I tamil web

I tamil web


ஆச்சரியத்தில் ஆழ்த்தும் உலகின் பயணப் பாதைகள்! (வீடியோ இணைப்பு)

Posted: 25 Apr 2012 05:09 AM PDT


போக்குவரத்திற்காக உலகில் தரை, கடல், ஆகாய மார்க்கங்கள் காணப்படுகின்றன. இவற்றில் தரை மார்க்கப் பயணப்பாதையை ஓரளவிற்கு எம்மால் ஊகிக்க முடியும். ஆனால் கடல் மற்றும் ஆகாய மார்க்கத்தை எளிதில் ஊகிக்க முடியாது.


தற்போது உலகளாவிய பயணப்பாதைகளை விபரிக்கும் முகமாக அனிமேசன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.



ஆறறிவு என்பதற்காக இப்படியெல்லாம் சிந்திப்பார்களா? (வீடியோ இணைப்பு)

Posted: 25 Apr 2012 01:02 AM PDT

பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பதைப் போல மனிதர்களின் சிந்தனையும் ஆளுக்காள் வேறுபட்டுக் காணப்படுகின்றது என்பது என்வோ உண்மைதான். அதற்காக இப்பயெல்லாமா சிந்திக்கிறது பாருங்கோ? நீங்களே சொல்லுங்கோ?...

இப்படியும் முட்டை உடைக்க முடியுமாம்! ஹா ஹா ஹா! (வீடியோ இணைப்பு)

Posted: 25 Apr 2012 12:55 AM PDT

ஆம்லட் போடுவதற்கு பயன்படுத்தும் முட்டையை கட்டாயம் உடைத்தே ஆகவேண்டும். ஆனால் நமக்குத் தான் முட்டை உடைப்பது புதுப்பழக்கம் ஆச்சே! என்ன செய்யலாம்? ம்.... யோசிக்காம காணொளியைப் பாருங்க.

மரதனில் கலந்துகொண்ட மாது நெரிசலில் சிக்கி மரணம்! (படங்கள் இணைப்பு)

Posted: 25 Apr 2012 12:49 AM PDT


லண்டனில் நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் திடீரென்று மயங்கி விழுந்த கிளாரா ஸ்கொயர்ஸ் என்ற 30 வயது பெண் மரணம் அடைந்தார். தற்போது இந்த பெண்ணிற்காக பலரும் நிதி திரட்டி வருகின்றனர், இதற்காக பலரும் நன்கொடை அளித்துள்ளனர்.இந்த நிதித்தொகை £20000 ற்கு மேல் திரளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிளாராவின் தாயார் சில்லா கடந்த 24 ஆண்டுகளாக சமூக சேவைகள் செய்து வந்தார்.


எனவே தற்போது திரட்டப்படும் நிதித் தொகை, அவரது குடும்பத்தினரின் சம்மதத்தோடு பொதுப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என்று இந்த ஒலிம்பிக் போட்டியை நடத்திய கேத்தரின் கூறியுள்ளார்.இதுகுறித்து கிளாராவின் தோழி நிக்கோலா ஷார்ட் கூறுகையில், கிளாரா சமூகப் பணிகளில் அதிகம் ஆர்வம் கொண்டவர், தங்களுக்கெல்லாம் ஒரு தூண்டுதலாக இருந்தார், எல்லோருடைய வாழ்க்கையிலும் அன்பையும், மகிழ்ச்சியையும் கொண்டு வந்தார்.


அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்று வருத்தத்துடன் கூறினார். கடந்த 1981ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மரதன் ஓட்டப் போட்டியில் இதுவரை 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.





சும்மா இருந்த தவளையை உசுப்பேத்தி மனிதனாக மாற்றிவிட்டார்கள் பாருங்கள்! (வீடியோ இணைப்பு)

Posted: 24 Apr 2012 06:11 PM PDT


தவளையில் இருந்து தோன்றியவன் மனிதன் என்கிற கருத்தை சில விஞ்ஞானிகள் கொண்டு இருக்கின்றனர். இக்கருத்து உண்மையாக இருக்குமா? என்று சிந்திக்க வைக்கிறது இத்தவளை.கட்டு ஒன்றில் இத்தவளை மனிதர்களைப் போல ரொம்ப ஜாலியாக அமர்ந்து இருக்கின்றது.


உண்மையிலேயே இது மிகவும் வித்தியாசமான தோற்றப்பாடுதான். இப்படி ஒரு காட்சி முன்பு ஒரு முறையும் எவராலும் பார்க்கப்பட்டு இருக்கவே இல்லை. எதிர்பார்த்து இராத விதமாகதான் இத்தவளையை படங்கள் பிடிக்க முடிந்து இருக்கின்றது.இணைய உலகத்தில் இந்நாட்களில் அதிகம் பேசப்படுகின்ற விடயங்களில் ஒன்றாக மாறி உள்ளது தவளை ஒன்று. இது சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத் தள பாவனையாளர்களால் பெரிதும் பார்க்கப்பட்டு வருகின்றன.

பெண்ணைக் கவர்ந்திழுந்த நெடுஞ்சாலை! (வீடியோ, படங்கள் இணைப்பு)

Posted: 24 Apr 2012 06:06 PM PDT


பெண் ஒருவர் நெடுஞ்சாலையில் கால்நடையாகப் பயணித்துக்கொண்டிருந்த சமயம் திடீரென மாயமாகியுள்ளார். சற்று நேரம் கழித்துப்பார்த்தால் பாதையின் நடுவே ஒரு ஓட்டைபோட்டுக்கொண்டு வெளியில் வந்தார். இச்சுவாஸ்யமான சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது.


அதாவது பாதையில் காணப்பட்ட குறைபாடு காரணமாக குறித்த பெண் நடந்து சென்றுகொண்டிருந்த பகுதி புதைந்து விட்டது இதனால் அக்குழிக்குள் விழுந்துவிட்டார் அப் பெண்மணி.






மயிர்க்கூச்செறியும் விபத்து! (வீடியோ, படங்கள் இணைப்பு)

Posted: 24 Apr 2012 06:06 PM PDT


அவுஸ்திரேலியாவின் மெல்போர்ண் நகரில் இடம்பெற்ற கார்ப் பந்தயப் போட்டியின் போது 63 வயதான பிரய்ன் ரெயிலர் என்பவர் பயணித்த கார் ஆனது கட்டுப்பாட்டை இழந்ததனால் விபத்திற்கு உள்ளானது.


மணிக்கு 100 மைல் வேகத்தில் சென்ற இக்கார் விபத்திற்குள்ளானதால் பார்வையளார்கள் பதட்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.






நாய்க்கும் காதலில் தோல்வியா? (வீடியோ இணைப்பு)

Posted: 24 Apr 2012 06:06 PM PDT

வீட்டில் வளர்க்கப்படும் நாய் ஒன்று தனது பழையை நிலையில் இருந்து மிகவும் நொந்து நொந்து உருகி இறக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. மரண வாசலில் நின்ற இந்த நாயை RSPCA என்ற மருத்துவ நிலையம் காப்பாற்றியுள்ளது.