சித்தர்கள் தமிழக செய்திகள், இலங்கை முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், உலக செய்திகள், ஆன்மிகம் மற்றும் சமயல் குறிப்புகள்

சித்தர்கள் தமிழக செய்திகள், இலங்கை முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், உலக செய்திகள், ஆன்மிகம் மற்றும் சமயல் குறிப்புகள்


Lessons on Astrology: வர்கோத்தமம்!

Posted: 11 May 2012 10:13 AM PDT



வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும்!

ராசி, மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும்!

ராசி கட்டத்தில் சிம்மத்தில் செவ்வாய் இருந்து, அம்சத்திலும் சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் அதற்கு வர்கோத்தம செவ்வாய் என்று பெயர்!

சிம்மத்திற்கு செவ்வாய் யோககாரகன். அவன் வர்கோத்தமமும் பெற்றால் ஜாதகனுக்கு இரட்டிப்பு யோகங்களைக் கொடுப்பார். நல்ல பலன்களைக் கொடுப்பார்

உங்கள் மொழியில் சொன்னால், சாதாரணப் பேருந்து, மாடிப் பேருந்தாக மாறிவிடும்! An ordinary bus will become a double decker bus!

பலன்: அப்படி வர்கோத்தமம் பெறும் கிரகம் வலிமை உடையதாக ஆகிவிடும். அந்த அமைப்பு ஜாதகனுக்கு அதிகமான அளவு நன்மையான பலனைக் கொடுக்கும்! இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும். கீழே பட்டியல் உள்ளது!
++++++++++++++++++++++++++++++++++++++
லக்கினம் வர்கோத்தமம் பெற்றால், ஜாதகன் நீண்ட ஆயுளூடன் இருப்பான்!

மற்ற பலன்கள்:

சூரியன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்குத் தலைமை ஏற்கும் தகுதியைக் கொடுக்கும்.

சந்திரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத மன வலிமையைக் கொடுக்கும். எதையும் சட்'டென்று புரிந்து கொள்ளும் தன்மையைக் கொடுக்கும்

செவ்வாய் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஆற்றலை, செயல் திறனைக் கொடுக்கும்

புதன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத பேச்சுத் திறமையைக் கொடுக்கும்.

குரு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத புத்திசாலித்தனத்தைக் கொடுக்கும்

சுக்கிரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அழகையும், கவரும் தன்மையையும் கொடுக்கும்

சனி வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதப் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் கொடுக்கும்

ராகு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதத் துணிச்சலைக் கொடுக்கும்

கேது வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஞானத்தைக் கொடுக்கும்
---------------------------------------------
இது தவிர, வர்கோத்தமம் பெறும் கிரகம், ஜாதகத்தில் அது எந்த பாவத்திற்கு/வீட்டிற்கு உரியதோ, அந்த வீட்டிற்கான பலன்களை உரிய நேரத்தில் வாரி வழங்கும்

இவை எல்லாமே பொதுப்பலன்கள்.

தனிப்பட்ட ஜாதகங்களுக்கு இந்தப் பலன்கள், மற்ற கிரகங்களின் பார்வை, சேர்க்கை, வக்கிர நிலைமை, அஸ்தமனம், போன்ற இதர விஷயங்களை வைத்துக் கூடலாம், அல்லது குறையலாம், அல்லது இல்லாமலும் போகலாம்.

அது அவரவர் வாங்கி வந்த வரத்தைப் பொறுத்தது.
+++++++++++++++++++++++++++++++++++++++++
ஏழாம் வீட்டு அதிபதி, ராசி & நவாம்சம் இரண்டிலும் ஒரே இடத்தில் வர்கோத்தமம் பெற்றிருந்தால், ஜாதகனுக்கு, அசத்தலான மனைவி கிடைப்பாள். ஜாதகியாக இருந்தால் அசத்தலான கணவன் கிடைப்பான்.

இதே பலன், பத்தாம் வீட்டிற்கு எனும் போது, ராசியிலும், தசாம்ச சக்கரத்திலும், பத்தாம் வீட்டு அதிபதி வர்கோத்தமம் பெற்றிருக்க வேண்டும். பெற்றிருந்தால், ஜாதகனுக்கு அசத்தலான வேலை கிடைக்கும் அல்லது அசத்தலான தொழில் அமையும்!

இதைப்போலவே மற்ற கிரகங்களுக்கும் பலனை ஊகித்துக் கொள்ளுங்கள். வாத்தியாரை ஊகித்துச் சொல்லும்படி உங்கள் ஜாதகத்தை எடுத்து நீட்டாதீர்கள். பாவம் வாத்தியார். அவருக்கு நேரம் இல்லை!

நகைச்சுவை: கண்ணாளன் vs கண்மணி

Posted: 11 May 2012 10:11 AM PDT

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நகைச்சுவை: கண்ணாளன் vs கண்மணி

இது நகைச்சுவைக்காகவே எழுதப்பெற்றுள்ளது!
சீரியஸ் பேர்வழிகளும், உம்மன்னா மூஞ்சி ஆசாமிகளும்
பதிவை விட்டு விலகவும்!
------------------------------------------------------------

1
கணவன்: மனைவி என்பதற்காக அர்த்தம் தெரியுமா உனக்கு?
Do you know the meaning of W I F E? It means,
Without Information, Fighting Everytime!

மனைவி: இல்லை, கண்ணாளா! அதன் அர்த்தம் -
With Idiot For Ever
---------------------------------------------
2
செய்தித்தாளை, விழுந்து விழுந்து படிக்கும் கணவனிடம் மனைவி
சொன்னாள்:

மனைவி: நான் ஒரு செய்தித்தாளாக இருந்திருக்க வேண்டும்.
உங்கள் கரங்களில் தவழும் பாக்கியம் தினமும் கிடைக்கும்.

கணவன்: நானும் அதைத்தான் விரும்புகிறேன். எனக்கும் ஒவ்வொரு
நாளும் புதிது புதிதாக செய்தித்தாள்கள் கிடைத்துக் கொண்டிருக்கும்!
---------------------------------------------
3
மருத்துவர்:" அம்மணி, உங்கள் கணவருக்கு மன அமைதியும் ஓய்வும்
தேவை. ஆகவே இந்தாருங்கள் தூக்க மாத்திரைகள்

மனைவி: இவற்றை, அவருக்கு நான் எப்போது கொடுக்க வேண்டும்?

மருத்துவர்: மாத்திரைகள் அவருக்கல்ல: உங்களுக்கு!
--------------------------------------------------------
4
மனைவி: நீங்கள் இப்படியொரு ஏமாளி என்று தெரிந்துகொள்ள
உங்களை நான் திருமணம் செய்துகொள்ள வேண்டியதாயிருந்திருக்கிறது!

கணவன்: 'என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா?' என்று நான்
உன்னைக் கேட்ட மறுநிமிடமே அதை நீ உணர்ந்திருக்க வேண்டும்!
-------------------------------------------------------
5
கணவன்: இன்று ஞாயிற்றுக்கிழமை. அதை நான் கொண்டாட வேண்டும்.
தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பதற்காக மூன்று டிக்கெட்டுகளை
வாங்கிக் கொண்டு வந்துள்ளேன்.

மனைவி: இரண்டு போதுமே? மூன்று எதற்கு?

கணவன்: ஒன்று உனக்கு, இரண்டு, உன் பெற்றோர்களுக்கு!
-------------------------------------------------------------
6

"என் மனைவியின் பிறந்த தினத்தை நினைவில் வைத்துக்கொள்ள,
மறக்கமுடியாத வழி ஏதாவது இருக்கிறதா?

"ஸிம்ப்பிள். ஒரு தடவை மறந்துவிடு. ஏற்படுகிற யுத்தத்தில், நீ
வாழ்நாள் முழுவதும் அதை நீ மறக்கவே மாட்டாய்!
-------------------------------------------------------------
இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது.
மொழியாக்கம் மட்டும் அடியேனுடையது.

இருக்கும் ஆறில் எது மிகவும் நன்றாக உள்ளது?

Lessons on yogas: Pancha Mahapurusha Yoga மாமனித யோகம்!

Posted: 11 May 2012 10:08 AM PDT


++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on yogas: Pancha Mahapurusha Yoga மாமனித யோகம்!


மாமனிதர் என்று சிலரைச் சொல்வோம். அதாவது He is a great man என்று சிலரைச் சொல்வோம்.


அதற்கான ஜாதக அமைப்பு என்ன?


பஞ்ச மகாபுருஷ யோகம்!
செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் ஒருவரின் ஜாதகத்தில் ஒட்டு மொத்தமாக வலுவாக இருந்தால் அது இந்த யோகத்தைக் கொடுக்கும்.


சார் இந்த ஐந்தில் 3 எனக்கு இருக்கிறது. ஆகவே இதில் பாதி எனக்குக் கிடைக்குமா என்று யாரும் கேட்காதீர்கள். இருந்தால் அந்த 5 கிரகங்களுமே வலுவாக இருக்க வேண்டும். இல்லை என்றால் இல்லை!


கிணற்றின் விட்டம் 5 அடி, 3 அடி மட்டும் தாண்டினால் போதுமா என்று பாருங்கள். 5 அடிகளையும் தாண்டினால் மட்டுமே, நீங்கள் கிணற்றின் மறுபக்கம் குதிக்க முடியும். இல்லையென்றால் கிணற்றிற்குள்ளேதான் விழுந்து எழுந்திரிக்க வேண்டும். இதுவும் அப்படித்தான்
------------------------------------------------------
வலு என்றால் என்ன? அந்தக் கிரகங்கள் வலிமையாக (powerful) இருந்து தனித்தனியாக சில யோகங்களைக் கொடுக்கும்.அந்த ஐந்து யோகங்களும் ஜாதகனுக்கு இருக்கும் நிலைமைதான் மகா புருஷ யோகம்.


யோகப் படங்களின் துவக்கத்தில் முதல் 5 பாடங்கள் அவற்றைப் பற்றியது. அதைக் கடைசி பெஞ்ச் சிகாமணிகளுக்காகச் சுருக்கி மீண்டும் ஒருமுறை கீழே கொடுத்துள்ளேன். அனைவரும் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
ருச்சகா யோகம்:
செவ்வாய் - செவ்வாயை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். செவ்வாய் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மகரராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
2
பத்ரா யோகம்:
புதன் - புதனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். புதன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கன்னிராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
3
ஹம்ஸ யோகம்:
குரு - குரு பகவானை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். குரு தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கடக ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
4
மாளவ்ய யோகம்:
சுக்கிரன் - சுக்கிரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சுக்கிரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மீன ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
5
சஷ்ய யோகம்:
சனி - சனீஷ்வரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சனீஷ்வரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று துலா இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
Planetary combinations formed by Mars, Mercury, Jupiter, Venus, and Saturn in their own sign or in exaltation, occupying a cardinal house. Each of these planets forms the yoga singly, and each of them has a separate name and effect. Ruchaka yoga is formed by such a placement of Mars, Bhadra by Mercury, Hamsa by Jupiter, Malavya by Venus, and Sasa Yoga by Saturn.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
பலன்:
இந்த யோகம் ஜாதகனுக்குத் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழிலிலும் உறவுகளிலும், அதீத மேன்மையைக் கொடுக்கும். ஜாதகன் பெயரும்,புகழும் பெற்றுத் திகழ்வான். நாடே அறிந்த மனிதனாக இருப்பான்.ஏராளமான சொத்தும், செல்வமும் அவனைத் தேடிவரும்!

Lessons on yogas: ஆதி யோகம்!

Posted: 11 May 2012 10:07 AM PDT



புதன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று சுபக் கிரகங்களும், ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 6, 7, 8 ஆம் வீடுகளில் இருந்தால், தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ இருந்தால், அது ஆதியோகம் எனப்படும். அந்த வீடுகள் ஒன்றில் அல்லது இரண்டில் அல்லது மூன்றிலுமே அவைகள் இருந்தாலும் அது இந்த யோகத்தைக் கொடுக்கும்!

பலன்: ஜாதகன் செல்வாக்குடன் இருப்பான். ஆரோக்கியத்துடனும், செல்வங்களுடனும் இருப்பான். நோய், எதிரிகள், பயம் என்று எந்த அவலமும் அவனை அனுகாது!

Adhi Yoga : This is caused if the benefic planets - Mercury, Jupiter and Venus - are situated in the 6th, 7th and 8th houses from the Moon. These planets should be present in any one, two or in all the above-mentioned houses. A native with this Yoga will be very influential, healthy and wealthy. He will possess no fear, disease or enemy.


"சார், அவற்றில் எனக்கு இரண்டு இருக்கிறது. பாதி யோகம் கிடக்குமா?" என்று யாரும் கேட்க வேண்டாம்! கிடைக்காது.

யானை என்று எழுதுவதற்குப் பதிலாகப் பூனை என்று எழுதிவிட்டேன். இரண்டிலுமே "னை" என்று இருப்பதால் பாதி மார்க் போடுங்கள் என்று சொல்வதைப் போன்றது அது!

Lesson on transit Rahu & Ketu: ராகு கேது பெயர்ச்சி!

Posted: 11 May 2012 09:59 AM PDT



ராகு மாதிரி அடிப்பவரும் இல்லை; கேது மாதிரி ஞானத்தைக் கெடுப்பவரும் இல்லை என்பார்கள்.

ராகு என்ன நம் விரோதியா? பேட்டை தாதாவா? அவராக வந்து அடிப்பதற்கு? பூர்வ புண்ணியப் பலன்களின் படி, எதைத் தரவேண்டுமோ, அதைத் தருவார். எங்கே அடிக்க வேண்டுமோ, அங்கே அடிப்பார். சிலரை அடிக்காமலும் விட்டுவிடுவார்.

சிலரைச் சும்மா தட்டுவார். சிலரை லத்தி வைத்துத் தட்டுவார். சிலரை நனைய வைத்து அடிப்பார். சிலரைத் தொங்க விட்டு அடிப்பார். அது அவரவர் வாங்கி வந்த வரத்தைப் பொறுத்து மாறுபடும்.ஜாதகத்தில் உள்ள பல நல்ல அம்சங்கள், நம்மை அடி வாங்காமல் பாதுகாக்கும். அல்லது வாங்கிய அடிகளுக்கு ஒத்தடம் கொடுத்து நம்மைத் தேற்றும்.

நம் ஜாதகத்தின் படி என்னென்ன பலாபலன்கள் உள்ளதோ - அதாவது நம் கர்மவினைப்படி என்ன பலன்கள் store ஆகியுள்ளதோ - அதைக் கொடுப்பது கிரகங்களின் பணி! அவ்வளவுதான். ஆகவே கிரகங்களின் பெயர்ச்சியைக் கண்டு பயப்பட வேண்டாம்.

ஒரு ரயில்வே ஸ்டேசனுக்குத் தினமும் பல ரயில்கள் வந்து செல்லும். இரண்டு அல்லது மூன்று திசைகளில் இருந்து வந்து செல்லும். அப்படி வரும் ரயில்களில் விரைவு ரயில்களும் இருக்கும், சாதாரணப் பயணிகள் ரயிலும் இருக்கும், சரக்கு ரயில்களும் இருக்கும். அந்த நிலைய மேலாளருக்கு அவற்றால் வேலைப் பளு இருந்தாலும், பழகிப்போயிருக்கும். கவலைப் பட மாட்டார். அவருக்கு அத்தனை வண்டிகளும் ஒன்றுதான். அவருடைய நிலைய எல்லையைத் தாண்டி அவற்றை அனுப்பி விட்டால் போதும், அவருடைய வேலை முடிந்து விடும். அவருக்கு பல நவீன சாதனங்களின் உதவிகள் இருக்கும், சில நிலையங்களில் இரு வழிப்பாதைக்கான தண்டவாளங்கள் இருக்கும். அப்படி இருப்பவைகள் அவருடைய வேலையை எளிமைப் படுத்திவிடும்.

அதுபோல நமது ஜாதகத்தில் அடிப்படை விஷயங்கள் வலுவாக இருந்தாலும், நல்ல தசா புத்தி என்னும் இருவழிப் பாதைகள் இருந்தாலும், இந்த வந்துபோகும் ரயில்களுக்காக (அதாவது பெயர்ச்சியில் வரும் கிரகங்களுக்காக) நாம் கவலைப்படத் தேவையில்லை!
++++++++++++++++++++++++++++++++++++++++++
அக்டோபர் மாதம் 27ஆ‌ம் தே‌தி செவ்வாய்க்கிழமை, காலை 9:15 மணிக்கு ராகு பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும், கேது பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும் இடம் பெயர்கிறார்கள். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் அந்த ராசிகளில் சஞ்சரிப்பார்கள். அதாவது இருப்பார்கள். அதை ஒட்டி 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் பலா பலன்களைச் சுருக்கமாகக் கீழே கொடுத்துள்ளேன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++
மற்ற கிரகங்கள் எல்லாம் கடிகாரச் சுற்றில் வலம் வரும். ராகுவும் கேதுவும் கடிகாரச் சுற்றிற்கு எதிர்ச் சுற்றில் வலம் வரும். இரண்டும் ஒரு முழுச்சுற்றைச் சுற்றி முடிக்க 18 ஆண்டு காலம் ஆகும்!

ராகு கேது பெயர்ச்சியால் நன்மை அடையவிருக்கும் ராசிகள்:
மேஷம், கடகம், சிம்மம் , துலாம், மகரம், கும்பம்

சற்று சிரமங்களை அனுபவிக்க இருக்கும் ராசிகள்:
ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு, மீனம்
-------------------------------------------------------
சிரமங்கள் என்பது, பண வரவு குறையலாம், செலவுகள் எகிறலாம். செய்யும் வேலையில் தடைகள் எதிர்ப்படலாம். அலைச்சல்கள் இருக்கலாம். தாமதங்கள் ஏற்பட்டு நம்முடைய பொறுமையைச் சோதிக்கலாம். உடல் உபாதைகள் ஏற்படலாம். மனைவி, உற்றார் உறனருடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். வம்பு வழக்குக்கள் உண்டாகலாம். நிலுவையில் இருக்கும் வழக்குகளில், தோல்விகள் ஏற்படலாம். இப்படிப் பலருக்கும் பலவிதமான வழிகளில் உபத்திரவங்கள் ஏற்படலாம்.

பரிகாரம்:
ராகு, கேது பகவானைத் துதிப்பதுதான் பரிகாரம்.

ராகுவிற்கான பரிகாரப் பாடல்:

அரவெனும் ராகு ஐயனே போற்றி
கரவாது அருள்வாய் கடும் துயர் போற்றி
இறவா இன்பம் எதிலும் வெற்றி
ராகு தேவே இறைவா போற்றி!

கேதுவிற்கான பரிகாரப் பாடல்:

கேது தேவே கீர்த்தி திருவே
பாதம் போற்றிபாவம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகளின்றி
கேது தேவா கேண்மையாய் ரட்சி

(பரிகாரப் பாடல் உபயம்: நன்றி தினமலர் நாளிதழ்)

இ‌ந்த ராகு, கேது பெயர்ச்சியினால் ஒவ்வொரு ராசிதாரரின் வாழ்விலும் ஏற்படக்கூடிய மாற்றங்கள், பாதிப்புகள் அதற்கான பரிகாரங்கள் ஆகியன ராசி வாரியாக தொகுத்து கீழே உள்ள தளங்களில் கொடுக்கப்பெற்றுள்ளது! விரிவான பெயர்ச்சிப் பொதுப்பலன்களுக்கான தளங்கள் அவைகள்! உங்கள் ராசிக்கான பகுதியைக் க்ளிக் செய்து, படித்து முழு விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள். அதற்கான சுட்டி கீழே உள்ளது.
----------------------------------------------------
இந்தப் பொதுப்பலன்களைப் பற்றி ஒரு விஷயம். அவைகள் பொதுவானவை அவ்வளவுதான். அவர்கள், பத்திரிக்கைகள் தங்கள் வாசகர்களுக்காகப் பொதுப் பலன்களை எழுதுகிறார்கள். நாமும் மாய்ந்து மாய்ந்து படிக்கிறோம். அது எப்படி நமக்குப் பொருந்தும்?

ராகுல் காந்திக்கும், நடிகை ரகசியாவிற்கும், கே.எஸ், ரவிகுமாருக்கும், நடிகர் சூரியாவிற்கும் அய்யம்பேட்டை ஆரோக்கியசாமிக்கும், தஞ்சாவூர் தமிழரசனுக்கும் ஒரே ராசி என்று வைத்துக் கொள்ளூங்கள், இந்தப் பொதுப் பலன்களின்படியா, அவர்கள் அனைவருக்கும் இன்ப, துன்பங்கள் வரப் போகின்றன. இல்லை!

110 கோடி மக்கள் வகுத்தல் 12 ராசிகள் = 9.16 கோடி மக்கள்
இந்த 9.16 கோடி மக்களுக்கும் எப்படிப் பலன் ஒருவிதமாகப் பொருந்தும்?

அவரவர்களின் ஜாதகப்படிதான் பலன்கள் அமையும்.
++++++++++++++++++++++++++++++++++++++++
1. உங்கள் ஜாதகத்தில் ஏகப்பட்ட யோகங்கள் இருந்து, அதற்கான தசாபுத்தி நடந்து
கொண்டிருந்தால், இந்தக் கோச்சாரங்கள் வழிவிட்டு விடும்.

2. நல்ல தசை அல்லது புத்தி நடந்து கொண்டிருந்தாலும் கோள்சாரங்கள்
பாதிப்பை ஏற்படுத்தாது.

சுருங்கச் சொன்னால், கோள்சாரத்தைவிட, தசை/புத்தி முக்கியம்.

இன்னொரு முக்கியமான விஷ்யம். அக்கிரகங்கள் இடம் மாறியுள்ள உங்கள் ராசியில் 30ம் அதற்கு மேற்பட்ட பரல்களும் இருக்குமாயின், இந்த மாற்றங்களால் உங்களுக்கு பாதிப்புக்கள் இருக்காது!

ஒரு சாலையில் முதலமைச்சர் வருகிறார். அவருக்கு முன், அவருடைய பைலட் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் வருகின்றன என்றால் மொத்த சாலையும் துடைக்கப்பட்டு, வழி ஏற்படுத்தப் பட்டிருக்கும் இல்லையா? ஏன் தப்பித்தவறி நீங்கள் சென்றாலும், வழி விட்டு ஒதுங்கி நிற்ப்பீர்கள் இல்லையா?
அதுபோலத்தான் இதுவும்.

Lesson on yogas: Bhaskara Yoga: பாஸ்கரா யோகம்

Posted: 11 May 2012 09:55 AM PDT


சிறு அதிர்வுகள், குலுக்கல்களுக்கெல்லாம் மனமொடிந்து போகாதீர்கள். வாழ்க்கை என்பது சாலை என்றால், எதிர்ப்படும் பிரச்சினைகள், நமது வேகத்தை மட்டுப் படுத்தி, விபத்து ஏற்படாமல் காக்கும் வேகக் குறைப்பான்கள் Speed Breakers

இன்றையப் பொழுது இனியதாகட்டும்!

(மின்னஞ்சலில் வந்தது! மொழிமாற்றம் மட்டும் அடியேனுடையது!)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson on yogas: Bhaskara Yoga: பாஸ்கரா யோகம்

இது ஒரு நல்ல யோகம். ஆனால் அரிதான யோகம். மூன்று நிலைப்பாடுகள் சம்பந்தப்பட்டுள்ளதால் அரிதானதாகத் தோன்றும்.

புதன், சூரியனுக்கு அடுத்த வீட்டிலும், சந்திரன், புதனுக்குப் பதினொன்றாம் வீட்டிலும், குரு சந்திரனுக்குக் கேந்திர வீட்டிலும் இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

பலன்: ஜாதகன் அதிகம் படித்தவன் அல்லது கற்றவன், வல்லவன், வலிமை மிக்கவன், துணிச்சலானவன். மதக்கோட்பாடுகளில் ஞானம் உள்ளவன். கணிதத்தில் தேர்ந்தவன். பாரம்பரிய இசையின் நுட்பங்களை அறிந்தவன்.
++++++++++++++++++++++++++++++++++++++++

இந்த யோகம் இருப்பவர்கள், தங்கள், ஜாதகத்தையும், புகைப்படத்தையும் அனுப்பலாம். அவர்களுக்காக தனிப்பதிவு ஒன்று போட்டுக் கலக்கி விடுகிறேன்.

இந்த அமைப்பில் பாதி இருப்பவர்கள், கேள்விகள் கேட்டு என்னைக் கலக்க வேண்டாம்!:-)))

Lesson on yoga: Amarak Yoga: அமரக் யோகம்!

Posted: 11 May 2012 09:53 AM PDT



அமரக் என்றால் பானி பூரி, பேல் பூரி போல ஏதோ தின்பொருள் - சாட் அயிட்டம் என்று நினைப்பவர்கள் பதிவை விட்டு விலகவும். அமரக் என்னும் வடமொழிச்சொல் ஒரு வித அணிகலனைக் குறிக்கும். மயில்பதக்கம் போன்ற தோற்றமுடைய அணிகலனாம்.

பதிவை முழுதாகப் படித்தால், அதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்.
ஏழாம் வீட்டதிபதி ஒன்பதாம் வீட்டிலும், ஒன்பதாம் வீட்டதிபதி ஏழாம் வீட்டிலும், இடம் மாறி அமர்ந்திக்கும் நிலைமையே இந்த அமரக் யோகத்தைக் குறிக்கும். மாறி அமர்ந்ததோடு அல்லாமல் வலுவாக வேறு இருக்க வேண்டுமாம். அதாவது ஆட்சி, அல்லது உச்சம் அல்லது அஷடகவர்க் கத்தில் 5ம் அல்லது மேற்பட்ட பரல்களையும் பெற்றிருக்க வேண்டும்

பலன்: ஏழாம் வீட்டோடும் பாக்கிய ஸ்தானத்தோடும் சம்பந்தப்பட்ட யோகம் இது. இந்த யோகம் உள்ள ஜாதகனுக்கு, டக்கராக மனைவி கிடைப்பாள். சினிமாவை வைத்து உதாரணம் சொல்ல விருப்பமில்லை. இதற்கு உதாரணம் சொன்னால், ராமனுக்கு ஒரு சீதை கிடைத்ததைப்போல அல்லது லெட்சுமணனுக்கு ஒரு ஊர்மிளா கிடைத்ததைப் போல அற்புதமான மனைவி கிடைப்பாள்.

அவளைப் பார்த்துப் பார்த்து ஜாதகன் மகிழலாம். வயதானா பிறகும் அருகில் வைத்துக் கொஞ்சலாம். 'உனக்காக நான், எனக்காக நீ' என்று வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். Made for each other என்று போடுகிறார்களே அப்படியொரு அம்சம் வாழ்க்கையில் இருக்கும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சார், எனக்கு இந்த அமைப்பு இருக்கிறது. ஆனால் ஒரு கிரகம் ஊற்றிக்கொண்டு விட்டது அதாவது, நீசமாகிவிட்டது - வக்கிரமாகிவிட்டது - அஸ்தனமாகிவிட்டது - கிரகயுத்ததில் உள்ளது - ஆகவே இதில் பாதி அம்சத்தோடாவது ஒரு மனையாள் கிடைப்பாளா? என்று யாரும் கேட்க வேண்டாம். ஜோதிட விதிகளை நமக்காக நாம் மாற்றிக்கொள்ள முடியாது. அதை மனதில் வையுங்கள். இருந்தாலும் சந்தோஷம். இல்லையென்றாலும் சந்தோஷம். நம் முகத்தை ஒரு முறை கண்ணாடியில் பார்த்து மனதைத் தேத்திக்கொள்ள வேண்டியதுதான்.

Week end posting: தர்மருக்கு ஏன் தெரியவில்லை?

Posted: 11 May 2012 09:50 AM PDT

++++++++++++++++++++++++++++++++++++++++++++
Week end posting: தர்மருக்கு ஏன் தெரியவில்லை?

"அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்களில் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்"
என்று கவியரசர் கண்ணதாசன் எப்போதும் சிலாகித்துச் சொல்லும் கண்ணன் எனும் மன்னன், ஒரு நாள், தர்மரை அழைத்துச் சொன்னார்:

"தர்மா, தீயவன் என்று நீ நினைக்கும் அல்லது பார்க்கும் ஒருவனைத் தேடிப் பிடித்து, இங்கே அழைத்துக் கொண்டு வா!"

அதை உடனே செய்து, கண்ணனை மகிழ்விக்க அவர் விரைந்தார்.

அதே போல துரியோதனனையும் அழைத்த கண்ணன் சொன்னார்:

"துரியோதனா, நல்லவன் என்று நீ நினைக்கும் அல்லது பார்க்கும் ஒருவனைத் தேடிப் பிடித்து, இங்கே அழைத்துக் கொண்டு வா!"

துரியோதனனும் அவ்வாறே செய்வதற்கு விரைந்தான்.

பரந்தாமன் சொன்னது காலை நேரத்தில். அன்று மாலை, விளக்கு வைக்கும்
நேரத்திற்குத் திரும்பி வந்த தர்மர் சொன்னார்:

"மாமா, தெரிந்த அத்தனை பேர்களையும் நினைத்துப் பார்த்துவிட்டேன். அதோடு
வெளியில் தேடியும் பார்த்து விட்டேன். ஒரு தீயவன் கூட என் கண்ணில் படவில்லை. நெஞ்சில் நினைவிற்கும் வரவில்லை"

புன்னகைத்த கண்ணன், அவரைப் பிறகு வரச் சொல்லி அனுப்பி விட்டார்.

சற்று நேரத்தில் அங்கே வந்த துரியோதனனும், அதையே சொன்னான். ஒரு நல்லவன் கூடக் கண்ணில் படவில்லை என்றான்.

புன்னகைத்த கண்ணன் மெல்லிய குரலில் சொன்னார்,"துரியோதனா, உன் தாய் மாமன் சகுனி, உனக்கு எவ்வளவு நல்ல காரியங்களைச் செய்திருக்கிறார். அவர்கூட உனக்கு நல்லவராகத் தெரியவில்லையா?"

துரியோதனன் வெட்கித் தலைகுனிந்தான்.

அடுத்து, தர்மரை அழைத்த பரந்தாமன் சொன்னார்," உங்களுக்குப் பல தீங்குகளைச் செய்த துரியோதனன், உனக்குத் தீயவனாகத் தெரியவில்லையா? உங்கள் அன்பிற்குப் பாத்திரமான பாஞ்சாலியின் துகிலை உரிய முற்பட்ட துச்சாதனன் உனக்குத் தீயவனாகத் தெரியவில்லையா?"

தர்மர் ஒன்றும் சொல்லாமல் திகைத்துப்போய் நின்றார்.

நடந்ததை முழுவதுமாகத் தர்மரிடம் சொன்ன பரந்தாமன், முத்தாய்ப்பாக இப்படிச்
சொன்னார்.

"நல்லவர்களுக்கு எல்லாமுமே நல்லதாகத்தான் தெரியும். தீயவர்களுக்கு எல்லாமுமே தீயதாகத்தான் தெரியும்!"

ஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது - ‌விள‌க்க‌ம்

Posted: 11 May 2012 08:50 AM PDT

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: ஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது என்றொரு பழமொழி இருக்கிறது. ஆவாரம் பூவினுடைய மகத்துவத்தை உணர்த்தக்கூடிய பழமொழி இது. இந்த ஆவாரம் பூவில் அத்தனை விசேஷங்கள் உள்ளது.

ஆவாரம் பூ, அதன் கொழுந்து இலைகளைப் பறித்து காயவைத்து, உரலில் இடித்து தூளாக்கி அதனை டீ போல குடிக்கலாம். தேநீர் போன்று ஆவாரம்பூ நீர் போட்டு குடித்தால் எல்லா விதமான நோய்களும் விலகுகிறது.

இதே ஆவாரம் பூவை புங்கை மர நிழலில் உலர்த்தி பதப்படுத்தும் தே‌நீ‌ர் போ‌‌ன்று அரு‌ந்து‌ம் போது‌ம் எல்லா நோய்களும் நீங்கிவிடும். அதனால், ஆவாரம் பூவை தேநீர் போன்று போட்டுக் குடித்தால் சாவே வராது என்று சொல்கிறார்கள். அதானால்தான், ஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது என்ற பழமொழி வந்தது.

Lessons on yogas: பாப கர்த்தாரி யோகம்!

Posted: 11 May 2012 08:49 AM PDT



தமிழில்: கத்திரி யோகம்!

கர்த்தாரி என்னும் வடமொழிச்சொல்லிற்கு வெட்டுக் கத்தி
என்று பெயர். அப்படியுள்ள இரண்டு கத்திகளை ஒன்று
சேர்த்தால் அது கத்திரிக்கோல் ஆகிவிடும்.

Kartari (Sanskrit) = chopper

பாபகர்த்தாரி யோகம் என்பது, கத்தரிக்குள் மாட்டிக்கொண்ட
யோகம் என்று வைத்துக்கொள்ளுங்கள். கத்திரிக்குள் (scissors)
மாட்டிக் கொண்டால் என்ன ஆகும்?

வெட்டுப்பட்டுப் போகும்.

வெட்டுப்படுதலில் தீயதும் நடக்கும். நல்லதும் நடக்கும்.

நல்லதா?

ஆமாம் சாமி துணி வெட்டுப்பட்டுதானே நீங்கள் அணிந்து
கொள்ளும் சட்டையாக மாறுகிறது?

ஆகவே இந்த யோகத்தில், அதிகமாகத் தீமையே உண்டு.
சில நேரங்களில், சில அமைப்புக்களால் நன்மையும் உண்டு.
+++++++++++++++++++++++++++++++++++++
எப்போது உண்டாகும்?

இரண்டு தீய கிரகங்கள் ஒரு வீட்டின் இரு பக்கமும் அல்லது
ஒருகிரகத்தின் இருபக்கமும் அமர்ந்திருந்தால் அது பாபகர்த்தாரி
யோகம் எனப்படும்!
It occurs when malefics enclose a planet or a house.

Kartari means scissors, and papa means sin.
This is also called hemmed in.
This yoga is caused by planets being placed around a certain house
and/or planet.
The most generally occurring scissors yoga is when two benefics
or malefics enclose a planet or a house.

பலன்: நடுவில் மாட்டிக்கொண்ட வீட்டின் பலன்கள் கெடும் அல்லது
பலன்கள் அநியாயத்திற்குத் தாமதமாகும்.
++++++++++++++++++++++++++++++++
உதாரணத்திற்கு, 7ஆம் வீட்டின் இருபுறமும் தீய கிரகங்கள்
இருந்தால், ஜாதகனின் திருமணம், தள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளிக்
கொண்டே போகும். ஜாதகத்தில் வேறு நல்ல அமைப்புக்கள்
இல்லாமலிருந்தால், திருமணமே நடக்காமல் போய்விடும் அபாயமும்
உண்டு. அப்படியே திருமணம் ஆகியிருந்தாலும், திருமண வாழ்க்கை
மகிழ்ச்சியில்லாமல் இருக்கும்.

இதே அமைப்பு 10ஆம் வீட்டிற்கு ஏற்பட்டாலும், அதாவது பத்தாம்
வீட்டின் இரு புறமும் தீய கிரகங்கள் இருந்தாலும், ஜாதகனுக்கு
வேலை கிடைக்காது. கிடைத்தாலும் திருப்தியிருக்காது. அவதியாக
இருக்கும்.

இந்த அமைப்பு ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும், அப்படியே
அந்த வீட்டிற்கான பலாபலன்கள் கெடும். அவை என்னவென்று
சம்பந்தப்பட்ட அந்த வீட்டை வைத்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

4 என்றால் கல்வி, 5 என்றால் குழந்தைபாக்கியம் இப்படி.....!
+++++++++++++++++++++++++++++++
இதே அமைப்பில் சிலருக்கு நன்மையும் கிடைக்கக்கூடும்!

அது என்ன?

ஒரு வீட்டின் இருபுறமும் அல்லது ஒரு கிரகத்தின் இருபுறமும்
சுபக் கிரகங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட அந்த வீட்டிற்கு
நன்மையான பலன்கள் அபரிதமாகக் கிடைக்கும்.

வெட்டுப்பட்ட துணி சட்டையாக உரு மாறுவதைப்போல என்று
வைத்துக் கொள்ளுங்கள்
===================================================
தீமைகளைச் செய்யக்கூடிய கிரகங்கள்:
சனி, செவ்வாய், ராகு, கேது & சூரியன்
The malefic planets are Saturn, Mars, Rahu, Ketu and Sun.

நன்மைகளைச் செய்யக்கூடிய கிரகங்கள்:
குரு, சந்திரன், சுக்கிரன் & புதன்
The benefic planets are Jupiter, Venus, and Mercury.
----------------------------------------------------
உதாரணங்கள்:

1. ரிஷபத்தில் சுக்கிரன். அதன் பின்னால் மேஷத்தில் சனி,
அதற்கு முன்னால் மிதுனத்தில் செவ்வாய் இருப்பதாக வைத்துக்
கொள்ளுங்கள். அது ரிஷப வீட்டிற்குப் பாப கர்த்தாரி யோகத்தைக்
கொடுக்கும். கொடுத்தால் என்ன ஆகும்? சுக்கிரனால் சரிவர
இயங்க முடியாது. ஜாதகனுக்கு உரிய பலனைத் தரமுடியாது.

ஜாதகன் காசு இருந்தும் பட்டினி, கல்யாணம் பண்ணியும்
பிரம்மச்சாரியாக இருப்பான். சுகங்களை அனுபவிக்க முடியாது.
(கத்திரியைக் கீழே வையுங்கள்: இது பொதுப்பலன்)

2. இதைப்போல ஐந்தாம் வீட்டின் இருபுறமும் இரு தீய கிரகங்கள்.
ஐந்தாம் வீட்டில் எந்தகிரகமும் இல்லை என்று வைத்துக்
கொள்ளுங்கள். இந்த அமைப்பு ஜாதகனின் குழந்தைகளைப்
பாதிக்கும். அதாவது ஜாதகன் தன்னுடைய குழந்தைகளால்
அவதிப் படுவான் அல்லது குழந்தை இல்லாமல் அவதிப்படுவான்
(எச்சரிக்கை: இதுவும் பொதுப்பலன்)

இதுபோல எழுதிக்கொண்டே போகலாம்.

முக்கியமான உதாரணத்தை மட்டும் சொல்லிவிட்டு, இன்றையப்
பாடத்தை நிறைவு செய்கிறேன்!

இரண்டு தீய கிரகங்களுக்கு இடையில் லக்கினம் மாட்டிக்கொண்டு
விட்டால், ஜாதகன் குணக்கேடு உடையவனாக இருப்பான். அதனால்
பல சிக்கல்களை அவன் எதிர்கொள்ள நேரிடும்.
+++++++++++++++++++++++++++++++
பதிவைப் படித்து விட்டு யாரும் தங்கள் ஜாதகத்துடன் இதை
இணைத்துக் கேள்விகள் கேட்க வேண்டாம்.
இது மேல் நிலைப் பாடம், ஆகவே உங்களுக்கு நீங்களே
பார்த்துக் கொள்ளுங்கள்.
பார்த்துத் தெரிந்து கொள்ள முடியாதவர்கள், முதலில்
பழைய பாடங்களைப் படித்துத் தேறுங்கள்.

உங்களுக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தந்து கொண்டிருக்கிறேன்.
அதை நினைவில் வையுங்கள்.
உங்களுக்காக வாத்தியாரை மீன் பிடித்துக் கொண்டுவரச்
சொல்லாதீர்கள்!

இன்றையத் தேதியில் வகுப்பறையில் 886 மாணவர்கள்
இருக்கிறீர்கள். அத்தனை பேர்களும் பயன்பெறும் வகையில்
பாடத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன்.
அதையும் மனதில் வையுங்கள்!

Lessons on Yogas: அஷ்டலெட்சுமி யோகம்!

Posted: 11 May 2012 08:48 AM PDT



அஷ்டலெட்சுமி யோகம் என்பது குரு கேந்திர வீடுகள் ஒன்றில்
இருந்து (அதாவது 1, 4, 7, 10ஆம் வீடுகள் ஒன்றில்), அத்துடன்
ஆறாம் வீட்டில் ராகுவும் இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

பலன்: ஜாதகனுக்கு தனிப்பட்ட பெயர், புகழ், வளர்ச்சி, உயர்ச்சி,
அமைதி, மகிழ்ச்சி, எதையும் அனுபவிக்கும் பாக்கியம் அனைத்தும்
கிடைக்கும்

Ashtalakshmi yoga is formed when Jupiter is in 1st,, 4th, 7th and 10th
house and Rahu in 6th house. Ashtalakshmi yoga will give the
individual name,fame, prosperity, and peaceful, enjoyment in life.

எட்டு மடங்கு யோகம் என்பார்கள்
Yoga for the Eightfold Prosperity
(Ashta Laksmi Yoga )

If the North Node ( Rahu ) is in the 6th And if Jupiter is angular
Then this Yoga is formed. This combination for Eightfold Prosperity !

இதைக்குறிப்பிடும் ஜோதிட ஸ்லோகம்:

சஷ்ட ஸ்தான கதே ராகு
லக்ன கேந்த்ர கதே குரு
அஷ்டலக்‌ஷ்மி சமயுக்தம்
மத்யவான் கீர்த்திமான் நர!

The sloka for Ashtalakshmi Yoga is this

Shashta Sthana Gathe Rahu ( Rahu in the 6th )
Lagna Kendra Gathe Guru ( Jup angular )
Ashtalakshmee Samayuktham
Madhyavan Keerthiman Nara.
+++++++++++++++++++++++++++++++++++++
எட்டு மடங்கு யோகம் என்பது அஷ்ட லெட்சுமிகளைக் குறிக்கும்
அவைகளைப் பற்றிய விவரம்:

தனலெட்சுமி - செல்வத்திற்கு
(Dhana Lakshmi - Wealth as prosperity)

தான்யலெட்சுமி - விளைச்சலுக்கு, விவசாயத்தின் மூலம் வளர்ச்சிக்கு!
(Dhanya Lakshmi - Agriculture as prosperity

தைரியலெட்சுமி - துணிச்சலுக்கு, தைரியத்திற்கு
Dhairya Lakshmi - Courage)

விஜயலெட்சுமி - வெற்றிக்கு
(Vijaya Laksmi - Victory)

ஆதி லெட்சுமி - சக்திக்கு
(Adi Laksmi - Power)

வித்யா லெட்சுமி - கல்விக்கு, கற்றலுக்கு
(Vidya Laksmi - Learning)

கஜலெட்சுமி - ஊக்கத்திற்கு, மன உறுதிக்கு
(Gaja Lakshmi Will Power)

சந்தானலெட்சுமி - குழந்தைச் செல்வத்திற்கு
(Santhana Lakshmi Children as prosperity)

The native born under this yoga, enjoys the Eightfold Prosperity. Rahu and
Jupiter should be powerful, however, to confer the full benefits of this
yoga.

கார்த்திகை தீபத்தின் சிறப்பு!

Posted: 11 May 2012 08:48 AM PDT



ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: கா‌ர்‌‌த்‌திகை தீபம், அது சாதாரண தீபமல்ல. ஏனென்றால் திருவண்ணாமலையில் ஏற்றக்கூடிய தீபம் மிகச் சிறப்பு மிக்க தீபம். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் ஏற்றக்கூடிய தீபம். கார்த்திகை மாதம் என்பதே ஒரு சிறப்பு மிக்க மாதம். ஏனென்றால், இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் நம்முடைய உடம்பில் உள்ள நாடி, நரம்புகளெல்லாம் சம ஓட்டத்தில் இருக்கும் என்று சொல்வார்கள். அப்படி நாடி நரம்புகள் சம ஓட்டத்தில் இருக்கும் போது தியானம் செய்யாதவர்களுக்கும் ஞானம் சித்தியாகும். அப்பொழுது இறைவன் ஒளிப்பிழம்பாக வெளிப்படுகிறான். இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் அண்ணாமலையார், எல்லாம் வல்ல ஆவுடையார் சிவனே ஒளிப்பிழம்பாக வெளிப்படுவதாக ஐதீகம்.



ரமணர் கார்த்திகை தீபத்தை பற்றி மிகப் பெருமையாகப் பேசுவார். திருவண்ணாமலையில் கணக்கிட முடியாத அளவிற்கு நவரத்தினங்களும், தங்கங்களும் கொட்டிக் கிடக்கிறது. இவ்வளவும் அந்த மலைக்கு கீழ் கொட்டிக் கிடக்கிறது. இதெல்லாம் ஒரு காலத்தில் வெளிப்படும். பிற்காலத்தில் அதையெல்லாம் பார்க்கப் போகிறார்கள். அதனால்தான் அந்த மலையைச் சுற்றினாலேயே அத்தனை இன்பம் கிடைக்கும் என்று சொல்வது. அந்த அளவிற்கு மிகப் பழமையான மலை. அதனால்தான் இறைவன் அங்கு வந்து ஒளிப்பிழம்பாக வெளிப்படுகிறார். உருவ வழிபாட்டையெல்லாம் கடந்து ஞானிகள் இறுதி நிலையை அடைவது அருட்பெரும் ஜோதி வழிபாடு. அதனால், ஜோதி வழிபாடான இந்த கார்த்திகை தீபம் என்பது எல்லா வகையிலும் சிறப்பானது.



இதில், பரணி தீபம் இருக்கிறது, கார்த்திகை தீபம் இருக்கிறது. பரணி தீபம் என்பது பொருள், செல்வம், சொத்து, சுகம், பதவி, பட்டம், புகழ் எல்லாவற்றையும் கொடுக்கக் கூடியது. கார்த்திகை தீபம் என்பது மோட்ச தீபம். இறைவனடி போதும், பொருள் வேண்டாம், அருள் வேண்டும் என்பது. நிதி வேண்டாம், கருணை நிதி வேண்டும் என்று இராமலிங்க அடிகளார் சொல்வதைப் போல கருணை நிதி கொடுக்கக் கூடியது கார்த்திகை தீபம்.



டிசம்பர் 8ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. 8ஆம் தேதி மாலை 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. எந்த தீபத்தைப் பார்க்கிறார்களோ இல்லையோ கார்த்திகை தீபத்தைப் பார்த்தாலே எல்லா வகையிலும் சிறப்புஉ‌ண்டாகு‌ம். எங்கு பார்த்தாலும் இருட்டாக இருக்கிறது. ஒளியை உள்ளுக்குள் அனுப்பினால், இதயத்திற்குள் ஒளி ஆற்றலை கொண்டு சென்றால், எல்லா வகையிலுமே நமக்கு நன்மை உண்டாகும். தவிர, ஒரு தெளிவு நிலை, தீர்க்க நிலை உண்டாகும். அதனால் கார்த்திகை தீபத்தை மட்டும் அனைவரும் கண்டு தரிசிக்க வேண்டும். அது எல்லா வகையிலும் சிறப்புதரும்.

தீபாவளி சிறப்புச் சிறுகதை: சொத்தும், சொந்தமும்!

Posted: 11 May 2012 08:46 AM PDT





தீபாவளி சிறப்புச் சிறுகதை: சொத்தும், சொந்தமும்!

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம் என்றாலும்,
சாத்தப்பனின் மனதில் இன்றைக்கும் அது பசுமையாக இருக்கிறது.

பெண் பார்த்துத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வுகளை மறக்க
முடியுமா என்ன?

பார்த்த முதல் பார்வையிலேயே, சாலாவைப் பிடித்துப் போய்விட,
தன் தாயாரின் எதிர்ப்பிற்கிடையே, பிடிவாதமாக இருந்து, அவளையே
மணந்து கொண்டான் சாத்தப்பன்.

"அப்பச்சி, பெண் அழகாகத்தான் இருக்கிறாள். ஆனால் அவளுடைய
நட்சத்திரம்தான் எனக்கு இசைவாக இல்லை" என்று தன் தாயார்
விருப்பமில்லாமல் பேசியபோது, அவர்களைச் சம்மதிக்க வைத்தது
பெரும்பாடாகப் போய்விட்டது.

"பூராடம் நூலாடாது. அதாவது பெண்ணின் கழுத்தில் அதிக நாள்
தாலி தங்காது" என்று எந்தப் பாவி சொன்னானோ, அதை அவன் தாயார்
கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்ணைக் கசக்கினார்கள்.

சாத்தப்பன் அப்போது உறுதியாகச் சொல்லிவிட்டான்." ஆத்தா, அவள்
மகாலெட்சுமி மாதிரி இருக்கிறாள். அவளோடு ஒரு வாரம் வாழ்ந்தாலும்
போதும். அதுதான் வாழ்க்கை. எனக்கு அவளையே பேசி முடியுங்கள்.
மணம் செய்து வையுங்கள். மற்றதையெல்லாம் நீங்கள் வணங்கும்
குன்றக்குடி முருகன் பார்த்துக் கொள்வான்."

அப்படியே நடந்தது. அதற்கு அவனுடைய அப்பச்சி சிங்காரம்
செட்டியாரும் உடந்தையாக இருந்தார்.

"இஞ்சே, நாட்டு நடப்புத் தெரியாம பேசாதே! நம்ம சமூகம் சின்ன சமூகம்,
அதுல உன் விருப்பத்துக்கும், அவன் விருப்பத்துக்கும் சேர்த்துப் பொண்ணு
பாக்கிறதுன்ன அது நடக்கிற காரியமா? அவன் நோக்கப்படியே விட்டுவிடு"
என்று சொல்லி , ஆச்சியைச் சம்மதிக்க வைத்தது அவர்தான்!

சாலாவின் கழுத்தில் இன்றுவரை நூல் ஆடிக்கொண்டுதான் இருக்கிறது.
அதோடு மட்டுமல்ல, சாத்தப்பன் - சாலா தம்பதியருக்கு இன்று 23 வயதில்
ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கும் அதே நட்சத்திரம். அதுதான்
காலதேவனின் திருவிளையாடல்!

பேத்தி பிறந்த சமயத்தில், சாத்தப்பனின் தாயார்தான் அதிகம் கவலைப்
பட்டார்கள். பிறந்த பிள்ளையின் நட்சத்திரம் பூராடமாக இருக்கிறதே
என்று கண் கலங்கினார்கள்.

அப்போது சாத்தப்பன் தன் தாயாரிடம் இப்படிச் சொன்னான்."ஆத்தா,
சாலாவின் அப்பச்சிக்கு ஒரு மாப்பிள்ளை கிடைத்ததைப்போல,
பிற்காலத்தில் எனக்கும் ஒரு மாப்பிள்ளை கிடைப்பான். அதற்கு நீ
இப்போதிருந்தே கவலைப்படாதே!"

சாத்தப்பன் மகள் மீனாட்சிக்குத் தகுந்த வரன் கிடைத்ததா?

தொடர்ந்து படியுங்கள்!

*****************************************************

சாத்தப்பனுக்குத் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில், வில்லியம்ஸ்
ரோட்டில் பெரிய வீடு. பூர்வீகச்சொத்து. சத்திரம் பேருந்து நிலையம்
அருகே பெரிய வணிக வளாகம். மாதம் நான்கு லட்ச ரூபாய் வாடகையாக
வந்து கொண்டிருக்கிறது. ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரி அருகேயும்
ஒரு பெரிய கட்டடம். அதிலிருந்தும் பெரும் தொகை வாடகையாக வந்து
கொண்டிருக்கிறது. பணம் இருக்கிறது என்பதற்காகச் சாத்தப்பனும்
சும்மா இருக்காமல், இந்தியாவின் தலை சிறந்த, மருந்து உற்பத்தி
செய்யும் பத்துக் கம்பெனிகளுக்கு சி & எஃப் ஏஜென்ட்டாக
வணிகம் செய்து கொண்டிருக்கிறான்.

தன்னுடைய பெற்றோர்களையும் கூடவே வைத்திருக்கிறான்.
வைத்திருக்கிறான் என்று சொல்வதைவிட, தனக்குத் திருமணமாகி
25 ஆண்டுகளாகியும், தனிக்குடித்தனம் போகாமல், பெற்றோர்கள்,
மனைவி, மக்கள் என்று கூட்டுக் குடும்பமாகவே அவன் இருந்து
கொண்டிருக்கிறான். வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும்.

அவனுக்கு முன்பாகப் பிறந்த சகோதரிகள் மூவரின் குடும்பங்களும்,
மணப்பாறை, குளித்தலை, தொட்டியம் என்று திருச்சியைச் சுற்றியுள்ள
பகுதிகளிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களும் பத்து
நாட்களுக்கு ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை என்று பெரிய
வீட்டிற்கு வந்து போவார்கள். உறவு முறைகள் எந்தப் பிரச்சினையும்
இல்லாமல் அன்பு மழையில் வளமாக இருந்தது.

ஆனால், அவர்கள் வீடுகளில் மீனாட்சிக்குத் தோதாக பையன்கள்
இல்லாததால், சாத்தப்பனுக்கு வெளியே வரன் தேடும் நிலைமை
ஏற்பட்டுள்ளது. அவனும் பணத்தைப் பற்றிக் கவலைப் படாமல், நல்ல
தோதில் ஒரு வரனைத் தேடிக் கொண்டிருக்கிறான்.

உடனே கிடைத்தால்தானே? ஒன்றிருந்தால் ஒன்றில்லை. சொந்த
ஊரில் தேடி ஒன்றும் அமையவில்லை. வெளியூர் என்றாலும் பரவாயில்லை
என்று தேடிக் கொண்டிருக்கிறான்.

"ஊருக்குக் கடைசி உலகம்பட்டி.காருக்குக் கடைசி கடியாபட்டி,
கோட்டைக்குக் கடைசி நாட்டரசன் கோட்டை,குடிகளில் கடைசி
கீழப்பூங்குடி என்று எல்லாம் தள்ளித் தள்ளியே வரன் வருகிறதே,
சாத்தப்பா, நம்மூருக்குப் பக்கமாக ஒன்றும் இல்லையே" என்று பெரிய
ஆச்சி சொல்வார்கள்.

அப்போது சாத்தப்பன், இப்படிப் பதில் சொல்வான்: "ஆத்தா, செட்டி
நாட்டில் உள்ள 75 ஊர்களும் ஒன்றுதான். ஊரில் என்ன இருக்கிறது?
திருச்சி நகரத்தார், சென்னை நகரத்தார், கோவை நகரத்தார் என்று
இப்போது இருக்கும் ஊர்களை வைத்தும் நகரத்தார்கள் அறியப்
படுகிறார்கள். நமக்கு நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் போதும்!"

அப்படியே தேடவும் செய்தான்.

****************************************************************

திருமணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் இளைஞர்களைப்
பொறுத்தவரை, முதல் நிபந்தனை, பெண் சிவந்த நிறமாக, அழகான
தோற்றத்துடன் இருக்க வேண்டும். மாநிறம் அல்லது கறுப்பாக
இருந்தாலும் களையான முகத்தோற்றத்துடன் இருக்க வேண்டும்.
ஆனால் தோற்றம் நன்றாக இருக்க வேண்டும். கவர்ச்சிகரமாக
இருக்க வேண்டும். இளம் பெண்களுக்கும் அதே நிபந்தனைதான்.

அடுத்து இருசாராரும் படித்த படிப்புகளுக்கு முக்கியத்துவம்
கொடுப்பார்கள். பொறியியல் படித்த பெண்கள், பொறியியல் படித்த
மாப்பிள்ளைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதே போல,
இரட்டை இஞ்சின் இழுக்கும் வாழ்க்கையை (அதாவது கணவன்,
மனைவி இருவரும் சம்பாதிக்கும் வாழ்க்கையை) விரும்பும் இளைஞர்கள்,
படித்து வேலைக்குச் செல்லும் பெண்களை விரும்புவார்கள்.

யாரும் குணத்திற்கு, முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கேட்டால்,
திருமணத்திற்குப் பிறகு அல்லவா அது தெரியவரும் என்பார்கள்.

தாய்மார்களைப் பொறுத்தவரை, எங்களுக்குப் பணத்தின் மேல் ஆசை
இல்லை. ஆனாலும் ஊர்ப்பெருமைக்காக, நல்ல தோதுடன் வரும்
பெண்தான் வேண்டும் என்பார்கள்.

தந்தைமார்களைப் பொறுத்தவரை, நல்ல குடும்பமாக இருக்க வேண்டும்
என்பார்கள். பாரம்பரியத்தில், பெயரில் சிறந்த குடும்பமாக இருக்க
வேண்டும் என்பார்கள். சொத்துள்ளவர்கள், சொத்துள்ள குடும்பமாகத்
தேடுவார்கள். கேட்டால் எங்கள் பெண்ணையும், நாங்கள் கொடுக்கும்
தோதையும் -அதாவது நகைகளையும் ஸ்ரீதனப் பணத்தையும் வைத்துக்
காப்பாற்றக் கூடிய குடும்பமாக வேண்டும் என்பார்கள்.

அப்படித்தான் சில நிபந்தனைகளை மனதில் வைத்துக் கொண்டு,
சாத்தப்பனும் தன் மகளுக்கு ஒரு மாப்பிள்ளையைத் தேடிக்கொண்டிருந்தான்.

ஒரு சமயம், அவனுடைய நண்பர் ஒருவர், இரண்டு வரன்களைப்
பற்றிய தகவல்களைக் கொடுத்ததோடு, உன் மனத்திருப்திக்கு,
அவர்களைப் பற்றி நன்கு விசாரித்துவிட்டு ஒரு முடிவிற்கு வா'
வென்றார்.

எப்படி விசாரிப்பது என்று இவன் கேட்டபோது, அவர் நல்ல யோசனை
ஒன்றைச் சொன்னார்.

"நீ அவர்களுடைய செட்டிநாட்டுக் கிராமத்திற்குப் போ. அவர்கள்
வீடு இருக்கும் தெருவில், அக்கம் பக்கத்தில், எதிரில் இருக்கும்
வீடுகளில் அவர்களைப் பற்றி விசாரி. பெண்ணைப் பெற்றவன்
அக்கறையுடன் வந்து விசாரிக்கிறான் என்கின்ற அனுதாபத்தில்
அனைவரும் உதவி செய்வார்கள். உனக்கும் ஒரு தெளிவு கிடைக்கும்."

அப்படியே செய்தான். ஆனால் அந்த இரண்டு இடங்களுமே
பிடிக்காமல் போய்விட்டது.

முகவரிகளைக் கொடுத்த நண்பர் கேட்டபோது, சாத்தப்பன்
இப்படிச் சொன்னான்.

"நீ கொடுத்த முதல் இடம் பிடிக்கவில்லை. அந்தப் பையனின்
அப்பச்சிக்குத் தொடுப்பு இருக்கிறதாம்."

"அப்பச்சி சீட்டாடுவார் என்பதற்காகப் பையனும் ஆடுவான் என்று
சொல்ல முடியாது. அப்பச்சிக்குத் தொடுப்பு இருப்பதால், பையனும்,
அப்படியே ஆசா பாசங்களுடன் வளர்ந்திருப்பான் என்று சொல்ல
முடியாது."

"இல்லை எனக்கு நெருடலாக இருந்தது. அதை விட்டு விட்டேன்"

"சரி, அடுத்தது என்ன ஆயிற்று?"

"அவர்கள் வீட்டின் கழிப்பறைகளைப் பூட்டி வைத்திருக்கிறார்கள்.
முகப்பு, பெட்டக சாலையில் இருக்கும் மின்சார ஸ்விட்ச் போர்டுகளுக்
கெல்லாம் மரப் பெட்டியடித்துப் பூட்டி வைத்திருக்கிறார்கள்."

"சில வீடுகளில் அப்படி இருக்கும். அதற்குக் காரணம் இருக்கிறது.
கழிப்பறையை உபயோகிப்பவர்கள், வேண்டும் அளவு தண்ணீர் ஊற்றி
சுத்தம் செய்துவிட்டுப் போவதில்லை. உடையவர்கள் உபயோகிப்பதற்கு,
அது தகுதியில்லாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது. அதனால்
பூட்டி வைத்திருப்பார்கள். அதனால் ஒன்றும் தவறில்லை. அதுபோல
பவர் கட் ஆகும் சமயத்தில் அதைக் கவனத்தில் கொண்டு, மின்
சாதனங்களை உபயோகிப்பவர்கள், சுவிட்சை அணைத்து விட்டுச்
செல்வதில்லை. அவர்கள் போன பிறகு - கரண்ட் வந்தவுடன் அவைகள்
மீண்டும் இயங்க ஆரம்பித்துவிடும். அதைத் தவிர்க்க உடையவர்கள்
பெட்டியடித்து, பூட்டுப் போட்டு வைத்திருப்பார்கள். அதிலும்
தவறில்லை. அதிலெல்லாம் குறை கண்டால் எப்படி சாத்தப்பா?"

"இல்லை. அதைக்கூட நான் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.
அதைவிடப் பெரிய கரைச்சல் ஒன்று இருக்கிறது.

"என்ன அது?"

"பொது வீட்டில் அவர்களுடைய பங்குப் பகுதிகள் மட்டும் பராமரிக்
கப்படமல், பல்லை இளித்துக்கொண்டு இருக்கிறது. மற்ற பகுதிகள்
பராமரிக்கப்பட்டு, பளபளப்புடன் இருக்கின்றன. இவர்கள் ஒத்து வந்து
அவர்களுடன் சேர்ந்து பராமரிப்பதில்லையாம். அதோடு, ஊருக்கு
வந்து போனால், ஊருக்கு வெளியே இருக்கும், தங்கள் தனி
பங்களாவில் தங்கி விட்டுப் போய் விடுவார்களாம். பொது வீட்டிற்கு
வந்து போவதில்லையாம். யாருடனும் சுமூகமான உறவு இல்லையாம்.
அந்த வீட்டிற்குள்ளேயே போய், வளவில் எதிர்ப்பங்கில் இருக்கும் பெரிய
ஆச்சியைக் கேட்டு விட்டேன். அடுத்தடுத்த வீடுகளிலும் கேட்டுவிட்டேன்.
அவர்களும் அதைத்தான் சொல்கிறார்கள். அவர்கள் வீட்டில் என்
பெண்ணைக் கொடுத்தால், என் பெண்ணிற்கு, கணவன் வழி சொத்துக்கள்
இருக்கும். ஆனால் சொந்தங்கள் இருக்காது. எது முக்கியம்
- நீயே சொல் - சொத்தா? சொந்தங்களா?"

"என்னைக் கேட்டால் இரண்டும் வேண்டும். சொத்தில்லாமல்
சொந்தங்களும் பயன்படாது. சொந்தங்களில்லா சொத்தும் பயன்படாது.
கவியரசர் அதைத்தான் இப்படிப் பாடிவைத்து விட்டுப்போனார்.
பானையிலே சோறிருந்தா, பூனைகளும் சொந்தமடா: சோதனையைப்
பங்கு வச்சா சொந்தமில்லலே, பந்தமில்லே!"

"இல்லை, வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வில், எதை எதிர்கொள்ள
நேரிடும் என்பதற்காகக் கவியரசர், அதை எழுதினார். ஆனால் உண்மையில்
பெண்ணிற்கு என்ன வேண்டும் என்பதை இன்னொரு பாட்டில் எழுதிவைத்தார்.
தாயாரின் சீதனமும், தம்பிமார் பெரும் பொருளும் மாமியார் வீடு வந்தால்
போதுமா? அது மான அபிமானங்களைக் காக்குமா? என்றார். பெண்ணிற்கு
அவளுடைய மான அபிமானங்களைக் காக்கக்கூடிய கணவனும்,
புகுந்த வீடும் அமைய வேண்டும். அதற்குத்தான் நானும் பாடுபட்டுத் தேடிக்
கொண்டிருக்கிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பழநிஅப்பன்
உதவி செய்வான்."

" ஆகா, உன் நம்பிக்கை வாழ்க! வளர்க!" என்று சொல்லிவிட்டு நண்பர்
போய்விட்டார்.

*****************************************************************
நேரம் வந்து விட்டால், "நான் வாரேன் தடுக்குப் போட, எங்க ஆத்தா
வர்றா பிள்ளையை எடுக்கிக் கொள்ள" என்று எல்லாம் கூடி வரும்
என்பார்கள்.

அப்படி சாத்தப்பனுக்கு எல்லாமே ஒரே வாரத்தில் கூடி வந்தது. ஒரு நல்ல
மாப்பிள்ளை அமைந்தது. அடுத்து வந்த மாதத்திலேயே திருமணமும்
சிறப்பாக நடந்து முடிந்தது.

மாப்பிள்ளை வீட்டாருக்கு பங்காளிகள் 370 புள்ளிகள். அப்பச்சி வழி,
ஆத்தாவழித் தாயபிள்ளைகள் 200 புள்ளிகள். நட்பு வட்டத்தில் 100க்கும்
மேற்பட்ட குடும்பங்கள் என்று மொத்தம் 1,000 பேர்களுக்கு மேல்
திருமணத்திற்கு வந்திருந்தார்கள். மாப்பிள்ளை வீட்டார் ஏற்பாடு செய்திருந்த
வாழ்த்தரங்கத்தில் பலரும் சிறப்பாகப் பேசினார்கள். அவர்கள் குடும்பத்தின்
பாச உணர்வை எடுத்துக்கூறிப் பாராட்டிப் பேசினார்கள்.

மாப்பிள்ளையுடன் பிறந்த சகோதரிகள் மூவர், மாப்பிள்ளையின்
அப்பச்சியுடன் பிறந்த சகோதரிகள் மூவர். ஆக மொத்தம் ஆறு பேர்களுக்கும்,
மாப்பிள்ளையின் தந்தையார்தான் முன்னின்று அவர்கள் அனைவரின்
திருமணத்தை நடத்தி வைத்ததைச் சொன்னார்கள். பந்த பாசங்களுக்கு
அவர்களுடைய குடும்பம் ஒரு உதாரணக் குடும்பம் என்று புகழ்ந்து பேசினார்கள்.

கதையின் நடுவில் வந்தாரே சாத்தப்பனின் நண்பர், அவருக்கு மிகவும்
மகிழ்ச்சி. மாப்பிள்ளையும், பெண்ணும் கும்பிட்டுக் கட்டிக்கொள்ளும்போது,
சொந்தங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டவர், மாலை, பெண் அழைப்பு
நிகழ்ச்சிக்குக் காரில் செல்லும்போது, சாத்தப்பனிடம் மெல்லிய குரலில்
சொன்னார்.

"உன் முயற்சி வீண் போகவில்லை, சாத்தப்பா, இறையருளால், அற்புதமான
குடும்பம் உனக்கு சம்பந்தப்புரமாக அமைந்துள்ளது! இத்தனை சொந்தங்களை
இதுவரை நான் பார்த்ததில்லை. அது ஒரு காரணத்திற்காகத்தான் இவர்களை
நீ தெரிவு செய்தாயா?"

"இல்லை. இன்னொரு முக்கிய காரணம் இருக்கிறது!" இது சாத்தப்பன்.

"என்ன அது?"

"கல்யாணம் பேசும்போது, என் மகளின் புகைப் படத்துடன், ஜாதகத்தையும்
கொடுத்தேன். படத்தை மட்டும் வாங்கிக் கொண்டவர்கள், ஜாதகத்தை வேண்டாம்
என்று சொல்லி விட்டார்கள். மனப் பொருத்தம் இருந்தால் போதும். மற்ற
பொருத்தங்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். ஜோதிடத்தைவிடப்
பெரியது ஒன்று இருக்கிறது. அதுதான் இறையருள். இறைவனின் மேல் முழு
நம்பிக்கை வைத்திருக்கும்போது, ஜோதிடம் எதற்கு? இறையருளை மீறி
ஜோதிடம் என்ன செய்துவிடப்போகிறது? என்றார்கள். நான் அசந்து போய்
விட்டேன். அவர்களுடைய அசாத்திய இறை நம்பிக்கைக்குத் தலை
வணங்குவத்தவிர வேறொன்றும் செய்யத் தெரியவில்லை எனக்கு. ஆகவே
என் மகளை அவர்கள் வீட்டில் கட்டுவதற்கு எந்தவிதத் தயக்கமுமின்றி
ஒப்புக்கொண்டேன்!"

தீவிர பக்தரான நண்பரின் கண்கள், உணர்ச்சிப் பிரவாகத்தில், பனித்துவிட்டன!

கார்த்திகை தீபத்தின் சிறப்பு!

Posted: 11 May 2012 08:44 AM PDT

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: கா‌ர்‌‌த்‌திகை தீபம், அது சாதாரண தீபமல்ல. ஏனென்றால் திருவண்ணாமலையில் ஏற்றக்கூடிய தீபம் மிகச் சிறப்பு மிக்க தீபம். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் ஏற்றக்கூடிய தீபம். கார்த்திகை மாதம் என்பதே ஒரு சிறப்பு மிக்க மாதம். ஏனென்றால், இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் நம்முடைய உடம்பில் உள்ள நாடி, நரம்புகளெல்லாம் சம ஓட்டத்தில் இருக்கும் என்று சொல்வார்கள். அப்படி நாடி நரம்புகள் சம ஓட்டத்தில் இருக்கும் போது தியானம் செய்யாதவர்களுக்கும் ஞானம் சித்தியாகும். அப்பொழுது இறைவன் ஒளிப்பிழம்பாக வெளிப்படுகிறான். இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் அண்ணாமலையார், எல்லாம் வல்ல ஆவுடையார் சிவனே ஒளிப்பிழம்பாக வெளிப்படுவதாக ஐதீகம். 

ரமணர் கார்த்திகை தீபத்தை பற்றி மிகப் பெருமையாகப் பேசுவார். திருவண்ணாமலையில் கணக்கிட முடியாத அளவிற்கு நவரத்தினங்களும், தங்கங்களும் கொட்டிக் கிடக்கிறது. இவ்வளவும் அந்த மலைக்கு கீழ் கொட்டிக் கிடக்கிறது. இதெல்லாம் ஒரு காலத்தில் வெளிப்படும். பிற்காலத்தில் அதையெல்லாம் பார்க்கப் போகிறார்கள். அதனால்தான் அந்த மலையைச் சுற்றினாலேயே அத்தனை இன்பம் கிடைக்கும் என்று சொல்வது. அந்த அளவிற்கு மிகப் பழமையான மலை. அதனால்தான் இறைவன் அங்கு வந்து ஒளிப்பிழம்பாக வெளிப்படுகிறார். உருவ வழிபாட்டையெல்லாம் கடந்து ஞானிகள் இறுதி நிலையை அடைவது அருட்பெரும் ஜோதி வழிபாடு. அதனால், ஜோதி வழிபாடான இந்த கார்த்திகை தீபம் என்பது எல்லா வகையிலும் சிறப்பானது. 

இதில், பரணி தீபம் இருக்கிறது, கார்த்திகை தீபம் இருக்கிறது. பரணி தீபம் என்பது பொருள், செல்வம், சொத்து, சுகம், பதவி, பட்டம், புகழ் எல்லாவற்றையும் கொடுக்கக் கூடியது. கார்த்திகை தீபம் என்பது மோட்ச தீபம். இறைவனடி போதும், பொருள் வேண்டாம், அருள் வேண்டும் என்பது. நிதி வேண்டாம், கருணை நிதி வேண்டும் என்று இராமலிங்க அடிகளார் சொல்வதைப் போல கருணை நிதி கொடுக்கக் கூடியது கார்த்திகை தீபம். 

டிசம்பர் 8ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. 8ஆம் தேதி மாலை 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. எந்த தீபத்தைப் பார்க்கிறார்களோ இல்லையோ கார்த்திகை தீபத்தைப் பார்த்தாலே எல்லா வகையிலும் சிறப்புஉ‌ண்டாகு‌ம். எங்கு பார்த்தாலும் இருட்டாக இருக்கிறது. ஒளியை உள்ளுக்குள் அனுப்பினால், இதயத்திற்குள் ஒளி ஆற்றலை கொண்டு சென்றால், எல்லா வகையிலுமே நமக்கு நன்மை உண்டாகும். தவிர, ஒரு தெளிவு நிலை, தீர்க்க நிலை உண்டாகும். அதனால் கார்த்திகை தீபத்தை மட்டும் அனைவரும் கண்டு தரிசிக்க வேண்டும். அது எல்லா வகையிலும் சிறப்புதரும்.

ஆர்வக்கோளாறு!

Posted: 11 May 2012 08:43 AM PDT

++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆர்வக்கோளாறு!

ஜோதிடம் கடலைவிட ஆழமானது. கற்பவர்களுக்குப் பல சிரமங்களை
அல்லது சிக்கல்களைக் கொடுக்ககூடியது.
Astrology is a deep and complicated science.
(difficult to analyze or understand)

ஜாதகத்தைப் பார்க்கும்போது நிறைய யோகங்கள் இருப்பதைப் போன்று
தோன்றும். ஆனால் ஜாதகனைப் பார்த்தால், களை இழந்து காணப்படுவான்.
அவன் ஜாதகத்தில் உள்ள முக்கியமான யோகங்கள் செல்லாமல் அதாவது
பயன் தராமல் போயிருக்கும்.

இருந்தால் பலன் தரவேண்டும்!

ஏன் தரவில்லை?

இருப்பதால், தரவேண்டும் என்பதில்லை. அதைத் தரவிடாமல் பல தடைகள்
ஜாதகத்திலேயே இருக்கலாம்.

ஆளைப் பார்த்தால் ஜம்மென்று ஜவான் போல இருப்பான். ஆனால் அவனை
மருத்துவ சோதனைக்கு உள்ளாக்கினால் தெரியும். அவன் உடம்பில் எத்தனை
ஓட்டைகள் இருக்கின்றன - எத்தனை வியாதிகள் இருக்கின்றன என்று
தெரியவரும்.

அதுபோல ஜாதகத்தையும் அலசினால், உள்ள குறைகள் தெரியும். அந்தக்
குறைகளை வைத்து, ஜாதகத்தில் முடங்கிப்போன கிரகங்களைத் தெரிந்து
கொள்ளலாம்.

முடங்கிப் போன அவைகளால் உரிய பலனை எப்படித் தரமுடியும்?

இன்றைய மின்னஞ்சல் பாடம் அதைப் பற்றியதுதான். அதாவது கிரகங்களின்
முடக்கடியைப் பற்றியது.

குறிப்பாக நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கிரக யுத்தத்தைப்
பற்றியும் அதில் எழுதியுள்ளேன். விரிவான பாடம் அது!

அது மேல்நிலைப் பாடம். ஆகவே மின்னஞ்சலில் அனுப்பபெற்றுள்ளது!

அனைவரும் படித்துப் பயன் பெறுங்கள்.
499 பேர்களுக்கு இன்று மின்னஞ்சலில் பாடத்தை அனுப்பிவிட்டேன்.
இன்னும் சிலருக்கு ஒரு நாள் கழித்து - அதாவது நாளைதான் வரும்
கூகுள் சர்வர் பிரச்சினை. ஒரு நாள் கோட்டா 500 மின்னஞ்சல்கள்
மட்டுமே. அதைப் புரிந்து கொண்டு இன்று கிடைக்காதவர்கள் ஒரு நாள்
பொறுமை காக்கவும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
செப்டம்பர் மாதம் - 29 இடுகைகள்
அக்டோபர் மாதம் 14 தேதிவரை - 13 இடுகைகள்
ஆக மொத்தம் தொடர்ந்து 42 இடுகைகள். அதற்கு வந்த பின்னூட்டங்கள்
அடியேன் எழுதிய பதில்கள். வகுப்பறை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
அதற்கு சந்தோஷப்படாமல், நிறைய கண்மணிகள் மின்னஞ்சல் பாடத்தைப்
பற்றிய கவலையிலேயே இருக்கிறார்கள். எங்கே? எங்கே? என்று எனக்கு
விடாது கேள்விக் கனைகள் - கடிதங்கள் மூலமாக!

பாடங்கள் விடுபட்டு விடக்கூடாதே என்பது அவர்களுடைய கவலை!

கவலைப் படாதீர்கள். அங்கே பாடத்தை அனுப்பினால், இங்கே வகுப்பறையில்
அறிவித்து விடுகிறேன்.

இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் எழுதிக் கொண்டிருக்க முடியாது.
அதைத்தான் இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் சவாரி செய்ய முடியாது
என்று எழுதுகிறேன்.

அதை உணருங்கள்!

யோகங்களைப் பற்றிய பாடங்கள் அனைத்தும் மேல்நிலைப் பாடங்கள்.
முதலில் அவற்றை மின்னஞ்சலில் நடத்தலாம் என்றிருந்தேன்.
வகுப்பறையில் நடத்தினால் பலரும் பயன்பெறுவார்கள் என்றுதான்
அதை மாற்றி, இங்கே எழுதுகிறேன்.

ஜோதிட நுட்பங்களும், அலசல்களும் மட்டுமே இனி மின்னஞ்சலில் வரும்!
மற்ற பாடங்கள் எல்லாம் இங்கேயே தொடரும்.

நான் முழு நேர எழுத்தாளனும் அல்ல!
முழு நேர ஜோதிடஆராய்ச்சியாலனும் அல்ல!
தொழில்முறை ஜோதிடனும் அல்ல!

பதிவுகளில் எழுதுவது ஒரு ஆர்வக்கோளாறில்!
அதையும் உணர வேண்டுகிறேன்!

கார்த்திகை தீபத்தின் சிறப்பு!

Posted: 11 May 2012 08:43 AM PDT

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: கா‌ர்‌‌த்‌திகை தீபம், அது சாதாரண தீபமல்ல. ஏனென்றால் திருவண்ணாமலையில் ஏற்றக்கூடிய தீபம் மிகச் சிறப்பு மிக்க தீபம். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் ஏற்றக்கூடிய தீபம். கார்த்திகை மாதம் என்பதே ஒரு சிறப்பு மிக்க மாதம். ஏனென்றால், இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் நம்முடைய உடம்பில் உள்ள நாடி, நரம்புகளெல்லாம் சம ஓட்டத்தில் இருக்கும் என்று சொல்வார்கள். அப்படி நாடி நரம்புகள் சம ஓட்டத்தில் இருக்கும் போது தியானம் செய்யாதவர்களுக்கும் ஞானம் சித்தியாகும். அப்பொழுது இறைவன் ஒளிப்பிழம்பாக வெளிப்படுகிறான். இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் அண்ணாமலையார், எல்லாம் வல்ல ஆவுடையார் சிவனே ஒளிப்பிழம்பாக வெளிப்படுவதாக ஐதீகம். 

ரமணர் கார்த்திகை தீபத்தை பற்றி மிகப் பெருமையாகப் பேசுவார். திருவண்ணாமலையில் கணக்கிட முடியாத அளவிற்கு நவரத்தினங்களும், தங்கங்களும் கொட்டிக் கிடக்கிறது. இவ்வளவும் அந்த மலைக்கு கீழ் கொட்டிக் கிடக்கிறது. இதெல்லாம் ஒரு காலத்தில் வெளிப்படும். பிற்காலத்தில் அதையெல்லாம் பார்க்கப் போகிறார்கள். அதனால்தான் அந்த மலையைச் சுற்றினாலேயே அத்தனை இன்பம் கிடைக்கும் என்று சொல்வது. அந்த அளவிற்கு மிகப் பழமையான மலை. அதனால்தான் இறைவன் அங்கு வந்து ஒளிப்பிழம்பாக வெளிப்படுகிறார். உருவ வழிபாட்டையெல்லாம் கடந்து ஞானிகள் இறுதி நிலையை அடைவது அருட்பெரும் ஜோதி வழிபாடு. அதனால், ஜோதி வழிபாடான இந்த கார்த்திகை தீபம் என்பது எல்லா வகையிலும் சிறப்பானது. 

இதில், பரணி தீபம் இருக்கிறது, கார்த்திகை தீபம் இருக்கிறது. பரணி தீபம் என்பது பொருள், செல்வம், சொத்து, சுகம், பதவி, பட்டம், புகழ் எல்லாவற்றையும் கொடுக்கக் கூடியது. கார்த்திகை தீபம் என்பது மோட்ச தீபம். இறைவனடி போதும், பொருள் வேண்டாம், அருள் வேண்டும் என்பது. நிதி வேண்டாம், கருணை நிதி வேண்டும் என்று இராமலிங்க அடிகளார் சொல்வதைப் போல கருணை நிதி கொடுக்கக் கூடியது கார்த்திகை தீபம். 

டிசம்பர் 8ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. 8ஆம் தேதி மாலை 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. எந்த தீபத்தைப் பார்க்கிறார்களோ இல்லையோ கார்த்திகை தீபத்தைப் பார்த்தாலே எல்லா வகையிலும் சிறப்புஉ‌ண்டாகு‌ம். எங்கு பார்த்தாலும் இருட்டாக இருக்கிறது. ஒளியை உள்ளுக்குள் அனுப்பினால், இதயத்திற்குள் ஒளி ஆற்றலை கொண்டு சென்றால், எல்லா வகையிலுமே நமக்கு நன்மை உண்டாகும். தவிர, ஒரு தெளிவு நிலை, தீர்க்க நிலை உண்டாகும். அதனால் கார்த்திகை தீபத்தை மட்டும் அனைவரும் கண்டு தரிசிக்க வேண்டும். அது எல்லா வகையிலும் சிறப்புதரும்.

வாழ்க்கை எனும் சதிராட்டம்!

Posted: 11 May 2012 08:42 AM PDT


வாழ்க்கையின் சதிராட்டத்தில் நமக்குக் கிடைக்கும் மூன்று நிலைப் பாடுகள்.
We have 3 stupid stages of life.....!!!

இளம் வயதில் (Teen age):
நேரம் இருக்கும் + தெம்பு இருக்கும் - ஆனால் கையில் காசு இருக்காது!
Have Time + Energy …but No Money

நடு வயதில் (Working Age)
கையில் காசு இருக்கும் + உடம்பில் தெம்பு இருக்கும் - ஆனால் நேரம் இருக்காது.
Have Money + Energy …but No Time

முதியவரான நிலையில் (Old age)
நேரம் இருக்கும் + பணம் இருக்கும் - ஆனால் உடம்பில் தெம்பு இருக்காது
Have Time + Money …but no Energy

---------------------------------------------
"என்ன சார், அவ்வளவுதானா? இன்று பாடம் இல்லையா?"

"ஏன் இது பாடமாகத் தெரியவில்லையா?"

"ஜோதிடப்பாடம் இல்லையா?"

"இல்லாமலா? மின்னஞ்சல் பாடமாக உள்ளது. அது மேல் நிலைப் பாடம்.
இங்கே வெளியிட்டால், பலரும், தங்கள் ஜாதகத்தை வைத்து,
அதோடு சம்பந்தப் படுத்திக் கேள்விகள் கேட்டு என்னைப் பிறாண்டி
எடுத்து விடுவார்கள்.அதனால்தான் இன்றைய பாடம் அங்கே!
ஜிமெயில் சர்வர் நாளொன்றிற்கு 500 மெயில்களுக்கு மேல் ஒத்துக் கொள்வதில்லை. அதனால் பாடம் முதல் க்ரூப்பிற்கு இன்றும், அடுத்த க்ரூப்பிற்கு நாளையும் வரும். பொறுத்திருந்து படிக்க வேண்டுகிறேன்"

யோகங்கள்: ”புத ஆதித்யா யோகம்”

Posted: 11 May 2012 08:33 AM PDT




யோகங்களைப் பற்றிய பாடம். எண்.9

புதனும், சூரியனும் ஒரு ராசியில் சேர்ந்திருந்தால் அது யோகத்தைக் கொடுக்கும்.
அந்த யோகத்தின் பெயர் புத ஆதித்ய யோகம்!
-------------------------------
பலன்:
ஜாதகன் அல்லது ஜாதகிக்கு இந்த யோகம் அதீத திறமைகளைக் கொடுக்கும்.
எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும்.
சமூகத்தில்/நட்பு வட்டாரங்களில் மதிப்பையும், மரியாதையையும் கொடுக்கும்.
This yoga will give lots of talent, success, honour and fame in society.
-------------------------------
எல்லோருக்கும் கொடுக்குமா?

கொடுக்காது.

ஏன் கொடுக்காது?

சூரிய வட்டத்தில், சூரியனுக்கு மிக அருகில், தொடர்ந்து சூரியனைக் கும்மியடிக்கும் கிரகம் புதன். ஆகவே பலருடைய ஜாதகத்தில்
இந்த யோகம் இருக்கும்.

Mercury is the first planet in the Solar System and is very close to the Sun.
It cannot be more than one sign away from the Sun in the rasi chart.
This yoga, therefore, appears in a lot of charts, but not all the charts can
have the benefits of this yoga.

யோகத்தைக் கொடுக்க வேண்டிய கிரகங்கள் வலுவாக இருந்தால் மட்டுமே
யோகத்திற்கான பலன்கள் கிடைக்கும்.

ஜாதகத்தில் புதனும், சூரியனும், இருவரில் ஒருவர், 6, 8, 12ஆம் வீடுகளில்
ஏதாவது ஒன்றிற்கு அதிபதி என்றால், யோக பலன்கள் இருக்காது.
அதுபோல அவர்கள் அமரும் வீடு, அவர்களுக்குப் பகை வீடு அல்லது
நீச வீடு என்றாலும் பலன் இருக்காது.
அவர்களுடன், சனி, ராகு, கேது போன்ற வில்லன்களில் ஒருவர் கூட்டாக
இருந்தாலும் யோக பலன் இருக்காது.

The Sun & Mercury should be placed well in a chart and also should not
themselves be badhakas for the chart
---------------------------------------------------------------------
சிம்மம் (சூரியனின் ஆட்சி வீடு)
மேஷம் (சூரியனின் உச்ச வீடு)
மிதுனம் (புதனின் ஆட்சி வீடு)
கன்னி (புதனின் ஆட்சி மற்றும் உச்ச வீடு)
ஆகிய 4 வீடுகளில் இந்த யோகம் அமைந்திருந்தால் அது பலனளிக்கும்!
மற்ற வீடுகளில்/ராசிகளில் இந்த யோகம் கலவையான (mixed result)
பலனைக் கொடுக்கும். அதாவது தண்ணீர் ஊற்றிய பால்
------------------------------------------------------------------------
மேஷ லக்கினக்காரர்களுக்குப் புதன் 3 & 6ஆம் வீட்டிற்கு அதிபதி.
அந்த லக்கினக்காரர்களுக்கு இந்த யோகம் சொல்லும்படியாகப் பலனளிக்காது

ரிஷப, சிம்ம, துலா & மகர லக்கினக்காரர்களுக்கு, இந்த யோகம் இருந்தால்
பலன் கிடைக்கும். தனுசு லக்கினக்காரர்களுக்கும் பலன் கிடைக்கும்
------------------------------------------------------------------------
புதன் சூரியனுடன் 6 பாகைக்குள் சேர்ந்திருந்தால் அஸ்தமனமாகிவிடும்.
அப்போது இந்த யோகம் கிடைக்காது.
அதுபோல புதன் வக்கிரகதியில் இருந்தாலும் இந்த யோகம் இல்லை!

சிலர் புதனுக்கு அஸ்தமனம் இல்லை என்பார்கள்.
அவர்களுக்கு இந்த யோகம் கிடைக்கப் பிரார்த்திப்போம்!

யோகங்கள்: ”சந்திரமங்கள’ யோகம்”

Posted: 11 May 2012 08:31 AM PDT




ஒரு ராசியில் சந்திரனும், செவ்வாயும் கூட்டணி போட்டு ஒன்றாக இருந்தால்
நன்றாகக் கவனியுங்கள் - ஒன்றாக இருந்தால் அது 'சந்திரமங்கள' யோகம்
எனப்படும்.

சிலர் அதைச் "சசிமங்கள" யோகம் என்றும் சொல்வார்கள். இரண்டும் ஒன்றுதான்

If Mars conjoins the Moon, this yoga is formed
Sasi Mangala Yoga - When mars and moon placed in same house.
The native's finance never gets drain. He will get finance help
when ever he needs.
--------------------------------------------------------------------------------
யோகத்தின் பலன் என்ன?

இந்த யோகத்திற்குப் பலனும் உண்டு. பக்க விளைவும் உண்டு.

பலன் எந்த அளவிற்குக் கிடைக்குமோ, அந்த அளவிற்குப்
பக்க விளைவும் உண்டு.

ஜாதகனின் நிதி நிலைமை என்றும் வற்றாமல் இருக்கும். எந்த வழியிலாவது
பண வரவு இருக்கும். ஜாதகன் வசதியானவன். செல்வந்தன்.

அதே நேரத்தில் மனகாரகன் சந்திரனுடன், தீய கிரகமான செவ்வாய் சேருவதால்
ஜாதகனுக்குப் பலவிதமான மனப்போராட்டங்களும் கூடவே இருக்கும். அதுதான்
பக்க விளைவு. That is called as the side effects of this yoga

Chandra Mangala Yoga acts as a powerful factor in establishing one's
financial worth and at the same time the native will suffer with mental
worries

The combination is good if it occurs in the 2nd, 9th, 10th or 11th house.
------------------------------------------------------------------------
இது உபரிச் செய்தி:

சந்திரன் ரிஷபத்தில் இருந்து (அங்கே அவர் உச்சம்) செவ்வாய் விருச்சிகத்தில்
இருந்தாலும் (அது அவருக்கு ஆட்சி வீடு) அதுபோல மகரத்தில் செவ்வாய்
இருந்து (அங்கே அவர் உச்சம்) கடகத்தில் சந்திரன் இருந்தாலும் (அது
அவருக்கு ஆட்சி வீடு) அந்த அமைப்பு உன்னதமானது. இந்த அமைப்பில்
சேர்க்கையில் அல்லாமல் பார்வையில் இந்த இரண்டு கிரகங்களும் ஜாதகனுக்கு
மிக நல்ல பலன்களைக் கொடுக்கும். ஜாதகனின் நிதி நிலைமை வற்றாமல்
ஊற்றாக இருக்கும்! அதாவது சசி மங்கள யோகத்திற்கு ஈடான பலன் அதில்
உண்டு!

The Moon in Taurus and Mars in Scorpio - The Moon in Cancer and Mars in
Capricorn are excellent positions for the native of a horoscope!
--------------------------------------------------------------------
சந்திரனும், செவ்வாயும் ஒன்றாகச் சேர்ந்து எந்த வீட்டில் இருந்தாலும்
அது சந்திரமங்கள யோகம் தான்.

சந்திரன் சாத்வீகமான கிரகம். அதனுடன் சேரும் தீய கிரகம் கீழ்க்கண்ட
பாதிப்புக்களை உண்டாக்கும்:

1. ஜாதகனின் மனநிலையைப் பாதிக்கும்.

2. குணத்தை மாற்றும். உணர்ச்சிவசப்படச் செய்யும். தன் நிலையை மறக்க
வைக்கும். செவ்வாய் மனதில் ஒருவித அலையை ஏற்படுத்தும்
Mars will create the tide within the mind, and influence the mental and
emotional aptitude. Fighting mind and spirit, self protective, desire to rule
and influence others, irritated and aggressive

3. ஜாதகனின் இந்தக் குண மாற்றங்களால், அவனுடைய மனைவி, குடும்பம்,
மற்றும் உறவுகள் எல்லாமும் பாதிப்படையும்.

சந்திரன் சுபக்கிரகம். நல்லவற்றை வழங்கக்கூடிய கிரகம். நான்காம்
இடத்திற்குக் காரகன். செவ்வாயும் ஒருவிதத்தில் வழங்கக்கூடியவன். நான்காம்
இடத்திற்கான, இடம், சொத்துக்களை (Landed Properties) வழங்கக்கூடியவன்
அவன்தான் சாமிகளா! இருவருமே வழங்கக்கூடிய வள்ளல்கள். ஆகவே
ஜாதகனுக்குச் செல்வத்தை நிச்சயம் வழங்குவார்கள்.

அதே நேரத்தில் சில தீமைகளும், அவர்களின் சேர்க்கையால்
உண்டாகும். அதுதான் அந்தப் பக்க விளைவு (side effects)

Chandra Mangala Yoga gives wealth and also troubles to
the native of the horoscope!

எப்போது வழங்குவார்கள்?

இருவரும் தங்கள் தசை/புத்திகளில்/அந்தர தசைகளில் வழங்குவார்கள்
------------------------------------------------------------------
அந்த யோகமும், பாதிப்பும் எந்த அளவிற்கு இருக்கும்?

இருவரும் அமரும் வீட்டைப் பொறுத்துப் பலன்களும் வித்தியாசப்படும்!

The main difference lies in the house where chandra and mangala are placed.
There are different infleunces on the houses:

1,3,5,6,8,9,10 ஆம் வீடுகளில் செவ்வாய்க்கு வலிமை அதிகம்
2,4,7,11, 12ஆம் வீடுகளில் சந்திரனுக்கு வலிமை அதிகம்

ஆகவே அந்த இரண்டு கிரகங்கள் சேரும்போது இயற்கையாகவே அது எந்த வீடோ,
அந்த வீட்டை-அதாவது முதல் வரியில் குறிப்பிட்டுள்ள வீடுகளில் செவ்வாயின்
அதிகாரம் மேலோங்கி இருக்கும். இரண்டாவது வரியில் குறிப்பிட்டுள்ள வீடுகளில்
சந்திரனின் அதிகாரம் மிகுந்து இருக்கும். சந்திரனின் அதிகாரம் உள்ள வீட்டை
உடைய ஜாதகனுக்குத் தீய பலன்கள் குறைவாக இருக்கும்.

இது பொது விதி! உச்சம், நீசம், வக்கிரம், அஸ்தமனம், அஷ்டகவர்க்கப் பரல்கள்
6, 8, 12ஆம் இடங்கள் ஆகியவற்றை வைத்துப் பலன்கள் மாறுபடும். ஆகவே
பொறுமையாக அலசுங்கள். அலசுகிற வேகத்தில் துணியைக் கிழித்து
விடாதீர்கள்:-))))))

Therefore, each house will decide which planet among two, Moon or Mars
dominates the Yoga. IF Moon is stronger, satvic qualities dominate the Yoga,
and bad shades of Yogas are lesser. Mars turns calms down due to the
blessings of Benefic Moon

If Mars dominates the Yoga, Mars is very angry and can create serious
problems (apart from other good effects given by this Yoga)
-----------------------------------------------------------------------
வீடுகள் வாரியாகப் பலன்கள் கீழே கொடுக்கப்பாட்டுள்ளன!

கீழே உள்ளது அனைத்தும் பொதுப் பலன்கள்!
கீழே உள்ளது அனைத்தும் பொதுப் பலன்கள்!
கீழே உள்ளது அனைத்தும் பொதுப் பலன்கள்!
---------------------------------------------------
1. லக்கினத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால், அது மேஷ லக்கினம்,
விருச்சிக லக்கினமாக இருந்தால் அல்லது கடக லக்கினமாக இருந்தால்
நல்லது. ஜாதகனுக்கு எல்லாம் நன்மையே. இல்லையென்றால் ஜாதகனுக்கு
சுகக் கேடு. ஆரோக்கியக் கேடு.

2. இரண்டாம் வீட்டில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால், ஜாதகனின்
வாழ்க்கை வளமாகவும் செல்வம் மிக்கதாகவும் இருக்கும். அதோடு இதய
நோய் உடையவனாகவும், அடிக்கடி விபத்துக்களில் சிக்கிக் கொள்பவனாகவும்
இருப்பான்.

3. மூன்றாம் வீட்டில் இந்த அமைப்பு இருந்தால், ஜாதகன் அம்சமாக இருப்பான்.
அம்சம் என்றால் என்ன வென்று தெரியுமல்லவா? எதையும் ரசிப்பவனாக
இருப்பான். வாழ்க்கை ரசனைகள் மிகுந்து இருக்கும். அதே நேரத்தில் மனதில்
கவலைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் குறைவிருக்காது. சிலரது (நன்றாகக்
கவனிக்கவும்) சிலர் தனது துணையை இளம் வயதிலேயே பறிகொடுக்க
நேரிடும்!

4. நான்காம் இடத்தில் இந்த அமைப்பு இருந்தால், ஜாதகன் மிகுந்த அதிர்ஷ்டசாலி!
ஜாதகனுக்கு எதையும் மோதிப் பார்க்கும் குணம் இருக்காது. வருவது வரட்டும்
என்று மேலோட்டமாக இருப்பான். வலிமையான மனம் உடையவனாக இருப்பான். இளைய உடன் பிறப்புக்களுடனான உறவு சுகமாக இருக்காது!

5. ஐந்தாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால், ஜாதகனைப் பரபரப்பான
ஆசாமியாகவும், தகறாறு செய்யும் மனப்பான்மையுடையவனாகவும் மாற்றிவிடும். ஆனால் ஜாதகன் அதிகாரமுள்ளவனாக இருப்பான்.

6. ஆறாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு, ஜாதகனுக்குப் பலவிதமான
பிரச்சினைகளைக் கொடுக்கும். எதிரிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். சிலருக்கு
அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும்.

7. ஏழாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு செல்வம், புகழ் இரண்டையும் கொடுக்கும். அதே நேரத்தில் திருமண வாழ்வில் கசப்பை உண்டாக்கி விடும். கசப்பு எந்த அளவு வேண்டுமென்றாலும் இருக்கலாம். உறவுகளை ஓரங்கட்டிவிடும். சிலருக்கு இதயநோய்கள் உண்டாகும். ஒரு ஆறுதல்
ஜாதகன் எதிரிகளைத் துவம்சம் செய்து விடுவான். சிலருக்கு இரண்டு
தடவைகள் திருமணம் நடக்கலாம்.

8. எட்டாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு மிகவும் மோசமானது. அழிவை
ஏற்படுத்தக் கூடியது. திருமண வாழ்வில் முறிவை ஏற்படுத்தும். அல்லது கணவன்/மனைவி இருவரில் ஒருவரைக் காலி செய்துவிடும்.சிலருக்கு
முதல் திருமணம் ரத்தாகி, இரண்டாவது திருமணம் நடக்கலாம். சிலருக்கு அதீதமான பணத்தைக் கொடுக்கும். அதே நேரத்தில் ஆயுளைக் குறைத்து
விடும் அபாயமும் உண்டு!

9. ஒன்பதாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு சக்தி, அதிகாரம், வலிமை,
வளமை என்று எல்லாவற்றையும் கொடுக்கும், அதே நேரத்தில் ஜாதகனின் ஆயுளைக் குறைத்து விடும் அபாயமும் உண்டு! அல்லது ஜாதகன் விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயமும் உண்டு!

10. பத்தாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால் ஜாதகனுக்கு அதீத வருமானம் உடைய வேலை அல்லது தொழில் அமையும். சிலருக்கு உடல் வலிமை இருக்கும். மன வலிமை இருக்காது.

11. பதினொன்றாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால் ஜாதகனுக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். சமூக சேவையில் ஜாதகன் பெயர்
எடுப்பான். "காசுமேல காசு வந்து கொட்டுகிற நேரம் இது; ராஜலக்‌ஷ்மி
வந்து கதவைத் தட்டுகிற நேரம் இது" என்று பாடிக் கொண்டிருப்பான்.
பணம் கொட்டும். சிலரின் ஜாதகத்தில் செவ்வாய்க்கு இந்த இடம் உகந்த
இடம் இல்லையென்றால், ஜாதகன் ஆர்வக்குறைவாக இருப்பான்.
ஆனால் பணம் மட்டும் மழையாகக் கொட்டும்!

12. பன்னிரெண்டாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால் தீமைகளே அதிகம். இடம் என்ன சாதாரணமான இடமா என்ன? விரைய ஸ்தானம்
(House of Loss) உடல் உபத்திரவம், மன உபத்திரவம், கடன், அதிர்ஷ்டமின்மை, உறவுகளின் இழப்பு, நண்பர்களின் பிரிவு என்று எல்லாமுமே படுத்துவதாக இருக்கும்.

கவலைப் படாதீர்கள், இந்த அமைப்பு உங்களுக்கு இருந்தால், நீங்கள் ஞானியாகி
விடலாம். ஞானியாகிவிட்டால் அதைவிட மேன்மையான நிலை எதுவும் இல்லை! திருவண்ணாமலைக்கெல்லாம் போக வேண்டாம். வீட்டில் இருந்தபடியே ஞானியாகிவிடலாம்!:-)))))

ஜோதிடப்பாடம்: யோகங்கள்- கஜகேசரி யோகம்!

Posted: 11 May 2012 08:30 AM PDT





மிகச்சிறந்த யோகங்களில் கஜகேசரி யோகமும் ஒன்று. கஜம் என்றால் யானை,
கேசரி என்றால் சிங்கம். யானையின் தோற்றத்தையும், சிங்கத்தின் பலத்தையும்
கொடுக்கக்கூடிய யோகம் கஜகேசரி யோகம்.

பெருந்தன்மை, புத்திசாலித்தனம். கெளரவம், பெயர், புகழ், செல்வாக்கு,
சொல்வாக்கு, ஆகியவற்றை ஜாதகனுக்கு இந்த யோகம் கொடுக்கும்.

This yoga gives the native, qualities of a both animals - magnanimous and
intelligent as an elephant and majestic as a lion. Such people would earn
a lot of name and fame in life. A quality of generosity would also be
associated with them.

மொத்தம் உள்ள மூன்று சுபக்கிரகங்களில் இரண்டு சுபக்கிரகங்கள் -
குரு'வும், சந்திரனும் சம்பந்தப்பட்டு ஏற்படுவதால் இந்த யோகத்திற்கு அந்தப்
பெயர் வழங்கப்பட்டிருக்கலாம்.

இந்த யோகம் எப்போது உண்டாகும்?

குரு பகவானும், சந்திரனும் ஒருவருடைய ஜாதகத்தில் அவர்கள் இருவரும்
ஒருவருக்கொருவர் 1, 4, 7,10 ஆகிய கேந்திர வீடுகளில் அமர்ந்திருந்தால்
இந்த யோகம் உண்டாகும்.

Gaja Kesari Yoga is caused by Moon and Jupiter coming together in a chart
by being in Kendras (1st, 4th, 7th, or 10th) from each other.

இந்த யோகம் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரிப் பலன் உண்டா?

இல்லை!

அந்த இரு கிரகங்களும் ஜாதகத்தில் அமைந்திருக்கும் தன்மையைப்
பொறுத்துப் பலன் மாறுபடும்.

அவைகள் நீசம் பெறாமலும், பகை வீட்டில் இல்லாமலும், வக்கிரம் பெறாமலும்,
அஸ்தமனமாகாமலும், தீய கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வை பெறாமலும்
இருக்க வேண்டும். அதோடு அவைகளில் இரண்டில் ஒன்று ஜாதகத்தில்
6, 8,12 ஆம் வீடுகளில் உட்கார்ந்திருக்கக்கூடாது.

This yoga depends on the strength, position and house lordship of the two planets
involved - Moon and Jupiter.

The yoga would also be best shown in life if both these planets are in their
exaltation sign and are at an angle not just from each other but from Lagna as well.
Neechabhanga Chandra and Guru would be considered good. The two planets
would need to be benefic in the charts and suitably disposed to the lord of
Lagna as well. They themselves should be free from any negative aspect,
particularly Rahu and Saturn should not be associated with Moon.

This yoga would not work if Jupiter is in regression - as benefic planets become
considerably weaker when they are retrograde. Moon and Jupiter should not be in
neech awastha or in combust state. If that is the case, the effects of this yoga
are nullified and the person would lead a fairly ordinary life.

அப்படி இருந்தால் என்ன அளவில் (ratio) பலன்?

அப்படி இருந்தால் என்ன அளவில் (ratio) பலன் என்பதைத் தருமியிடம்தான்
கேட்கவேண்டும்! அவர்தான் திருவிளையாடல் தருமி!

எப்போது பலன் கிடைக்கும்?

குரு மற்றும் சந்திரனின் மகா தசைகளிலும், புத்திகளிலும் பலன்கள் கிடைக்கும்.

ஜோதிடப் பாடம்: யோகங்கள்: பரிவர்த்தனை யோகம்

Posted: 11 May 2012 08:29 AM PDT

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடப் பாடம்: யோகங்கள்: பரிவர்த்தனை யோகம்

இரண்டு கிரகங்கள் இடம் மாறி ஒன்றின் வீட்டில் மற்றொன்று அமர்வது
(interchange of places) பரிவர்த்தனை யோகம் ஆகும்!

"Parivartthanai means Planet-A occupies the sign of Planet-B while
simultaneously Planet-B occupies the sign of Planet-A.
Example: Moon occupies Jupiter's (குரு) house and Jupiter (குரு)
occupies moon's house
++++++++++++++++++++++++++++++++++++++

இந்த யோகத்தால் இடம் மாறி அமர்ந்த கிரகங்களின் சக்தியும்/வலிமையும்
அதிகமாகும்.அதேபோல இடம் மாறிய ராசிகளின் சக்தியும், வலிமையும்
அதிகமாகும். அந்தப் பரிவர்த்தனை ஜாதகனின் வாழ்க்கையில் பல வெற்றிகள்
ஏற்பட வழிவகுக்கும்.

Parivartthanai yoga will always increase the power of the two houses
involved. It will also increase the power of the two graha involved.
Increasing the power of these two bhava and these two graha may be
helpful for the success of the native.

அது பொது விதி. சில பரிவர்த்தனைகளால் தீமைகள் அதிகமாக ஏற்படும்
நிலைமையும் உண்டாகும்

எப்படி?

வாருங்கள். அதைப்பார்ப்போம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
அந்த மாற்றத்திற்குக் காரணமான கிரகங்கள் தீய கிரகங்களாக இருந்தாலும்,
மாறிய இடங்கள் தீய இடங்களாக (inimical places) இருந்தாலும்,
அதாவது 6, 8, 12ஆம் வீடுகளாக இருந்தாலும், ஜாதகனுக்குத் தீய பலன்கள்தான்
அதிகமாகக் கிடைக்கும்

ஆகவே பரிவர்த்தனை யோகம் உள்ளது என்றவுடன், யாரும் காலரைத் தூக்கி
விட்டுக் கொள்ள வேண்டாம்.

If the bhava or the graha are inauspicious, the parivartthanai yoga may
increase negative results.
++++++++++++++++++++++++++++++++++++++++++
பரிவத்தனைக்கு உள்ளான கிரகங்கள், சுபக்கிரகங்களாக இருந்தால், (benefics)
ஜாதகனுக்கு அதீத நன்மைகள் கிடைக்கும்.

பரிவத்தனைக்கு உள்ளான கிரகங்கள், அசுபக்கிரகங்களாக இருந்தால், (melefics)
ஜாதகன் அதீத தீமைகளையே சந்திக்க நேரிடும்.

If the graha involved are natural benefics; the benefits will be more
for which those grahas are concerned.

If the exchanged graha are natural malefics; results may be more difficult
than the graha might separately produce.
++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்தப் பரிவர்த்தனை யோகத்தின் மூன்று விதமான உட்பிரிவுகள்.

1.தைன்ய பரிவர்த்தனை.
தீய இடங்களான 6,8, 12ஆம் வீடுகளுக்கு ஆட்சிக் கிரகம் (Ruler of 6,8, or
12th houses) பரிவர்த்தனை பெற்றால், பரிவர்த்தனையான அடுத்த கிரகம்
பாதிப்பிற்கு உள்ளாகும்.

This parivarththanai leads to a wicked nature, persistent trouble from
opponents and ill health. The dushthana lord will be strengthened by its
interaction with the other non-dushthana partner.
________________________________________
2. கஹல பரிவர்த்தனை!

மூன்றாம் இடத்து அதிபதி பரிவர்த்தனைக்கு உள்ளாவது.
பரிவர்த்தனைக்கு உள்ளாகும் கிரகம், 1,2,4,5,7,9,10, 11 ஆம் இடத்து
அதிபதியானால் இந்த யோகம் நன்மை பயக்கும்.
மூன்றாம் இட அதிபதியின் துணிச்சலை மாறி அமரும் கிரகம் பெறும்.
தன்னுடைய செயல்களை நிறைவேற்றிக் கொள்ளும் துணிச்சல்
ஜாதகனுக்குக் கிடைக்கும்.
Kahala yoga will energize the talking, scheming, competing mind to go out
and get stuff done.
---------------------------------------------
3. மஹா பரிவர்த்தனை யோகம்.Maha Parivartamsha Yoga

1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆம் இடத்து அதிபதிகளில் எவரேனும் இருவர் அல்லது
இருவருக்கு மேற்பட்டவர்கள் இடம் மாறி அமரும்போது இந்த யோகம் உண்டாகும். ஜாதகனுக்கு, சொத்து, சுகம், அஸ்தஸ்து, மரியாதை, உடல்
நலம், பதவி, அதிகாரம் என்று சம்பந்தப் பட்ட வீடுகளுக்கு ஏற்பக் கிடைக்கும்.

When the lords of 1, 2, 4, 5, 7, 9, 10, or 11 get exchange of signs,
then it is called as Maha Parivarththanai Yoga
Result: This yoga promises wealth, status, and physical enjoyments,
plus beneficial influences from the houses involved.
++++++++++++++++++++++++++++++++++++++
பரிவர்த்தனைக்கும், பார்வைக்கும் உள்ள வேறுபாடு.

தீய கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்க்கும்போது தீமைகள் அதிகமாகும்.
நல்ல கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்க்கும்போது நன்மைகள்
அதிகமாகும்.

உதாரணத்திற்கு சனியையும், செவ்வாயையும் எடுத்துக் கொள்வோம்.

இரண்டும், 180 பாகைகள், 90/270 பாகைகளில் (4/10 கோணங்களில்)
ஒன்றை ஒன்று பார்க்கும். அதாவது ஜதகத்தில் ஒன்றின் பார்வையில் மற்றொன்று இருக்கும். அதனால் ஜாதகனுக்கு, அதீத கோப உணர்வும், மூர்க்கத்தனமும் இருக்கும். ஜாதகன் தன்னுடைய வாழ்வின் பாதி
நன்மைகளை அந்தக் குணத்தாலாயே இழக்க நேரிடும்.

ஆனால் அதே நேரத்தில் சனியும், செவ்வாயும் ஒன்றிற்கொன்று பரிவர்த்தனையாகி நின்றால் சனியால் ஒரு ஒழுங்குமுறையும்,
செவ்வாயால் சாதிக்கும் தன்மையும் உண்டாகும்.
---------------------------------------------------------------------
2ஆம் அதிபதியும், 11ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகனுக்குப்
பணம் கொட்டும். செல்வங்கள் சேரும். பணத்தை வைத்துக் கொண்டு என்ன
செய்வது என்று குழம்பும் நிலை ஏற்படும். வாழ்க்கை, வசதிகளும்,
மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும்.

6ஆம் அதிபதியும், 11ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன்
தன் சொத்துக்களை, செல்வங்களை இழக்க நேரிடும்.

2ஆம் அதிபதியும், 9ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன்
மகிழ்ச்சி உள்ளவனாகவும், அதிர்ஷ்டம் உள்ளவனாகவும் இருப்பான். சொத்துக்களை உடையவனாகவும் இருப்பான். வேதங்களைக்
கற்றவனாகவும், அதிபுத்திசாலியாகவும் விளங்குவான்

1ஆம் அதிபதியும், 5ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன்
புகழ்பெற்று விளங்குவான். மகிழ்ச்சி நிரம்பியவனாக இருப்பான்.

1ஆம் அதிபதியும், 10ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன்
அரசில், அல்லது அரசியலில், உயர் பதவியைப் பெற்று உயர்வான
நிலைக்கு வருவான்.

9ஆம் அதிபதியும், 10ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகனுக்கு
அந்தஸ்து, அதிகாரம், புகழ், என்று எல்லாமும் தேடிவரும். மிகவும் உயர்ந்த
அமைப்பு இது. இதற்கு தர்ம கர்மாதிபதி யோகம் என்கின்ற பெயரும் உண்டு!
This type of parivarththanai yoga will confer high position, reputation,
fameand power.

Shukra-Kuja exchange
If Venus and Mars exchange their divisions, the female will go after other males.
If the Moon be simultaneously in the 7th house, she will join others with consent
of her husband. (எச்சரிக்கை: இது பொது விதி)

அக்கிரமம். பெண்களுக்கு மட்டும்தான் மேலே குறிப்பிட்டுள்ள விதியா?
ஆண்களுக்கு இல்லையா?

எந்த விதிகளும் இல்லாமலேயே, ஆண்களில் பலர், காமுகர்கள்தான்:-)))))

பல கடுமையான நோய்கள் வந்துவிட்டால் (இருதய நோய்கள், மார்புப்புற்று நோய்கள்) இந்தப் பரிவர்த்தனை யோகம் இருந்தால், அவர்களுக்கு வந்த வேகத்தில் அந்த நோய்கள் குணமாகிவிடும்.
________________________________________
இந்தப் பரிவர்த்தனை யோகத்திற்கு உதாரணமாகச் சொல்லப்படும் ஜாதகம்
மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையார்
அவர்களின் ஜாதகம்.

அதை உங்களுக்கு அறியத்தந்திருக்கிறேன். கீழே உள்ளது.
அவர்களுடைய ஜாதகத்தில் ஆறு கிரகங்கள் பரிவர்த்தனையாகி உள்ளன.

ஒரு ஜோடி பரிவர்த்தனை என்பது இரண்டு உச்சங்களுக்குச் சமம். 3ஜோடி
பரிவர்த்தனை என்பது ஆறு கிரகங்கள் உச்சமானதற்குச் சமம் என்று
எடுத்துக்கொள்ளலாம். இந்த பரிவர்த்தனைகளால் அவர் பல நன்மைகளையும்
பெற்றார். பல தீமைகளையும் பெற்றார்.

இளம் வயதில் விதவையானதும், இளம் வயது மகனை, விமான விபத்தில் பறி
கொடுத்ததும் (1980) தீமைகளில் முக்கியமானவை

Indira GANDHI, born on November 19, 1917 at 11:11 PM in Allahabad

1 & 7ஆம் வீடுகளில் சந்திரனும், சனியும் பரிவர்த்தனை.
2 & 5ஆம் வீடுகளில் சூரியனும், செவ்வாயும் பரிவர்த்தனை.
6 & 11ஆம் வீடுகளில் குருவும், சுக்கிரனும் பரிவர்த்தனை.

ஜோதிடப் பாடம்: யோகங்கள் - பகுதி 5

Posted: 11 May 2012 08:27 AM PDT

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடப் பாடம்: யோகங்கள் - பகுதி 5

சஷ்ய யோகம்:

சனி - சனீஷ்வரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.
சனீஷ்வரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில்
உச்சம் பெற்று துலா இருந்தாலும் அல்லது ஜாதகனின்
கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
------------------------------------------------------
வகுப்பறை புத்திசிகாமணி!:
"சார், சனி நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?"
"இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!"
-------------------------------------------------------
என்ன பலன்?
ஜாதகன் சக்தியுள்ளவன். வலிமையுள்ளவன். எல்லாவிதத்திலும்
வலிமையுள்ளவன். கண்டிப்பானவன். எதற்கும் வளைந்து கொடுக்காமல்
தன் கொள்கைகளில், செயல்களில் கண்டிப்பாக இருப்பவன்.
அதிகாரம் மிக்கவன். தன் குடும்பத்தில், தொழிலில், செயல்களில்
அதிகாரம் மிக்கவன்

BearShare Download Accelerato​r மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

Posted: 11 May 2012 08:26 AM PDT

இணையப் பாவனையானது இன்றைய உலகை ஆக்கிரமித்திருக்கும் வேளையில், இணையத்தை பயன்மிகு ரீதியில் பயன்படுத்த பல்வேறு மென்பொருட்கள் உருவாக்கப்பட்டு வெளி வருகின்றன.

அவற்றின் அடிப்படையில் இணையத்தளங்களிலிருந்து கோப்புக்களை தடையின்றி, வேகமாகவும் தரவிறக்கம் செய்வதற்கென பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.

எனினும் தற்போது பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய BearShare Download Accelerator எனும் மென்பொருள் அறிமுகமாகியுள்ளது.

5.7 MB அளவைக் கொண்ட இந்த BearShare Download Accelerator மென்பொருளின் மூலம் தரவிறக்கம் முடிந்தவுடன் கணணியை Shut down செய்தல், குறித்த இடைவெளிகளில் தரவிறக்கம் செய்தல் போன்ற அம்சங்களும் காணப்படுகின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜோதிடப் பாடம்: யோகங்கள் - பகுதி 4

Posted: 11 May 2012 08:25 AM PDT

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடப் பாடம்: யோகங்கள் - பகுதி 4

மாளவ்ய யோகம்:

சுக்கிரன் - சுக்கிரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.
சுக்கிரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில்
உச்சம் பெற்று மீன ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின்
கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
------------------------------------------------------
வகுப்பறை புத்திசிகாமணி!:
"சார், சுக்கிரன் நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?"
"இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!"
-------------------------------------------------------
என்ன பலன்?
ஜாதகன் வாழ்க்கையை மிகவும் ரசித்து வாழ்பவன்.
நல்ல மனைவி அமைவாள். பிரச்சினை இல்லாத மனைவி
அமைவாள். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்
தர்ம, நியாயங்களில் ஜாதகன் பற்றுடையவனாக இருப்பான்.
உங்கள் மொழியில் சொன்னால் அவற்றில் பிடிப்பு
உடையவானாக இருப்பான்.
செல்வமுடையவனாக, வசதிகள் உடையவனாக இருப்பான்.

வேறு அமைப்புக்களால் நல்ல மனைவி அமையாவிட்டாலும்,
ஜாதகன் வாழ்க்கையை, ரசித்து வாழ்பவனாக இருப்பான்.
Marriage is only a part of the life.Not the whole life
Please keep that in your mind!
மொத்தத்தில் ஜாதகன் ரசனை உள்ளவன்.
அவனை எல்லோரும் விரும்புகிறார்களோ இல்லையோ,
அவன் எல்லோரையும் விரும்புவான்!