்றோரு பக்கமாக வித்தியாசமான முறையில் அமையவிருப்பதாக தெரிகிறது. இப்படம் Stan Lee மற்றும் Steve Ditko வின் மார்வெல் காமிக் புத்தகத்தின் அடிப்படையில் James Vanderbilt ன் எழுத்தில் Marc Webb இயக்கத்தில் உருவாகியுள்ளது. THE AMAZING SPIDERMAN வருகின்ற ஜீலை மாதம் திரைரங்குகளில் 3Dயில் வந்து கலக்கப்போகிறது.

பூனையை அடித்து குப்பைத் தொட்டிக்குள் போட்ட கொலைகாரப் பாவி! (வீடியோ இணைப்பு)

Posted: 10 May 2012 06:29 PM PDT


ஐம்பது வயது மதிக்கத்தக்க மாது ஒருவர் தனது வீட்டிற்கு வெளியே சாலையோரமாகவுள்ள குப்பைத் தொட்டியினுள் பூனை ஒன்றை வதைத்து விட்டு போட்டுள்ளார்.


இவரின் கொடுமையை அவ் வீதியில் பொருத்தப்பட்டிருந்த ரகசியக் கண்காணிப்புக் கமெரா காட்டிக் கொடுத்துவிட்டது. 

அபார முயற்சியால் சிறு வயதிலேயே லட்சாதிபதியான சிறுமி! (வீடியோ இணைப்பு)

Posted: 10 May 2012 06:23 PM PDT


ஐயேலிதா அன்ட்ரே என்பவள் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரைச் சேர்ந்த ஐந்தே வயதான சிறுமி. ஆனால் தனது ஓவியங்கள் மூலம் 100 000 பவுண்ட்ஸுகளுக்கும் அதிகமாக சம்பாதித்து சாதனை படைத்து வருகின்றாள். இவளுக்கு 2 வயதான போதிலிருந்தே மாடர்ன் ஆர்ட் வரைவதில் ஆர்வம் இருந்து வந்துள்ளது. இதை ஊக்குவித்த அவளது பெற்றோர்களின் உதவியுடன் இவள் வளரத்தொடங்கியதிலிருந்து மாடர்ன் ஆர்ட் வரைவதை ஒரு தொழிலாகவே மாற்றி செய்து வருகின்றாள்.


இவள் வரைந்த மிகக் குறைந்த விலையுடைய ஓவியங்களே 3000 பவுண்டுகள் பெறுமதி  வாய்ந்தவை. தனது ஓவியத் திறமை மேலும் மெருகேற இவள் வரையும் ஓவியங்களுக்கு விலையும் அதிகரித்தது. இதுவரை இந்த ஓவியங்களை விற்றதன் மூலம் சம்பாதித்த தொகையான ஒரு லட்சம் பவுண்டுகள் ஓவியம் வரைவதை ஒரு தொழிலாகக் கொண்டிருப்பவ்ர்கள் பலர் தங்கள் ஆயுள் காலத்தில் சம்பாதித்த தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது,


இவளது தாய் ரஷ்ய நாட்டையும் தந்தை அவுஸ்திரேலியாவையும் சேர்ந்தவர்கள். மேலும் இவர்கள் தங்கள் மகள் உழைத்த பணத்தை அவர்கள் கொண்டு நடத்தும் டிரஸ்ட்டில் முதலீடு செய்துள்ளனர். இச்சிறுமியின் ஓவியங்கள் ஏற்கனவே இரு கண்காட்சிகளில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஜூனில் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள மிகப் பெரிய ஓவியக் கண்காட்சி ஒன்றிலும் இவை இடம் பெறவுள்ளன.