I tamil web

I tamil web


போலீசாரால் நிர்வாணமாக்கப்பட்டு துன்புறுத்தப்படும் பெண்! (வீடியோ இணைப்பு)

Posted: 12 May 2012 08:30 AM PDT


பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய போலீசாரே பெண் ஒருவரை முழுமையாக நிர்வாணப்படுத்தி துன்புறுத்தியமை வீடியோவாக வெளியாகியுள்ளது.


இச்சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பத்திய உறவின் வெளிப்படாத உண்மைகளும், நம்பிக்கைகளும்!

Posted: 12 May 2012 06:37 AM PDT


உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை.பாலுணர்வுத் தூண்டலின் போது நமது உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய அறிவு இருந்தால் தான் செக்ஸ் பற்றிய மாயைகள் விலகி அதை முழுமையாக அனுபவிக்க முடியும்.


கிளர்ச்சி அடைவது என்பது செக்ஸ் அடிப்படையில் அலசிப் பார்த்தால் அது பால் உறுப்புக்களையும், நரம்பு மண்டலத்தையும் பொறுத்த ஓர் எதிர் அலை. மூளை தான் இந்தக் கிளர்ச்சி அத்தனைக்கும் மூல காரணமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.ஆர்கஸம் எனப்படும் கிளர்ச்சி நிலைப்பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. உறவில் சரியான உச்சக்கட்டத்தை அடைய முடியாத பெண்கள் தங்களின் துணையைப் பற்றி தவறாக எண்ணக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது.இது உண்மையில்லை. பெண்களுக்கு உச்சகட்ட இன்பத்தை அடைய வைக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன. உறவினால் மட்டுமல்ல காதலான பேச்சுக்களினாலும் கூட பெண்ணிற்கு கிளர்ச்சியூட்ட முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.கிளர்ச்சி நிலையினால் மட்டுமே பெண்களால் முழுமையான இன்பத்தை அனுபவிக்க முடியும். கிளர்ச்சி அடைதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடுகிறது என்பது நம்பிக்கை. ஆனால் அது உண்மையில்லை. உறவைப் பொருத்தவரை இருவருக்குமே திருப்தி என்பது வேறுபடுகிறது. பெண்ணிற்கு எளிதில் திருப்தி கிடைப்பதில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.


மூளையில் இருந்து கிளம்பும் மின் உணர்வுகளும், ரசாயன சமிக்ஞைகளும் தண்டுவடத்தின் மூலமும், நரம்பு நுனிகள் மூலமும் உடலெங்கும் பரவுகின்றன. மூளையில் இருந்து இப்படி ஒரு செயல் நடந்து கொண்டிருக்க, தோல், மற்றும் செக்ஸ் உறுப்புகள், மார்பகங்களிலிருந்து கிளம்பும் சமிக்ஞைகளும் மூளையைச் சென்றடைகின்றன. ஆனால் உடல் உணர்ச்சிகளே தேவையின்றி சில சமயம் பாலுணர்வுக் கிளர்ச்சி என்பது தனியே மூளை மட்டும் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம். அதிலும் சில சமயங்களில் பாலுணர்வை தூண்டும் உறுப்புக்களிலிருந்து தோன்றும் இனம் புரியாத உணர்வலைகள் மிக ஆழமாக உருவாகி அதனால் மூளை என்ன உணர்ந்தது என்றே உணர முடியாமலும் போகலாம். இந்த நிலை தான் தன்னை மறந்த நிலை எனப்படுகிறது.

தொழில்நுட்ப உலகில் புவியீர்ப்பின் மாயா ஜாலம்! (வீடியோ இணைப்பு)

Posted: 12 May 2012 06:31 AM PDT

கணினியைப் பயன்படுத்தி இவ் உலகில் செய்யமுடியாதது எதுவுமில்லை என்பதனை யாராலும் மறுக்க முடியாது.


அதனை வலுப்படுத்தும் முகமாக புவியீர்ப்பு சக்தி தொடர்பான இந்த ஆய்வு அமைகின்றது.



ஆசிரியருடைய காரை அகோரமாகத் தாக்கிய அங்கிரி பேர்ட்! (படங்கள் இணைப்பு)

Posted: 12 May 2012 05:55 AM PDT


விளையாட்டு மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது எங்கிருந்தோ பறந்துவந்த மயில் ஒன்று மோதியுள்ளது. இதனை தற்செயலாக படமெடுத்துள்ளனர்.


மயில்கள் கொடூரமான பறவைகள் இல்லையாயினும் மனிதர்களை தனது அலகால் தாக்கும் வல்லமை கொண்டவை. இதனால் பாடசாலை மாணவர்கள் பாதுகாப்பாக வகுப்பறைக்குள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.




பயங்கர மரணத்திலிருந்து உயிர்தப்பிய குடிகாரச் சாரதி! (படங்கள் இணைப்பு)

Posted: 12 May 2012 05:30 AM PDT


டேவிட் மக் கான் எனும் சாரதி ஒருவர் நன்றாக மது அருந்திய நிலையில் தனது காரைச் செலுத்திக்கொண்டிந்து வேளை திடீரென ஆறு அடி நீளமான மரப் பலகை ஒன்று அவரது சாரதி இருக்கைக்கு நேரே உள்ள கண்ணாடியின் பக்கத்தில் துளைத்துக்கொண்டு உட்சென்றுவிட்டது.


எனினும் குறித்த நபர் உயிர்ச்சேதம் எதுவுமின்றி காயத்துடன் உயிர்தப்பியுள்ளார்.





துல்லியமான இரவுப் பார்வையுடன் கூடிய கைக் கடிகாரங்கள்! (வீடியோ இணைப்பு)

Posted: 12 May 2012 05:22 AM PDT


சாதாரணமான கடிகாரங்களில் இரவு நேரத்தில் நேரம் பார்ப்பது கடினம். எனினும் சில டிஜிட்டல் கடிகாரங்களில் பிரத்தியேமான சிறிய எல்.ஈ.டி மின்விளக்கு பொருத்தப்பட்டிருக்கும். தேவையான நேரத்தில் பட்டனை அழுத்துவதன் மூலம் அம்மின்விளக்கை ஒளிரச் செய்து நேரத்தை அவதானிக்க முடியும்.


ஆனால் தற்போது தொடர்ச்சியாக எரியக் கூடிய எல்.ஈ.டி மின்விளக்கினைக் கொண்டதும் யு.எஸ்.பி மூலம் சார்ஜ் செய்யக்கூடியதுமான இரவுப்பார்வைக் கைக்கடிகாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கொலைவெறியைத் தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான கங்குலியின் சாதனை! (வீடியோ)

Posted: 11 May 2012 10:03 PM PDT

கங்குலியின் சாதனைகள் தொடர்பான வீடியோவை இன்டர்நெட்டில் லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். இதன் ஹிட் ரேட் கொல வெறிப் பாடலை மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக விளங்கியவர் கங்குலி. கடந்த 2008ல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த இவரை, தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்று மூன்று ஆண்டுகளுக்கு விளம்பர தூதுவராக ஒப்பந்தம் செய்துள்ளது.


இந்த நிறுவனம், சவுரவ் கங்குலி - தி மூவி என்ற பெயரில் ஒரு குறும்படம் தயாரிக்க முடிவு செய்தது. இதில் கங்குலியின் வாழ்க்கை, தலைமை பண்பு, சாதனைகள், கிரிக்கெட்டில் சந்தித்த ஏற்ற, தாழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு சுவையான தகவல்கள் இடம் பெற உள்ளன. இதற்கான மூன்று நிமிடங்கள் கொண்ட டிரைலர் சமீபத்தில் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டது.பாலிவுட் ஸ்டைலில் உருவாக்கப்பட்ட இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை மூன்று லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இந்த வீடியோவை கண்டு ரசித்துள்ளனர்.

நாளொன்றிற்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள்!

Posted: 11 May 2012 09:59 PM PDT


பெண்கள் தங்கள் அழகை சரி செய்து கொள்ள, ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு முறை கண்ணாடி பார்ப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.


பெண்களுக்கு அழகுணர்வு அதிகம். இதனால் தான், பெண்களின் அலங்காரப் பொருட்களை மையப்படுத்தி பல்வேறு நிறுவனங்கள் லாபம் சம்பாதித்து வருகின்றன. லண்டனைச் சேர்ந்த, சிம்பிள் ஸ்கின் கேர் என்ற நிறுவனம், 2,000க்கும் அதிகமான பெண்களிடம் ஒரு ஆய்வை நடத்தியது.


இந்த ஆய்வின்படி, ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் பெண்கள் எட்டு முறை கண்ணாடி முன் நின்று, தங்கள் அலங்காரத்தை சரி செய்து கொள்கின்றனர். கார் கண்ணாடி, கடைகளில் வைக்கப்பட்டுள்ள நிலை கண்ணாடி, குளிர்ச்சி கண்ணாடி என, பல கண்ணாடிகளில் இவர்கள் தங்கள் அலங்காரங்களை சரி செய்து கொள்வதாக தெரியவந்துள்ளது.


ஒரு காரை கடந்து செல்லும் போது, அதில் உள்ள கண்ணாடியில் குனிந்து பார்த்து தங்கள் அலங்காரத்தை சரிபார்த்துக் கொள்வதாக 10 பேரில் ஒரு பெண் ஒப்புக்கொள்கிறார். குளியலறை கண்ணாடியில் தாங்கள் அழகாகத் தெரிய வேண்டும் என, மூன்றில் ஒரு பெண்கள் கண்டிப்பாக எதிர்பார்க்கின்றனர் என, இந்த ஆய்வு தெரிவிக்கிறது.


மான்செஸ்டர் பல்கலைக் கழக பேராசிரியர் கிறிஸ்டின் பன்டி குறிப்பிடுகையில், பெண்கள் என்ன தான் வேலையாக இருந்தாலும், தன்னுடைய தோற்றப் பொலிவு நன்றாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். தோற்றப் பொலிவு நன்றாக உள்ள பட்சத்தில் அவர்களுடைய நம்பிக்கையும் அதிகரிக்கிறது என்றார்.

தாய்ப்பால் சுரக்கும் வீதத்தை அதிகரிக்கும் முலை மசாஜ்! (வீடியோ இணைப்பு)

Posted: 11 May 2012 09:07 PM PDT


பிறந்த குழந்தைகளின் பிரதான உணவாகத் திகழ்வது தாய்ப்பால் ஆகும். தாய்ப்பால் ஊட்டலின் போது குழந்தைக்கான போசணை கிடைக்கப்பெறுவதுடன். அதன் மூலம் தாய், சேய் பாசம் அதிகரிக்கின்றது.


எனினும் சில நேரங்களில் தாய்ப்பால் தீர்ந்து போனதும் குழந்தைகள் வீரிட்டு அழுது ஊரையே கூட்டிவிடுவார்கள். இதனைத் தவிர்த்து தாய்ப்பால் சுரக்கும் வீதத்தை அதிகரிக்க முலைகளின் மீது மசாஜ் செய்தல் பயனளிக்கும்.

கண்களுக்கு விருந்தளித்த மலேசியாவின் டைனோசர் கண்காட்சி! (படங்கள் இணைப்பு)

Posted: 11 May 2012 08:58 PM PDT


மலேசியா கோலாலம்பூரில் உள்ள தேசிய அறிவியல் மையத்தில் டைனோசர்களின் கண்காட்சி ஒன்று நடைபெற்று வருகிறது.Cityneon, EMS மற்றும் பெரிசியான் புக்கிட் கியராவில் உள்ள தேசிய அறிவியல் மையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் "The Dinosaurs Live!" எனும் பெயரில் இக்கண்காட்சி நடைபெற்று வருகிறது.


சுமார் 250 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்து அழிந்துபோன உயிரினமாக டைனோசர்களை கூறுகின்றனர் விஞ்ஞானிகள். இன்று வரை அதனைப்பற்றி ஆராய்ச்சிகள் தொடர்கிற, நிலையில் உயர்தர மெக்கட்ரோனிக்ஸ் அனிமேஷன் தொழிழ்நுட்பத்தில் நிஜமாகவே உயிருடன் இருப்பது போல் டைனோசர்களை உருவப்படுத்தி அதனை இங்கு காட்சிக்கு வைத்துள்ளனர். பார்வையாளர்கள் பலவகையான டைனோசர்கள் பற்றிய வரலாறு அதன் செயற்பாடுகள், குணாதியங்கள் போன்ற பல விடயங்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.


குறிப்பாக சிறார்களை கவரும் விதத்தில் இக் கண்காட்சியில் பல வேடிக்கை விளையாட்டுக்களையும் ஒழுங்கு செய்துள்ளனர். குறைந்த நுழைவுக்கட்டணத்துடன் வருகிற ஜுலை மாதம் வரை இக் கண்காட்சி நடைபெருகிறது.








ஆண்களும், பெண்களும் கலவியில் ஈடுபடும் பல்வேறு முறைகள்! (படங்கள் இணைப்பு)

Posted: 11 May 2012 08:19 PM PDT


செக்சில், ஆண் கீழும், பெண் மேலுமாக ஈடுபடும் மாறுபட்ட கலவி நிலைகளில் ஈடுபடுவதால் சில பெண்களுக்கு கூச்சமின்றி ஈடுபடத் தோன்றலாம். இப்படி மாறுபட்ட நிலைகளில் ஈடுபடக்கூடாத சில சூழ்நிலைகளும் உண்டு. அவை என்னென்னவென்று தெரியுமா?


மாதவிடாய் வெளிப்படும் காலம்


சமீபத்தில் குழந்தை பெற்றவள்


பிறப்புறுப்பு மிக இறுக்கமாக அமைந்த பெண்


பருத்த உடல் கொண்டவள்


கலவியில் ஈடுபடும் ஆணும், பெண்ணும் புதுப்புது விதங்களில் இன்பம் அனுபவிக்க விழைவார்கள். அத்தகைய நிலைகளை சித்ர ரத அசாதாரணமான நிலைகள் என்பார்கள். ஆனால் தீவிர காம இச்சை கொண்ட ஆணும், பெண்ணும் பயிற்சிக்கு பிறகே இது போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.


இந்த நிலைகள் பல வகைப்படும்… அவை….


ஸ்திர ரத (நின்ற நிலை) பெண், சுவர் மீதோ, தூண் மீதோ சாய்ந்த படி நின்றிருக்க ஆண் அவளை நின்ற நிலையிலேயே இறுகத் தழுவி அணைத்துக் கலவியில் ஈடுபடுவது இந்த நிலை


நின்ற கலவி நிலை மேலும் 3 வகைப்படும்…


முன் நீட்டிய நிலை… 
நின்று கொண்டிருக்கும் பெண்ணின் ஒரு காலை மட்டும் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஆண் கலவியில் ஈடுபடுவது இந்த நிலை


இரண்டு அடுக்கு நிலை… 
நின்றிருக்கும் பெண்ணின் கால்கள் துவளும் படி பிடித்துக்கொண்டு கலவியில் ஈடுபடுவது இரண்டு அடுக்கு நிலை


முழங்கால், முழங்கை நிலை….
ஆண் நின்ற நிலையில் பெண்ணைத் தூக்கி அவன் தன் இடுப்பில் இரண்டு கால்களையும் இடுப்பைக் பின்னிக்கொள்ளும் வகையில் போட்டுக் கலவியில் ஈடுபடுவது இந்த நிலை


தொங்குநிலை…. 
ஆண், சுவர் அல்லது தூணில் சாய்ந்து நிற்க, பெண் அவன் மீது ஏறி, கால்களைப் பின்னிக் கொண்டு கலவியில் ஈடுபடுவது இந்த நிலை. இதில் ஆண், பெண்ணின் கழுத்தைக் கட்டிக் கொள்வான்.


மிருகங்களின் நிலை….. 
இந்த நிலையில், பெண் படுக்கையில் முழங்கால் போட்டு மண்டியிட்டுக் கொள்ள ஆண், பின்புறமாகப் புணர்ச்சியில் ஈடுபடுவான்.




நீர் விளையாட்டுக் கலவி…. 
ஆணும், பெண்ணும் ஏதாவது நீர் நிலைகளில் கலவியில் ஈடுபடுவது இந்த முறை.






வாகனமாக நகரும் கதிரைகள்! (வீடியோ இணைப்பு)

Posted: 11 May 2012 08:09 PM PDT


களைப்படைந்த மனிதன் ஒய்யாரமாக உட்காருவதற்கென உருவாக்கப்பட்ட கதிரைகள் நகர்ந்தால் எப்படி இருக்கும்? விஞ்ஞான உலகம் அதனையும் விட்டுவைக்கவில்லை... கண்டுபிடித்துவிட்டது நகரும் கதிரையை.


இப்படியே போனல் இறுதியில் எல்லோரும் வைத்தியசாலைக் கட்டிலில் தான் படுக்க நேரிடும் பாருங்கோ...

அன்னையர்களுக்கு பரிசளிக்கும் முகமாக உருவாக்கப்பட்டுள்ள இன்னிசைப் பாடல்! (வீடியோ)

Posted: 11 May 2012 07:58 PM PDT


சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு மலேசிய தமிழ் இசைக் கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகியுள்ள வீடியோ இசைப்பாடல் இது.உலகின் அனைத்து அன்னையர்களுக்கும் இப்பாடலை எமது அன்பு பரிசாக சமர்ப்பிக்கிறோம் என்கிறார்கள் இக்கலைஞர்கள்.


Michael Rao வின் இசையில், பாடகர்கள் Michael Rao, Michael Rao II,  Ganesan Manohgaran, Shashtan Kurup, Shamini Ramasamy, MC Dv, Suren Seven Alex Rao ஆகியோர் இப்பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.  Mani பாடல் வரிகளை எழுதியுள்ளார். Geethanjili G இன் தயாரிப்பில், Wicknewswaren Kalaiperumal இப்பாடலை இயக்கியுள்ளார்.இயற்கை பேரழிவுகளில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்காக நிதி திரட்டுவதற்காகவோ, மொழி, இனம் அல்லது லாப ரீதியான ஒரு கொண்ட்டாட்ட நிகழ்வுக்காகவோ பொதுவாக உருவாக்கப்படும் வீடியோ இசைப்பாடல்களுக்கு மத்தியில், அன்னையர் தினத்தை முன்னிட்டு தமிழில் வாழ்த்திப்பாடியுள்ள இம் மலேசிய கலைஞர்களின் முயற்சியை நன்றியுடன் வரவேற்கிறார்கள் சமூக வலைப்பதிவாளர்கள்.தராமன பாடல் வரிகள், ஈர்க்கும் குரலிசை, வித்தியாசமான காட்சி, நேர்த்தியான அமைப்பு என உருவாக்கப்பட்டுள்ள இவ் வீடியோ இசை பாடலை, நீங்களும் உங்கள் அன்னையருக்கு அன்னையர் தின பரிசாக சமர்ப்பிக்கலாம்!


எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 13) இலங்கை, இந்தியா, மலேசியா, சீனா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. வழமையாக வருடந்தோறும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் வருகிறது.

மாற்றமடையும் மனித உடல் - இறுதியில் நடக்கப் போவது என்ன? (வீடியோ இணைப்பு)

Posted: 11 May 2012 07:49 PM PDT


இன்றைய தொழில்நுட்ப பிரபஞ்சத்தில் இலத்திரனியல் பொருட்களால் மனிதனுக்கு கோடிக்கணக்கில் நன்மைகள் கொட்டிக் கிடக்கின்றபோதிலும் கூடவே தீங்குகளும் காணப்படுகின்றன. இது சுற்றுச் சூழலுக்கும் பொருந்தும்.


இதனை அறிந்திருந்தும் மனிதன் தனது விஷப் பரீட்சையை நிறுத்தியபாடில்லை. தற்போது இலத்திரனியல் சாதனங்களை இலகுவாக இயக்குவதற்காக தனது உடலையே இயக்கியாக மாற்ற முனைகின்றான். இதனால் எயிட்ஸ் நோய் பீதியில் உறைந்திருந்த உலகம் அதிலிருந்து மீள முன் கொடிய புற்றுநோய்களுக்கு ஆளாக முனைகின்றதா?