தமிழ் ஜோதிடம் களஞ்சியம் |
- கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள்
- ப்ளீசிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
- எப்படியெல்லாம் பேசக்கூடாது?
- இது எப்படி இருக்கு?
- தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்
- பக்க வாத்தியம்- தினமலர்
- உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் - தொடக்க விழா - ஆதிரா
- யாகம் -வேள்வி என்பது என்ன?
- இலகுவாக வீடியோக்களை தரவிறக்க
- பட்டுக்கோட்டையார் பிறந்தநாள் விழா - புகைப்படங்கள் - ஆதிரா
- கீதை துளிகள்
- முத்துக்கு ஆசைப்பட்டு ஆனந்த தாண்டவமாடிய பாம்பிடம் கடிபட்டு இறந்த கட்டிடத் தொழிலாளி
- வெற்றிலை போடுவது ஏன்?
- ஹிஷாலீ ஹைக்கூ
- மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா
- கிருஷ்ணாவின் நிச்சயதார்த்த போட்டோக்கள் :)
- சனாகான் பெயரில் குழப்பம் - விபச்சாரம் செய்தது நடிகை சானாகான் இல்லை
- தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
- நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார்
- ஆளுக்கு 2000 டாலர் டெளரி..ஒரே நைட்டில் 2 காதலிகளை கை பிடித்த ஈராக் இளைஞர்!
- தமன்னா, அனுஷ்கா பீரில் போதைக்குளியல் அதிர்ச்சித் தகவல் (படங்கள்)
- யாழில் இராணுவ சிப்பாய்கள் இடையே மோதல் இருவர் பலி. (படங்கள்)
- கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் பொறுப்பிலிருந்து விடுவிப்பு
- டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்
- திருமணம் செய்ய ஆசையா? குறைந்தபட்சம் ரூ.1 கோடி சம்பாதிக்க வேண்டும்
- Windows XP-ல் Shut Down நேரத்தை குறைக்க..,
- சிலேடை பாடல்
- "நெளிந்தே செல்கிறது வாழ்க்கை...."
- IDM அனின்ஸ்டால் செய்ய முடியவில்லை
- உலக நடன தினம்
- வேர்டு 2007 -இல் தானாகவே தோன்றும் மினி டூல்பாரை நீக்க
- நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சியை பிரித்து எடுக்க
- மென்பொருள் இல்லாமல் Audio fileகளை convert செய்ய..
- மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New)
- மின்மினி - ஹைக்கூ
- kanavu palan
- பறந்து வரும் ஒரு பாடல் .....
- அழகிய கோலம்
- குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம்
- அழகர்சாமியின் குதிரை சினிமாவுக்கு சிறந்த ஜனரஞ்சகமான படத்துக்கான தேசிய விருது
- வடக்கில் குவிக்கப்பட்டுள்ள படைகளை குறைப்பதில் சிறிலங்கா அக்கறை காட்டவில்லை – பிரித்தானியா.
- வந்தது கத்திரி... இன்று முதல் வெயில் மண்டையைப் பிளக்கும்
- தென்மராட்சியின் தச்சந்தோப்பில் துப்பாக்கிச் சூடு- இளைஞர் சடலமாக மீட்பு!
- லண்டன் மேயர் வேட்பாளர்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்: இலங்கை அரசாங்கம்
| கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் Posted: 04 May 2012 06:57 PM PDT கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் கிருஷ்ணாப்பா: சீக்கிரம் கிளம்புங்க நாழி ஆயிட்டிருக்கு மண்டபத்துல அவால்லாம் வெயிட் பண்ணின்றுப்பா. கிருஷ்ணாம்மா: வெயிட் பண்ணட்டுமே - வெயிட் பண்ணினாதான் வெயிட்டா போறதில மதிப்பா இருக்கும்ன்னா. கிருஷ்ணா: தனக்குள் - என்ன கொடுமைடா இது - நம்ம அவசரம் புரியாம இவா பேசிண்டே இருக்கா. ஒரு வழியா கிருஷ்ணாவின் அவசரம் புரிந்தும் புரியாமலும் வந்து சேர்ந்தாங்க நம்ம நால்வராக போகும் மூவர் குடும்பம் மண்டபத்துக்கு. கிருஷ்ணாம்மா: டிபன் எல்லாம் ரெடி ஆயிடித்தோன்னோ? கிருஷ்ணாப்பா: ... |
| ப்ளீசிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். Posted: 04 May 2012 06:37 PM PDT ஈகரையின் செல்ல குட்டிஸ்களில் ஒருவரான நம் அசுரன் அண்ணாவின் அன்பு மகள் ப்ளீசிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் , ப்ளீசி எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ நாம் அனைவரும் வாழ்த்துவோம் |
| Posted: 04 May 2012 06:19 PM PDT எப்படியெல்லாம் பேசக்கூடாது? பேசக்கூடாத பேச்சுக்கள் பலவகைப்படும் அவை : மனதை தகர்க்கும் பேச்சு, வளைந்த பேச்சுகள், நெருப்புப் பொறிகள், பொறுப்பற்ற பேச்சு, மோசடிப் பேச்சு, நீர் குமிழிகள், உயர்வு நவிற்சி, வஞ்சப் புகழ்சி, மூடப் பேச்சுகள், காதல் பேச்சு, குதர்க்கப் பேச்சு, கோபப்பேச்சு, சவால் பேச்சு, வசைப் பேச்சு பொய் பேச்சு. இவை ஒவ்வொன்றைப் பற்றியும் இங்கு சுருக்கமாகக் காண்போம். மனிதனுக்கு மட்டும் உள்ள சிறப்புத்தன்மை பேச்சு. இது வரை எவ்வளவோ நாம் பேசியிருப்போம், கேட்டும் இருப்போம். நம்மை சுற்றி ... |
| Posted: 04 May 2012 06:18 PM PDT ![]() |
| தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் Posted: 04 May 2012 06:14 PM PDT தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் சென்னையில் பட்டம் விடும் சீசன் துவங்கி விட்டது. போன வருஷம் சீசன் ரொம்ப மந்தமாக இருந்தது - காரணம் போலீஸ் மாஞ்சாவை தடை செய்து மாஞ்சா தயாரிப்பவர்கள், அதை பயன்படுத்துபவர்கள் அனைவரையும் கைது செய்து மிரட்டி வைத்திருந்தார்கள். இந்த வருஷமும் அப்படித்தான் இருக்குமென்று எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. எங்கு பார்த்தாலும் பட்டம் பறந்தது - பட்டம் விடுபவர்கள் ஒரே குதூகலத்தில் திளைத்தார்கள். காரணம் அறியாது போலீஸ் தனது பூனைப் படையை ஏவி இதன் காரணத்தை ... |
| Posted: 04 May 2012 06:05 PM PDT "மின்னல் தான் மின்வெட்டு!' திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில், அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது. பழனிச்சாமி எம்.எல்.ஏ., பேசுகையில், "முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், மின்வெட்டு என்றால் என்னவென்றே, மக்களுக்குத் தெரியாது. வானத்தில் ஏற்படும் மின்னலை தான், மின்வெட்டு என, நினைத்தனர். தி.மு.க., ஆட்சியில் தான், மின்வெட்டு என்றால் மின்தடை என தெரிந்தது. தமிழகத்திற்கு மின்சாரம் கொடுக்க, குஜராத் தயாராக உள்ளது. மின்வெட்டு பிரச்னை தீர்ந்தால், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதாயம் என பயந்து, ... |
| உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் - தொடக்க விழா - ஆதிரா Posted: 04 May 2012 05:49 PM PDT ![]() |
| Posted: 04 May 2012 01:54 PM PDT கீதை 4:25 யாகம் செய்கிறவர்களில் பலர் அசுரர்களை உபாவாசித்து அவர்களுக்கு பிரியமான பலவகைப்பட்ட உணர்வுகளை --பலிகளை செலுத்துகிறார்கள் ! ஆனால் வெகுசிலரே உன்னதமான கடவுளின் ஞானத்தீயில் தங்களையே பலியாக அர்ப்பணிக்கின்றனர்!! கீதை 4:26 இன்பவேட்கையில் ஈர்க்கபடாத துறவறத்தினர் சிலர் மனக்கட்டுபாடு என்னும் வேள்வியில் அய்புலன்களையும் புலன் நுகர்ச்சியையும் அர்ப்பணித்தும் முறையான இல்லறவாசிகள் சிலர் புலன் நுகர்வுகளில் அளவை அர்ப்பணித்து புலன்களையே வேள்வியாக்கியும் தங்களையே வேள்வியாக மாற்றுகின்றனர்! கீதை 4:27 ... |
| Posted: 04 May 2012 01:52 PM PDT இணையத்தில் நீங்கள் ரசித்த வீடியோக்களை இலகுவாக தரவிறக்க மிகச்சிறந்த பாயபாக்ஸ் நீட்சி தரவிறக்க - https://addons.mozilla.org/fr/firefox/addon/fast-video-download-with-searc/ |
| பட்டுக்கோட்டையார் பிறந்தநாள் விழா - புகைப்படங்கள் - ஆதிரா Posted: 04 May 2012 01:41 PM PDT [center] |
| Posted: 04 May 2012 01:34 PM PDT கீதை 4:38 உயிரோட்டமான--நித்தமும் வளர்கிற அறிவிற்கு ஈடுஇணையானதும் அதைப்போல தூய்மையானதும் இந்த உலகில் ஏதுமில்லை! அது எல்லா யோகங்களின் முற்றிய பலனால் விளைவது!! யார் ஆன்மீக பயிற்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளுகிராறோ அவர் தனக்குள்ளாகவே இந்த அறிவை ஏற்ற காலத்தில் துய்க்க தொட்ங்குவார்!!! கீதை 4:39 இந்த உயிரோட்டமான அறிவில் லயித்த பக்தன் தனது புலண்களை அடக்குவதில் வெற்றி பெற்று ஞானம் சித்திக்கபெறுகிறான்! ஞானம் சித்திக்க பெற்று உண்ணதமான தெய்வீக சமாதானம் நிறம்பியவனாய் மாறுகிறான்!!! கீதை 4:40 ... |
| முத்துக்கு ஆசைப்பட்டு ஆனந்த தாண்டவமாடிய பாம்பிடம் கடிபட்டு இறந்த கட்டிடத் தொழிலாளி Posted: 04 May 2012 12:34 PM PDT முத்துக்கு ஆசைப்பட்டு ஆனந்த தாண்டவம் ஆடிய பாம்பிடம் கடிபட்டு கட்டிடத் தொழிலாளி ஒரு பரிதாபமாக உயிர் இழந்தார். கோவையை அடுத்த வீரகேரளம் அருகே உள்ள நாகராஜபுரத்தைச் சேர்ந்தவர் ராஜு என்ற ராஜ்குமார்(25). கட்டிடத் தொழிலாளி. அவர் கட்டிட வேலைக்காக சுண்டக்காமுத்தூருக்கு சென்றார். அங்குள்ள மருத்துவமனையின் பின்புறம் கட்டிட வேலை செய்தார். மதிய உணவின்போது மருத்துவமனை அருகே நாகப்பாம்பும், சாரைப்பாம்பும் பிண்ணிப் பிணைந்து ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தன. இதைப் பார்த்ததும் அங்கு மக்கள் கூட்டம் கூடினர். ... |
| Posted: 04 May 2012 11:09 AM PDT நமது முன்னோர்கள் உணவருந்தியவுடன் தாம்பூலம் போடும் பழக்கத்தை வைத்திருந்தார்கள் தாம்பூலம் தரிப்பது பெருமைக்குரிய மரபாகவும் இன்றுவரை கருதப்படுகிறது. தாம்பூலம் தரித்தல் என்பது ஏன் எதற்க்காக பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல ... |
| Posted: 04 May 2012 10:36 AM PDT குன்றின் மேல் பறவை குடைசாயா பெருமை உன்னத மலைகள் ஓடாத இரவு ஆடாத பகல் ஆர்பரிக்கும் மக்கள் மரத்தை வெட்டாதே மயானத்தில் உடன் கட்டை ஏறுதல் இறந்த காலத்தில் மரங்கள் பள்ளி விடுமுறை வசந்த காலம் மாணவர் வருகை ஏறுவரிசையில் கல்வி காற்றின் சூட்டில் வியர்வை பாடல்கள் பசியில் தூங்கும் குழந்தை ஆறும் கடலாகிறது மண் கடத்தும் மரணக் குழியில் கோவக் காற்று கொந்தளிக்கும் அலை கரை ஒதுங்கியது சிற்பிகள் ஏழையின் புற்று நோய் ஏறும் விலைவாசி |
| மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா Posted: 04 May 2012 10:24 AM PDT மன்னிக்கணும் நண்பர்களே! நான் இங்கு வந்துவெகு நாட்கள் ஆகிவிட்டது, வேலைபளு தான் காரணம். அத்துடன் ஒரு சந்தோஷமான செய்தி உங்களுடன் பகிர விரும்புகிறேன். எங்க கிருஷ்ணாக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கு அதனால் தான் வேலை அதிகமாகிவிட்டது, அது தான் இங்கு வர முடியாமல் போனது |
| கிருஷ்ணாவின் நிச்சயதார்த்த போட்டோக்கள் :) Posted: 04 May 2012 09:40 AM PDT கிருஷ்ணாவின் நிச்சயதார்த்த போட்டோக்கள் சில இங்கு போடுகிறேன் நண்பர்களே ! ![]() |
| சனாகான் பெயரில் குழப்பம் - விபச்சாரம் செய்தது நடிகை சானாகான் இல்லை Posted: 04 May 2012 09:28 AM PDT தம்பிக்கு எந்த ஊரு ,சிலம்பாட்டம் ,ஆயிரம் விளக்கு,பயணம் போன்ற படங்களில் நடித்தவர் சனாகான் , இவரை பற்றி நேற்று தமிழ் சினிமா நடிகை விபச்சாரம் , பெங்களூரில் அடுக்கு மாடி குடியிருப்பில் கைது என்ற செய்தி மாலை நாளிதழ், பல இணைய தளங்களில் சனாகான் போட்டோவுடன் செய்தி வெளி வந்து அதிர்சிகுள்ளாகியது, இந்த நிலையில் நாம் அவர் மொபைலுக்கு தொடர்பு கொண்டு சனாகான்னிடம் பேசினோம், அப்போது நான் மும்பை அந்தேரியில் குடும்பத்தினருடன் வசிக்கிறேன் , இந்த செய்தி எனக்கே அதிர்ச்சி ஆனது, இப்போது தான் அந்தேரி போலீஸ் கமிஷனரை ... |
| தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Posted: 04 May 2012 09:15 AM PDT (திரு. மு.பெ.ச அவர்கள் எழுதிய உரையில் இருந்து சுருக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.) 1 ) தூதுக்கள் பல வகை. இராமாயணத்தில் அங்கதன் தூது. பாரதத்தில் சஞ்சயன் தூது; உலூகன் தூது; கண்ணன் தூது; இவையெல்லாம் அரசியல் தூதுக்கள். ஒன்றும் வெற்றி பெறாத தூதுக்கள். இவற்றிற்கு மாறாக தலைவன் தலைவியிடையே நிகழும் காதல் தூதுக்கள் உண்டு. இவற்றை இலக்கியத்தில் காணலாம். சிவபெருமான் சுந்தரர்க்காக பரவையாரிடம் தூது சென்றார். வெற்றி பெற்ற தூது இது. இதுவல்லாமல் கவிஞர்கள் விட்ட கற்பனை தூதுக்கள் பல. தாமரை விடு தூது, நெல்விடு தூது, ... |
| நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் Posted: 04 May 2012 09:05 AM PDT சில முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் உணவு பொருட்கள் மற்றும் நொறுக்குத்தீனிகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கலப்படங்களின் அளவு அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுக்குறித்து, டெல்லியில் உள்ள அரசு சாரா அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஒன்று மிகவும் பிரபலமான சில நிறுவனங்களின் தயாரிப்புக்களை ஆய்வக சோதனைக்கு தேர்ந்தெடுத்து சோதனை செய்தது. அந்த ஆய்வில், குறிப்பாக மேகி, டாப் ராமன் நூடுல்ஸ், மெக் டொனால்ட்ஸ் ஃபுட்ஸ், கே.எப்.சி பிரைட் சிக்கன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த உணவுப் ... |
| ஆளுக்கு 2000 டாலர் டெளரி..ஒரே நைட்டில் 2 காதலிகளை கை பிடித்த ஈராக் இளைஞர்! Posted: 04 May 2012 05:40 AM PDT ஈராக் நாட்டைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் நயீப் அல் ஒவைதி என்ற 22 வயது இளைஞர் ஒரே ஒரவில் தமது 2 காதலிகளை கரம்பிடித்து கலகல திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இதற்காக இருவருக்கும் தலா 2000 டாலருக்கும் மேல் அவர் வரதட்சணையும் கொடுத்துள்ளாராம். ஈராக்கின் திக்ரிக் அருகே உள்ள அல் லக்லக் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான். விவசாயியான இவர் இந்தார், சவூத் ஆகிய இரு பெண்களைக் காதலித்து வந்தார். இருவரும் அப்துல் ரஹ்மானுக்கு உறவினர்கள்தான். இருவரையும் காதலித்த அவர் இருவரையும் மணக்கவும் முடிவு செய்தார். ... |
| தமன்னா, அனுஷ்கா பீரில் போதைக்குளியல் அதிர்ச்சித் தகவல் (படங்கள்) Posted: 04 May 2012 05:34 AM PDT நடிகர் ,நடிகைகளுக்கு பாலாபிஷேகம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் சில வெறிபிடித்த ரசிகர்கள். எட்டாத தொலைவில் நின்று கிட்டாத தெய்வத்துக்கு 'நமஸ்தே' போடுவது போலதான் இந்த அபிஷேக அன்புறுத்தல் எல்லாம். ஆனால் மேற்படி நடிகைகளில் பலர் தங்களுக்கு தாங்களே பீராபிஷேகம் செய்து கொள்வதை அறிந்தால் என்ன செய்வார்களோ? குடிமகன்களின் தாகத்திற்கு டாஸ்மாக், எலைட் என்று விதவிதமாக வசதிகளை செய்து கொடுக்கிறது அரசு. இந்த நேரத்தில் அழகுராணி ஒருவர், குடிப்பதற்கு வைத்திருந்த பீர் பாட்டிலை தலையில் கொட்டி தனி ஆராய்ச்சி செய்திருக்கிறார். ... |
| யாழில் இராணுவ சிப்பாய்கள் இடையே மோதல் இருவர் பலி. (படங்கள்) Posted: 04 May 2012 05:33 AM PDT யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியோரமாக ஈபிடிபி அலுவலகத்திற்கு முன்னாள் உள்ள இராணுவ பாதுகாப்புச் சோதனைச் சாவடியொன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு இராணுவ சிப்பாய்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளனர். இந்த இரு இராணுவ சிப்பாய்களும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு சிப்பாய் மற்றுமொரு இராணுவ சிப்பாய் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளார். இந்த இரு இராணுவ சிப்பாய்களுக்கிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட காரணத்தின் ... |
| கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் பொறுப்பிலிருந்து விடுவிப்பு Posted: 04 May 2012 05:25 AM PDT சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் மாவட்ட ஆட்சியர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால்மேனன் கடந்த மாதம் 20ஆம் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார். பின்னர் சட்டீஸ்கர் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால்மேனனை மாவோயிஸ்டுகள் நேற்று விடுவித்தனர். இந்நிலையில் அவர் மாவட்ட பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தண்டேவாடா மாவட்ட ஆட்சியர் ... |
| டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம் Posted: 04 May 2012 05:15 AM PDT ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் அலுவலகத்தில் தான் பணி புரியும் மேசையிலேயே உணவு உண்ணும் ஊழியர்கள், கேடு விளைவிக்கக் கூடிய அசுத்த கிருமிகள் பெருகுவதற்கான இடமாக மாற்றிவிடுகிறார்கள் என குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், பெண்களை விட ஆண்களே அதிகமாக அசுத்தமிக்கவர்களாக காணப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆண்கள் பயன்படுத்தும் மவுஸ்களில் மட்டும் 40 விழுக்காடு பாக்டீரியாக்கள் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். மேலும், மவுஸ்களுக்கு அடுத்ததாக அதிக கிருமிகள் நிறைந்த பொருளாக கணினி விசைப்பலகை ... |
| திருமணம் செய்ய ஆசையா? குறைந்தபட்சம் ரூ.1 கோடி சம்பாதிக்க வேண்டும் Posted: 04 May 2012 05:08 AM PDT இளம் வயதை எட்டும் அனைத்து ஆண், பெண்ணுக்கு திருமணம் கனவு ஏற்படுவது சர்வ சாதாரணம். இதற்காக அவர்கள் ஓரளவிற்கு வருமானம் ஈட்டுவது அவசியம். ஆனால் இந்த திருமண கனவு வடகொரியா இளைஞர்களை அச்சப்பட வைக்கிறது. காரணம் அங்கு வானத்தை தொடும் அளவிற்கு அன்றாடச்செலவுகள் உயர்ந்து வருவதே ஆகும். அங்கு திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் மணமகன் ஆண்டிற்கு குறைந்த பட்சம் ரூ.1 கோடி அல்லது அதற்கு 4 மடங்கு சம்பாதித்தால் தான் இன்பமாக வாழ்க்கையை நடத்த முடியும். இது அங்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரத்தில் இருந்து ... |
| Windows XP-ல் Shut Down நேரத்தை குறைக்க.., Posted: 04 May 2012 04:37 AM PDT நாம் ShutDown கொடுத்தபிறகு சர்விஸஸ்களையும், திறந்திருக்கும் புரொகிராம்களையும் மூடுவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும், என்பதை விண்டொஸில் உள்ள சில ரிஜிஸ்டரி பதிவுகளே தீர்மானிக்கின்றன. இந்த ரிஜிஸ்டரி பதிவுகளை மாற்றுவதன் மூலம் Windows XP யை விரைவாக ஷட் டவுன் செய்திட முடியும். Start->Run-> Regedit சென்று 'HKEY_CURRENT_USER\Control Panel\Desktop\' என்ற கீயில் கிளிக் செய்துவலதுபுறம் உள்ள லிஸ்டில் 'WaitToKillAppTimeout' என்ற கீயில் இரட்டை கிளிக் செய்து அதன் value- ஐ 1000 என மாற்றவும். ... |
| Posted: 04 May 2012 03:36 AM PDT சிலேடை பாடல் தமிழ்த்தாத்தா (உ வே சா) (குளவிக்கும் தமிழ்த்தாத்தாவுக்கும் தேடித்தினம் அலைதலுண்டு கூடிவாழ்வதிலும் ஒன்றாவார் பாடிச்சிறப்பதுண்டு பதம் பிரித்து - தன் சிசுவை தவறாது ஊட்டிவளர்ப்பதுண்டு உத்தமமாய் தன்ஊரில் உழன்று ஏட்டில் சிறப்பதுண்டு குளவியும் தாத்தாவும் ஆம், ----------------------------------------------------------------- (சிவபெருமானுக்கும் தமிழ்த்தாத்தாவுக்கும் மீனாட்சி மனம் கவர்ந்தவராம் மண்ணிதிலே தினம் அலைந்து திரிந்துமே - மானமுடன் மணிமேகலையுடன் குண்டலம் ... |
| "நெளிந்தே செல்கிறது வாழ்க்கை...." Posted: 04 May 2012 03:24 AM PDT நேர்பாதைதான்..... என்றாலும் நெளிந்தே செல்கிறது புழு. ****************************************** ஆயிரம் கால்கள்..... எந்தக் கனவைச் சுமந்து செல்கின்றன?... இத்தனை கால்கள். ***************************************************** வண்ண வண்ண விளக்குகள்... ஒரே நிறத்தில். மின் வெட்டுக் காலம். ***************************************************** அசை போடும் பசு..... பற்களுக்குள் அரை படுகிறது அடி வாங்கிய வலி. ********************************************************* "வாழ்க்கை வாழ்வதற்கே" எங்கேயோ ... |
| IDM அனின்ஸ்டால் செய்ய முடியவில்லை Posted: 04 May 2012 03:14 AM PDT நான் எனது கணினியில் விண்டோஸ்7இயங்கு தளம் நிறுவி இருக்கிறேன் அதில் IDM அனின்ஸ்டால் செய்ய முடியவில்லை வேறு ஏதேனும் வழி உள்ளதா ......??? |
| Posted: 04 May 2012 03:06 AM PDT உலக நடன தினம் (29 ஏப்ரல்) என இலங்கை கண்டியைச் சேர்ந்த திரு பீர் முஹமது புன்னியாமீன் என்ற எனது நண்பர் ஒரு அருமையான கட்டுரை எழுதியிருக்கிறார். அவரது அனுமதியின் பேரில் அவரது கட்டுரையை எனது பதிவில் வெளியிடுகிறேன். திரு பீர்முஹமது புன்னியாமீன் அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றிகள் ஏப்ரல் 29 – உலக நடன தினமாகும். International Dance Day (World Dance Day). இந்திய, இலங்கை போன்ற நாடுகளில் நடனக்கலை முக்கியத்துவம் பெற்ற ஒரு கலையாகவும், சில சந்தர்ப்பங்களில் தெய்வீகத்தன்மை கொண்ட ஒரு கலையாக ... |
| வேர்டு 2007 -இல் தானாகவே தோன்றும் மினி டூல்பாரை நீக்க Posted: 04 May 2012 02:54 AM PDT நாம் Microsoft Word 2007 உபயோகித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஏதாவது டெக்ஸ்டை தேர்வு செய்ய ஹைலைட் செய்தால் தானாகவே Mini Formatting Toolbar தோன்றிவிடும். இந்த வசதி சில சமயங்களில் உபயோகமாக இருந்தாலும், பல சமயங்களில் எரிச்சலூட்டுவதாக அமைந்து விடுகிறது. இந்த Mini Formatting Toolbar நிரந்தரமாக நீக்க முடியாதபடி உருவாக்கப் பட்டிருந்தாலும், நாம் டெக்ஸ்டை ஹைலைட் செய்யும் பொழுது இது தானாகவே தோன்றுவதை தடுக்க ஒரு எளிய வழி. Word 2007 ஐ திறந்து கொள்ளுங்கள். இதில் உள்ள Office Button ஐ கிளிக் ... |
| நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சியை பிரித்து எடுக்க Posted: 04 May 2012 02:39 AM PDT நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சி வரும் போது அதை தனியாக பிரித்து எடுக்க விரும்புவோம் .அதற்கு நாம் பல software ஐ உபயோகபடுத்தி இருப்போம்.ஆனால் அதற்கு ஓர் எளிய வழி உள்ளது .அந்த வழி தான் nero version. அதன் மூலம் எவ்வாறு பிரித்து எடுப்பது என்று பார்போம். start-->all program--->nero7 ultra edition--->nero version ஐ click செய்யவும் . பின்பு make movie என்பதை click செய்யவும் . tips என்ற window தோன்றும். அதை close செய்யவும் . பின்பு நாம் cut செய்ய வேண்டய ... |
| மென்பொருள் இல்லாமல் Audio fileகளை convert செய்ய.. Posted: 04 May 2012 02:35 AM PDT மென்பொருள் பயன்படுத்தாமலேயே சில வேலைகளை இணையத்தில் செய்ய முடியும். அதுபோலதான் இதுவும். Audio கோப்புகளை ஒரு வகை கோப்பிலிருந்து மற்றொரு வகை கோப்பாக மாற்ற நிறைய மென்பொருட்கள் இருக்கின்றன. எனினும் இந்த மென்பொருள்களில் மாற்றுவதென்பது ஒரு சில படிமுறைகளைப் பயன்படுத்தித்தான் மாற்ற வேண்டும். அவ்வாறில்லாமல் இணையத்திலேயே உங்கள் Audio கோப்புகளை எளிதாக மற்றொரு format க்கு மாற்ற முடியும். செய்முறை: Select Your File என்பதை கிளிக் செய்து உங்களுடைய audio கோப்புகளை தரவேற்றிக்கொள்ளவும். தேவையான ஆடியோ ... |
| மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New) Posted: 04 May 2012 12:39 AM PDT வணக்கம் நண்பர்களே சில மென்பொருள் அறிமுகமாக இந்த இழையை தொடரலாம் என எண்ணுகிறேன் 1. Sweet Home 3D இது ஒரு இல்லம் அமைப்பதற்கான மாதிரி வரைபடம் செய்யும் ( Plan ) மென்பொருளாகும். முப்பரிமாண அமைப்பு உள்ளது. பார்ப்போம் இது இலவசமானது. கீழ் குறிபிட்ட பக்கத்திலிருந்து தரவிறக்கிக்கொள்ளுங்கள், http://www.sweethome3d.com/download.jsp இதை தொடக்கியதும் menu வில் பாருங்கள் Plan / create walls அல்லது create rooms மூலமாக அறை அல்லது முழு இல்லம் அமைத்துக் கொள்ளலாம் ஒருசாதாரண அறை ஒன்றை நிர்மணிப்பதுபற்றி ... |
| Posted: 04 May 2012 12:00 AM PDT இளைய கவிஞர்களின் தமிழ் ஓவியம் மின்மினிகள் காரிருள் பூக்களுக்கு கலங்கரை விளக்கு மின்மினிகள் பசிக்கு மின்னியது மின்மினிகள் பரவசத்தில் விலங்கினங்கள் வான் நட்சத்திரங்கள் பூமிக்கு வருகை மின்மினிகள் முனிவர்களின் ஆலய மணி ஓசை மின்மினிகள் தேவர்களுக்கு விடியலை உணர்த்தியது மின்மினிகள் மலைக் கள்ளன் திருட்டை வெளிச்சம் போட்டு காட்டியது மின்மினிகள் வன வாசிகளுக்கு இயற்கை மின் விளக்கு மின்மினிகள் ராமன் சீதை வனவாசத்தின் அகல் விளக்கு மின்மினிகள் ... |
| Posted: 03 May 2012 11:47 PM PDT ஒரு அலியை கனவில் காண்பதால் என்ன பலன்? |
| Posted: 03 May 2012 10:42 PM PDT பறந்து வருகிறது ஒரு பாடல்.... வண்டோடும்..... அதன் சிறகுகளோடும். தனது பாடலைத் தேடி தேன் வியர்வையில் குளிக்கிறது பூ. ************************************************ உனது செருப்புக்குள் நுழையும் எனது கால்கள் பொருத்திப் பார்க்கிறது... என்னை உன்னோடு. **************************************************** கனவுகள், வன்மங்கள், அச்சங்களால் நிரம்பி இருக்கிறேன் நான். நடுங்கிச் சாகிறது... எனது எழுத்தில் பிறக்கும் கவிதை. ******************************************************** |
| Posted: 03 May 2012 10:39 PM PDT நீ வைகறையில் போட்டுவிட்டுச் சென்ற கோலத்தை.... ஊர்ந்து...ஊர்ந்து இழுத்துச் செல்கின்றன இந்த எறும்புகள். நாளை.... அவற்றின் வீட்டின் முன் தெரியலாம்.... உனதிந்த அழகிய கோலம். ********************************************* |
| குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி, 25 பேர் படுகாயம் Posted: 03 May 2012 09:39 PM PDT குடியாத்தம் கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டத்தின் போது மின்சாரம் தாக்கியதில் பெண் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தேர்த்திருவிழா வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை சிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நேற்றுமுன்தினம் காலை நடந்தது. தொடர்ந்து தேர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது. அப்போது நல்ல மழை பெய்தது. இதில் தேர் முழுவதுமாக நனைந்து இருந்தது. அத்துடன் தேரை இழுக்க இரும்பு கம்பியால் ஆன வடம் இருந்தது. அதை பிடித்து ... |
| அழகர்சாமியின் குதிரை சினிமாவுக்கு சிறந்த ஜனரஞ்சகமான படத்துக்கான தேசிய விருது Posted: 03 May 2012 09:39 PM PDT அழகர்சாமியின் குதிரை சினிமாவுக்கு சிறந்த ஜனரஞ்சகமான படத்துக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. துணை ஜனாதிபதி அமீது அன்சாரி இந்த விருதை வழங்கினார். அதில் கதாநாயகனாக நடித்த அப்பு குட்டிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழா 59-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடந்தது. துணை ஜனாதிபதி அமீது அன்சாரி இந்த விருதுகளை வழங்கினார். வங்காள நடிகர் சவுமித்ர சட்டர்ஜிக்கு, வாழ் நாள் சாதனையாளருக்கு வழங்கப்படும் `தாதா சாகேப் பால்கே' விருது ... |
| வடக்கில் குவிக்கப்பட்டுள்ள படைகளை குறைப்பதில் சிறிலங்கா அக்கறை காட்டவில்லை – பிரித்தானியா. Posted: 03 May 2012 09:10 PM PDT சிறிலங்காவின் தமிழ் பேசும் மக்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரின் போது கணவன்மாரை இழந்த 90,000 வரையான பெண்கள் வாழ்வதாக மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விவகாரம் தொடர்பாக, பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாயப் பணியகத்தால் வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் காணாமற் போதல்கள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் என்பன 2011 இறுதியில் அதிகரித்துக் காணப்பட்டதாக பிரித்தானிய வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹேக் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட 2011 நிலவர அறிக்கையில் ... |
| வந்தது கத்திரி... இன்று முதல் வெயில் மண்டையைப் பிளக்கும் Posted: 03 May 2012 09:07 PM PDT கத்திரி எனப்படும் அக்னிநட்சத்திர வெயில் இன்று தொடங்கியுள்ளது. இன்னும் 21 நாட்களுக்கு வெயில் மண்டையைப் பிளக்கும். இதனால் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் வெளியில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மாதம் ஒரு ராசி என 12 மாதங்களுக்கும் 12 ராசியில் சஞ்சரிப்பார் சூரியன். அந்த வகையில், மேஷம் ராசி பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிரவேசிக்கும் நாள் தொடங்கி, ரோகிணி நட்சத்திரம் முதல் பாதத்தில் சஞ்சரிக்கும் ... |
| தென்மராட்சியின் தச்சந்தோப்பில் துப்பாக்கிச் சூடு- இளைஞர் சடலமாக மீட்பு! Posted: 03 May 2012 08:53 PM PDT தென்மராட்சியின் கோவிலாக்கண்டி- தச்சந்தோப்பு பகுதியினில் நேற்று முன்தினம் இரவு வீடொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் சென்றவர்களென கூறப்படும் இருவரே துப்பாக்கி சூட்டினை நடத்தியுள்ளனர். எனினும் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்பட்டிராத நிலையில் ஆயுததாரிகள் அங்கிருந்து தப்பித்துள்ளனர். மிக அண்மைக் காலங்களினில் மக்கள் மீளக்குடியமர்ந்த பகுதிகளுள் கோவிலாக்கண்டி தச்சந்தோப்பு பகுதியும் ஒன்றாகும். துப்பாக்கிதாரர்கள் ... |
| லண்டன் மேயர் வேட்பாளர்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்: இலங்கை அரசாங்கம் Posted: 03 May 2012 08:48 PM PDT லண்டன் மேயர் தேர்தலில் பலர் போட்டியிடுகின்றனர். அது வேறு கதை. ஆனல் முதன்மை வேட்பாளர்களாக 2 வர் உள்ளனர். இவர்களில் ஒருவரே பெரும்பாலும் லண்டன் மேயர் தேர்தலில் வெற்றிபெறுவார்கள் என்று கருத்துக்கணிப்புகள் சொல்லுகின்றன. லேபர் கட்சியில் இருந்து கென் லிவிங்ஸ்டனும், கான்சர்வேட்டிவ் கட்சியில் இருந்து பொறிஸ் ஜோன்சனும் போட்டியிடுகின்றனர். இத் தேர்தல் நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ளது. வெற்றிபெற்றது யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. பெரும்பாலும் லேபர் கட்சியைச் சேர்ந்த கென் லிவிங்ஸ்டன் அவர்களே ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


[center]