I tamil web |
- பெண்ணின் நிர்வாணக் காட்சியினால் தாய்லாந்து பாராளுமன்றத்தில் பரபரப்பு! (வீடியோ இணைப்பு)
- பேய் எனும் பீதியில் உறைந்த தென்னிலங்கை! (வீடியோ இணைப்பு)
- குழந்தையின் முகத்தில் சிறுநீர் அபிஷேகம் செய்த தந்தை கைது! (வீடியோ இணைப்பு)
- நூலிடை ஆடையணிந்து பஷன்சோவில் கலக்கிய நட்சத்திரம்! (படங்கள் இணைப்பு)
- இசைப்புயலுக்கே சவால்விடும் நாய்க்குட்டி! (படங்கள், வீடியோ இணைப்பு)
| பெண்ணின் நிர்வாணக் காட்சியினால் தாய்லாந்து பாராளுமன்றத்தில் பரபரப்பு! (வீடியோ இணைப்பு) Posted: 24 Apr 2012 08:57 AM PDT அண்மையில் தாய்லாந்து நாடாளுமன்றத்தில் மிகவும் பரபரப்பாக விவாதம் ஒன்று நடத்தப்பட்டு கொண்டிருந்தபோது அங்கு உள்ள திரையில் திடீரென அரை நிர்வாண கோலத்தில் பெண் ஒருவர் அழையா விருந்தாளியாக தோன்றி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அரசமைப்பு சட்டத்தின் திருத்தம் ஒன்றின் மீது காரசாரமாக விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. எம்.பி ஒருவர் உரையாற்றிக் கொண்டு இருந்தார். நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு இருந்த இராட்சத திரையில் அப்போது திடீரென அரை நிர்வாண பெண்ணின் உருவம் மிக நெருக்கமாக தோன்றியது. எம். பி உரையாற்றுகினற காட்சிக்கு இடையில் இவ்வுருவம் தோன்றி இருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் இது குறித்து சபைக்கு முறையிட்டார். தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அத்துடன் திரையும் செயல் இழக்க வைக்கப்பட்டது. உடனடியாக விசாரணைகள் முடுக்கி விடப்பட்டன. வெளியாள் ஒருவர்தான் இப்புகைப்படங்களை திரையில் ஏற்றி இருக்கின்றார் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். இப்பரபரப்புக்கள் ஓய்ந்ததை அடுத்து அமர்வு மீண்டும் இடம்பெற்றது. |
| பேய் எனும் பீதியில் உறைந்த தென்னிலங்கை! (வீடியோ இணைப்பு) Posted: 24 Apr 2012 07:17 AM PDT இலங்கையில் கம்பஹா மாவட்டத்தில் உள்ள அத்தனகல பிரதேசத்தையும், அதனை அண்டிய கிராமங்களையும் கடந்த சில நாட்களாக வெகுவாக ஆட்டிப் படைத்து வருகின்றது மோகினிப் பிசாசுப் பீதி. வீதி முழுவதும் இந்த மோகினிப் பிசாசு சுற்றித் திரிகின்றது என்றும் ஏராளமான ஆட்கள் வெற்றுக் கண்களால் இந்த மோகினியை நேரில் கண்டு இருக்கின்றார்கள் என்றும் கதைகள் பரவலாக அடிபட்டு வருகின்றன. மக்கள் பயங்கர பீதி காரணமாக வீட்டுக்கு வெளியில் நடமாடுகின்றமையை இயலுமான வரை தவிர்க்கின்றனர். குறிப்பாக மாலை 6.00 மணி என்றவுடன் வீட்டைப் பூட்டு விட்டு உள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதை வெறும் குருட்டு நம்பிக்கை என்று சொல்ல முடியாது உள்ளது. ஏனெனில் ஏராளமான நபர்கள் இந்த மோகினியால் மரண பீதிகூட அடைந்து இருக்கின்றனர். இது முழு வெண்ணிற உடையில் நடமாடுகின்றது என சொல்லப்படுகின்றது. வழியால் கடந்து செல்கின்ற வாகனங்களை நிறுத்தி அன்பளிப்புக்கள் தர வேண்டும் என்று கேட்கின்றது என்றும் பின் வாகனங்களில் ஏறி அமர்கின்றது என்றும் ஆனால் சில நிமிடங்களுக்குள் மறைந்து காணாமல் போய் விடுகின்றது என்றும் தெரிகின்றது. இந்த மோகினியின் உடையது போன்ற கதைகள் முன்பும் உலாவி இருக்கின்றன. வழமையாக குழந்தை ஒன்றுடன் வருகின்ற மோகினி எதிரில் தென்படுபவர்களிடம் குழந்தையை கொஞ்ச நேரத்துக்கு வைத்திருக்க சொல்லி கொடுத்து விட்டு திடீரென மறைந்து போய் விடுகின்றது என்று இவ்வாறான கதைகளில் சொல்லப்படுகின்றது. இலங்கையின் பிரபல தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றான சிரசவில் இந்த மோகினிப் பிசாசுக் கதைகளை வைத்து நகைச் சுவைத் தொலைக்காட்சி தொடர் ஒன்று சில வருடங்களுக்கு முன்னர் ஒளிபரப்பப்பட்டது. அத்தொலைக்காட்சி தொடருக்கு உரித்தான வீடியோ ஒன்றை வாசகர்களின் பார்வைக்கு தருகின்றோம். |
| குழந்தையின் முகத்தில் சிறுநீர் அபிஷேகம் செய்த தந்தை கைது! (வீடியோ இணைப்பு) Posted: 23 Apr 2012 05:15 PM PDT |
| நூலிடை ஆடையணிந்து பஷன்சோவில் கலக்கிய நட்சத்திரம்! (படங்கள் இணைப்பு) Posted: 23 Apr 2012 05:15 PM PDT |
| இசைப்புயலுக்கே சவால்விடும் நாய்க்குட்டி! (படங்கள், வீடியோ இணைப்பு) Posted: 23 Apr 2012 05:15 PM PDT |
| You are subscribed to email updates from ஐ தமிழ் வெப் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |








