தமிழ் ஜோதிடம் களஞ்சியம்

தமிழ் ஜோதிடம் களஞ்சியம்


4000 பதிவுகளை கடந்த முரளிராஜா அவர்களை வாழ்த்துவோம்

Posted: 01 May 2012 04:20 PM PDT

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா. தொடர்ந்து ஈகரையுடன் இணைந்திருங்கள்.

ஆன்மீக பகிர்வுகள் !!!

Posted: 01 May 2012 12:53 PM PDT

ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே! உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்! கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!! மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு ...

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: 2-வது நாளாக மின்வெட்டு ரத்து

Posted: 01 May 2012 11:19 AM PDT

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி திடீர் அதிகரிப்பு காரணமாக சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் கடந்த இரண்டு நாள்களாக மின்வெட்டு முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பலத்த மழையுடன் கூடிய காற்று வீசுவதால், காற்றாலை மின் உற்பத்தி திடீரென அதிகரித்துள்ளது. மேலும் சில தினங்களுக்கு இதே நிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அவ்வாறு தொடர்ந்து மழையுடன் கூடிய காற்று வீசுமானால், மின் வெட்டும் தொடர்ந்து ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் ...

மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை

Posted: 01 May 2012 11:13 AM PDT

தன்னிடம் கல்வி பயின்ற 16 வயது மாணவர்கள் மூவருக்கு நிர்வாண படம் அனுப்பிய குற்றச்சாட்டில் பெண் ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் தென் மத்திய பிராந்தியமான Oklahoma பகுதியில் உள்ள Southmoore உயர்நிலை கல்லூரியில் கற்பித்து வந்த 28 வயது ஆசிரியையே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது… குறித்த பெண் ஆசிரியை, தன்னிடம் கல்வி கற்ற 16 வயது மாணவர்கள் மூவரிடம் Facebook சமூக வலைத்தளம் மூலம் நட்பை பேணி வந்துள்ளார். Facebook Messenger சேவையை ...

உத்தமத் தொழிலாளி...

Posted: 01 May 2012 10:58 AM PDT

உதிரத்தை வியர்வையாக்கி உலகத்தின் பசிதீர்க்க தனக்கென உண்ணமறந்த உத்தம அவதாரம் தொழிலாளி ஊரார் உறவினர் உளமாற உவகை மட்டும் தனதாக்கி உறக்கம் தொலைத்த உயிரில் உயர்ந்தவன் தொழிலாளி இவன் கை சோர்ந்து விட்டால் உலகமும் இயங்க மறுத்துவிடும் இதுநாள்வரை ஓயாது உழைக்கும் இயந்திரத்தில் திலகம் தொழிலாளி இவனையும் வதைத்து மிதிக்கிறான் ஈரமற்ற மனங்கொண்ட முதலாளி இவனுக்கானதேதுமில்லை இன்றொருநாள் இவன் தினமாம் இனிய வாழ்த்தும் கூறிடுங்கள்

அறிமுகம் ரேவதி.M

Posted: 01 May 2012 10:46 AM PDT

வணக்கம் நண்பர்களே . நான் இந்த தளத்திற்கு புதிய பதிவாளர் . தளத்தை உபயோக படுத்த காற்று கொடுங்க்கல்

ARR, அலட்டல் அம்பலத்தார், வசந்தவாசல் அ.சலீம்பாஷா, அருண் மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Posted: 01 May 2012 10:30 AM PDT

இன்று பிறந்த நாள் கொண்டாடும் ARR, அலட்டல் அம்பலத்தார், வசந்தவாசல் அ.சலீம்பாஷா, அருண் மற்றும் அனைவருக்கும் ஈகரையின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

மூத்த நடிகை சண்முக சுந்தரி மரணம்!

Posted: 01 May 2012 10:22 AM PDT

மூத்த நடிகையும், நடிகை - பின்னணி பாடகி டி கே கலாவின் தாயாருமான சண்முகசுந்தரி நேற்று நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 75. கடந்த 45 ஆண்டுகளாக 750 படங்களுக்கும் மேல் நடித்துள்ள பழம்பெரும் தமிழ் நடிகை சண்முகசுந்தரி. இவர் எம்.ஜி.ஆருடன் 'இதயக்கனி', 'நீரும் நெருப்பும்', 'கண்ணன் என் காதலன்', 'என் அண்ணன்' போன்ற படங்களில் நடித்துள்ளார். சிவாஜியுடன் 'லட்சுமி கல்யாணம்,' 'வடிவுக்கு வளைகாப்பு' படங்களிலும், ஜெமினியுடன் 'மாலதி' படத்திலும் நடித்துள்ளார். காமெடி கிங் கவுண்டமணியின் மாமியாராக ஒரு படத்தில் ...

விஷம் குடித்தவரை காப்பாற்றிய போலீஸ்காரர்

Posted: 01 May 2012 09:52 AM PDT

திண்டுக்கல் :விஷம் குடித்து மயங்கியவரை மருத்துவமனை தூக்கிச்சென்ற போலீஸ்காரர், டாக்டர்கள் இல்லாததால், முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றினார். திண்டுக்கல் வடக்கு ஸ்டேஷன் போலீஸ்காரர் ஜெகசாமி. ஏப்., 29 ல், பஸ் ஸ்டாண்ட் அவுட் போஸ்டில் பணியில் இருந்தார். பழநி நெய்கார பட்டியை சேர்ந்த ரவி, 42, என்பவர், பொதுக் கழிப்பறையில் விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது. உதவிக்கு யாரும் இல்லாததால், ரவியை மொபட்டின் முன்பக்கம் வைத்து, ஜெகசாமி அரசு மருத்துவமனை கொண்டு சென்றார். உணவு இடைவேளையில் ...

பயணங்கள்

Posted: 01 May 2012 09:09 AM PDT

தந்தையின் விந்தும் கருவறை நோக்கித் தனிமையில் முதன்முதற் பயணம் முந்தவும் பின்னே இறையருள் கொண்டு முயற்சியால் வென்றதும் பயணம் பந்தென உருண்டு பக்குவத் திங்கள் பத்தினில் கருவறைப் பயணம் வந்திடும் தருணம் வந்ததும் நலமாய் வையகம் கண்டதும் பயணம் கருவறைப் பயண மிருந்ததை மறந்து கனவினில் மிதந்திடும் நீயும் ஒருமுறை எழும்பித் தீர்ப்பினைக் காணும் உறுதியை நம்பியே மரணம் வருவதும் பயணம்; அதுவரை உலகில் வாழ்வதும் நிலையிலாப் பயணம் பருவமும் மாறி வளர்சிதை மாற்றம் ...

ஆன்ட்ராய்ட்-எப் ட்ராய்டு

Posted: 01 May 2012 09:05 AM PDT

நண்பர்களே இன்றைய உலகில் போனில் அதிக அளவு விற்பனையாவது ஸ்மார்ட் போன்கள் அதுவும் ஆன்ட்ராய்டு வகை போன்கள் மிக அதிகமாக விறபனையாவதை அனைவரும் அறிந்ததே. ஆன்ட்ராய்ட் ஒரு இலவச இயங்குதளமாகும். இந்த வகை இயங்குதள போன்களுக்கு என்று வைத்திருந்த கூகிளின் ஆன்ட்ராய்ட் மார்கெட்டினை கூகிள் ப்ளே என்று பெயர் மாற்றியது சில நாட்களுக்கு முன்புதான் என்பதையும் அறிவீர்கள். சரி இந்த வகை ஆன்ட்ராய்ட் இயங்குதள போன்களுக்கு கூகிள் ப்ளே மட்டும்தான் உள்ளதான் என்று பார்த்தால் கூகிளை போன்ற சில தளங்கள் இருக்கதான் செய்கின்றன இதில் ...

"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என?

Posted: 01 May 2012 08:15 AM PDT

மினரல் வாட்டர்., பாட்டில் வாட்டர்., பயோ-பிராசஸ்ட் வாட்டர்., பாக்கெட் வாட்டர் எல்லாம்- பக்தர்கள் குடித்துக் கொண்டிருக்க... அழுக்குக் குளத்தில் கரை படப் போகும் பிள்ளையார்- வெறித்துப் பார்க்கிறார் பக்தர்களை அதீதப் பொறாமையுடன். ***************************************************************** தனது எல்லைக்குள் நுழையும் இன்னொரு நாயை விரட்டியடிக்கும் எனது நாய்- எப்போதும் பணிவுடனும், ஸ்னேகத்துடனும் இருக்கிறது- அதன் கழுத்துச் சங்கிலி இருக்கும் என்னிடம். ************************************************************************ ...

தமிழ் விடு தூது – தொடர் பதிவு

Posted: 01 May 2012 07:38 AM PDT

(திரு. மு.பெ.ச அவர்கள் எழுதிய உரையில் இருந்து சுருக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.) தூதுக்கள் பல வகை. இராமாயணத்தில் அங்கதன் தூது. பாரதத்தில் சஞ்சயன் தூது; உலூகன் தூது; கண்ணன் தூது; இவையெல்லாம் அரசியல் தூதுக்கள். ஒன்றும் வெற்றி பெறாத தூதுக்கள். இவற்றிற்கு மாறாக தலைவன் தலைவியிடையே நிகழும் காதல் தூதுக்கள் உண்டு. இவற்றை இலக்கியத்தில் காணலாம். சிவபெருமான் சுந்தரர்க்காக பரவையாரிடம் தூது சென்றார். வெற்றி பெற்ற தூது இது. இதுவல்லாமல் கவிஞர்கள் விட்ட கற்பனை தூதுக்கள் பல. தாமரை விடு தூது, நெல்விடு தூது, துகில் ...

கங்குலிக்கிபின் நீதி!!!!!

Posted: 01 May 2012 07:20 AM PDT

எனது நண்பர் ஒருவர் இங்கே ஹெ.ஆர். மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். புதிதாய் வேலைக்கு சேர்ந்த இடத்தில் ஒருவர் அவரிடம் வந்து " எனக்கு போன கம்பெனிலே 10000 தந்தாங்க சார். எனக்கு இங்க 14 ஆயிரம் கொடுக்கலாம்" என்று சொல்லியிருக்கிறார். வழக்கம் போல கிரிக்கெட்டில் இருந்து உதாரணம் சொல்லியிருக்கிறார் லபக்தாஸ். "கங்குலி 2 லட்சம் டாலரில் இருந்து தன்னை 4 லட்சம் டாலருக்கு உயர்த்திக் கொண்டார். அவரை யாருமே வாங்கவில்லை. ஆனால் 50 ஆயிரம் டாலரில் இருந்த முரளி கார்த்திக்கை 4 லட்சம் டாலர் தந்து வாங்கியிருக்கிறார்கள்.உன் ...

ஜோதிடம் விஞ்ஞானமா?

Posted: 01 May 2012 06:25 AM PDT

ஜோதிடம் விஞ்ஞானமா? நம் நாட்டின் எந்த ஊடகமாக இருந்தாலும் சரி அதில் நிச்சயம் சினிமா அதை விட்டால் ஜோதிடம் தான் பெரும்பாலும் நிரம்பியிருக்கும். ஜோதிடத்தால் நன்மையோ இல்லையோ கெடுதல் நிச்சயம் என்று தெரிந்தும் பெரும்பாலான படித்த மக்கள் கூட நம்புகிறார்கள். காரணம் ஜோதிடத்தை பக்தியோடு பின்னியதால் அதன் நம்பகத்தன்மையை கேள்வி கேட்கும் துணிவு பலருக்கும் இல்லை. இரண்டாவது எதிர்காலத்தை அறியும் மனித விருப்பமும் காரணம். ஜோதிடத்தை பற்றிய ஒரு் பாமரனின் பேட்டி இது. படித்தவர்களுக்கு பயன்படும். ஜோதிடம் எப்போது ...

பில்லா II (BILLA2) பாடல்கள் - தரவிறக்கம் :)

Posted: 01 May 2012 06:15 AM PDT

----------------------- கேங்க்ஸ்டர் ----------------------- இதயம் ---------------------- ஏதோ மயக்கம் --------------------- உனக்குள்ளே மிருகம் -------------------- மதுரை பொண்ணு ------------------- பில்லா 2 தீம் ------------------ நன்றி சினிமா பிக்ஸ் ------------------

ஒபாமாவின் போட்டோவைப் பயன்படுத்தி ஏர்டெல் கனெக்ஷன் வாங்கிய குசும்பர்!

Posted: 01 May 2012 05:47 AM PDT

ஒபாமாவின் போட்டோவைப் பயன்படுத்தி ஏர்டெல் கனெக்ஷன் வாங்கிய குசும்பர்! ஹைதராபாத்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் புகைப்படத்தைப் பயன்படுத்தி ஆந்திராவைச் சேர்ந்த ஒரு நபர் செல்போன் கனெக்ஷனை வாங்கிய செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்த அளவுக்கு இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அசட்டையாக செயல்படுகின்றன என்பதை இந்த ஒரு சம்பவம் வெளிச்சமாக்கியுள்ளது. ஆந்திர மாநிலம் நல்கொண்டாவைச் சேர்ந்தவர் எம்.பிரசாத். 21 வயதான இவர் செல்போன் இணைப்பு வாங்க ஏர்டெல் நிறுவனத்திடம் விண்ணப்பித்தார். அப்போது ...

முளைகட்டிய பயறு சாப்பிடுங்க, உடல் பூரிக்கும்!

Posted: 01 May 2012 05:36 AM PDT

முளைகட்டிய பயறு சாப்பிடுங்க, உடல் பூரிக்கும்! உடல் இளைத்து இருப்பதுதான் அழகு என்றுதான் பெரும்பாலான பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் சொல்லப்படுகிறது. ஆனால் சத்துக்களை குறைத்து உடலை ஒல்லியாக்குவது தேவையற்றது. அது உடலை பலவீனமாகத்தான் ஆக்கும். உடலில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசிய சத்துக்களும் வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் போதுமான அளவு இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இச்சத்துக்கள் குறையும்போது உடல் பலவீனமடைகிறது. இவற்றைப் போக்க மருந்து மாத்திரைகள் உண்பதை விட ஊட்டச்சத்துள்ள ...

நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Posted: 01 May 2012 05:19 AM PDT

நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி தமிழில் இருக்கும் அறநூல்களில் பதினெண் கீழ் கணக்கு நூல்களில் வராத நூல்களில் மேலும் ஒரு சிறப்பான நூல் நன்னேறி. இதை எழுதியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமாரசாமி தேசிகருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். தாமிரவர்ணிக் கரையிலுள்ள சிந்து பூந்துறையில் வாழ்ந்த வெள்ளியம்பலத் தம்பிரானிடம் இலக்கணம் கற்றார். இவர் நால்வர் நான்மணிமாலை, சோண சைல மாலை, கூவப் புராணம், பழமலை அந்தாதி, பிட்சாடன் நவமணிமாலை, பெரியநாயகியம்மை விருத்தம், பெரிய நாயகியம்மைக் ...

புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Posted: 01 May 2012 05:17 AM PDT

தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள், பதினெண் மேல் கணக்கு நூல்கள். கீழ் கணக்கு நூல்கள் வாழ்விற்கு தேவையான அறத்தையும் நீதி போதனையும் கூறுபவை ஆகும். மேல் கணக்கு நூல்கள் எட்டுத் தொகை, பத்து பாட்டு நூல்கள் ஆகும். எட்டுத் தொகை நூல்களுள் அறம், போர், வீரம் போன்ற புற வாழ்க்கை பற்றி கூறும் நூல் புற நானூறு. மொத்தம் நானூறு பாடல்களை கொண்டது. தற்காலத்தில் நாம் ஒருவரிடம் உதவி கேட்டு, கேட்டது கிடைத்தால் அவரை பாராட்டுகிறோம். உதவியை மறுத்தாலோ, குறைத்து கொடுத்தோலோ அவரை பற்றி குறை கூறுவோம். ...

படித்ததும் பகிர்ந்ததும் - பேகன்

Posted: 01 May 2012 04:38 AM PDT

இந்த பகுதியில் நான் படிச்ச எனக்கு மிகவும் பிடித்தவைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.. ஒரு தேவதை மீளாத் துயில் கொள்கிறாள் எனக்கு மிகவும் பிடித்த பண்டிகைகளில் ஒன்று பொங்கல்,பொங்கல் நாளை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாமல் மனது கிடந்தது தவிக்கிறது,பச்சுலர் லைபில் என்ன இழவுப் பொங்கல் என நீங்கள் கேட்டாலும் நான் பொங்கலை ஏதாவது வகையில் கொண்டாடி விடுவேன்,பொங்கல் என்று சொல்லப் படும் பண்டிகையை தெலுங்கர்கள் சங்கராந்தி என வேறு விதமாக வேறு கொள்கையில் கொண்டாடுவார்கள்,எனக்கு பெங்களூரில் இருக்கும் நண்பர்களில் ...

வார/மாத இதழ்கள்: புதியவை - ஜூனியர் விகடன் 6/5, குங்குமம் 7/5, டாக்டர் விகடன் 1/5

Posted: 01 May 2012 03:29 AM PDT

புதிய வார/மாத இதழ்கள். ~~~~~~~~~~~~~~~~~~~ Mirrorcreator.com லிங்கில் சென்று உங்களுக்கு தேவையான serverல் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும். Code:mirror creator லிங்கில் கிழிகண்ட server link உள்ளது. depositfiles.com, rapidshare.com, zshare.com, badonga.com, ziddu.com, 2shared.com, jumbo.com, ..... mirrorcreator லிங்கில் தரவிறக்கம் உதவிக்கு கீழே உள்ள லிங்கில் பார்க்கவும் http://www.eegarai.net/t83257p195-30-4-28-4-26-4-23-4#785894 குறிப்பு: அனைத்து பதிவுகளும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது.இணையத்தில் ...

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20

Posted: 01 May 2012 02:49 AM PDT

வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியாது என்று இன்னொரு பிரிவினரும் கூறிக்கொண்டு இருக்கிறார்கள் ,அவர்கள் அவ்வாறு கூற காரணமாக இருப்பது மாயன் , அதான் தெரியுமே மாயன் கலெண்டர் 2012 ல முடியுது அதனால அழியும் னு சொல்றாங்க இது எல்லாருக்கும் தெரியுமே புதுசா நீ என்ன சொல்லபோரன்னு கேட்குறீங்களா ? கண்டிப்பா இது ஒரு புது விஷயம் தான் ,இந்த கட்டுரை யை இப்போ படிக்கிறவங்களுக்கு ஒரு புது விஷயம் தான் உதாரணமா இந்த கட்டுரை ல இருக்குற 2 சின்ன தகவல்கள் 1.இப்போ உலகமே பயப்படுற ...

டேஸ்டி மாம்பழ ஜாம்

Posted: 01 May 2012 02:42 AM PDT

டேஸ்டி மாம்பழ ஜாம் இது மாம்பழ சீசன், மாம்பழம் கிடைக்கும் காலத்தில் கனிந்த மாம்பழங்களில் இருந்து ஜாம் தயாரித்து வைத்துக்கொள்ளலாம். இது அவசர காலத்தில் குழந்தைக்களுக்கு டிபனுக்கு வைத்து கொடுக்கலாம். தேவையான பொருட்கள் பழுத்த மாம்பழம் - 2 வெல்லம் - 100 கிராம். செய்முறை: மாம்பழத்தை சுத்தமாக தோல் சீவி மிக்சியில் அரைக்கவும். ஒரு தாம்பாளத்தில் ஊற்றி வெய்யிலில் இரண்டு நாள் காய விடவும். நன்கு இறுகிவிடும். பின்பு வெல்லத்தை கரைத்து வடிக்கட்டி பாகு காய்ச்சி, காய வைத்த மாம்பழக் கூழில் கொட்டி ...

"அலையத் துவங்கும் வயது"

Posted: 01 May 2012 02:37 AM PDT

ஊஞ்சல் மரம்... ஆடும் சிறுவன். அலையும் கயிற்றோடு அலையத் துவங்குகிறது எனது பழைய வயது. ************************************************ சிலுவை முள் ஆணிகள்... இரத்தம் வழியும் உடல். இயேசுவின் தோட்டத்திலிருந்து ஒரு வண்ணத்துப் பூச்சி. தேன் தேடி மோதித் திரும்புகிறது.... காகிதப் பூக்களில். பிறகு.... தற்கொலை செய்து கொண்டு விடுகிறது தனது வண்ணங்களை உதிர்த்தபடி. உயிர்த்தெழுந்து விடும்.... என்ற நம்பிக்கையைப் படித்தபடி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாங்கள். ************************************************************ மழைக் ...

நன்மை விளையும் நமக்கு !!

Posted: 01 May 2012 01:59 AM PDT

வட்டமாக சுட்டெடுத்த வெண்மையான அப்பத்தை தட்டத்தில் வைத்தடுக்கி தாயவள்தூக் கிச்சென்று சுட்டெரிக்கும் நண்பகலில் சுற்றிசுற்றி விற்பது துட்டிற்கு மட்டுமல்ல தூக்கினை தன்குடும்பம் தொட்டிடாதி ருக்கவுந்த் தான் பஞ்சுமிட்டாய் தோழதன் பக்கமாய் தொங்கவிட்டு கொஞ்சம் பணம்வரினும் கொள்கையை மாற்றாது நெஞ்சில் உறுதியுடன் நீண்ட பயணமிட்டு பிஞ்சுகளின் கைகளை புத்தகம் தாங்கசெய்ய மிஞ்சும் பணத்தை முழுதாக பாதுகாத்து விஞ்சும் உழைப்பாளன் வாழ் நன்னீரும் காற்றும் நினைவில் இருந்திட்டால் நன்மை விளையும் நமக்கு ...

உழைப்பாளர் தினம் ! கவிஞர் இரா .இரவி

Posted: 01 May 2012 01:46 AM PDT

உழைப்பாளர் தினம் ! கவிஞர் இரா .இரவி வருடத்தில் ஒரு நாளாவது உழைக்கும் உழைப்பாளிகளை உலகம் நினைத்துப் பார்ப்பதற்கு நன்றி ! தினம் தினம் உழைக்கும் உழைப்பாளிகளை உழைப்பாளர் தினத்திலாவது நினைத்து மகிழ்வோம் ! உலகம் உருவானதும் உயர்வானதும் உழைப்பாளிகளின் ஒப்பற்ற உயர்ந்த உழைப்பால் ! பாலங்கள் கட்டியதும் அணைகள் கட்டியதும் வாகனங்கள் செய்ததும் சாலைகள் போட்டதும் உழைப்பாளிகள் ! உழைப்பாளிகள் ! உழைப்பாளிகள் ! உழைப்பாளிகள் உழைப்பு மதிக்கப் பட வேண்டும் ! உண்ண உணவு வழங்கியவர்கள் ...

மதுரையில் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது: ராமர் கோவிலை தகர்க்க சதியா?

Posted: 01 May 2012 12:23 AM PDT

மதுரையில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. நாளை மீனாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதே போல பாஜகவின் மாநில மாநாடு வரும் 10ம் தேதி விரகனூரில் நடைபெறவுள்ளது. இதற்கான பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அங்கும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். மாநாட்டு பந்தல் பகுதிக்குள் செல்பவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். இந் நிலையில் இன்று அதிகாலை மதுரை அண்ணா நகர் பகுதியில் ஒரு தியேட்டர் ...

பெரும் கஷ்டத்தில் 3ல் ஒரு இந்தியர்!

Posted: 01 May 2012 12:11 AM PDT

பெரும் கஷ்டத்தில் 3ல் ஒரு இந்தியர்! டெல்லி: இந்தியாவின் மந்தமான பொருளாதார வளர்ச்சியும் பணவீக்கமும் மக்களை பெரும் பாடுபடுத்தி வருவதாக கேலப் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. கேலப் பைனான்சியல் வெல்பீயிங் இன்டெக்ஸ் (Gallup's Financial Wellbeing Index) எனப்படும் மக்களின் மனநிலையை வெளிப்படுத்தும் குறியீட்டு எண் தொடர்பான கருத்துக் கணிப்பில் 3ல் ஒரு இந்தியர் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டு, கடுப்பில் உள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் தங்களது பொருளாதாக நிலை ...

வேலன்:-கம்யூட்டரில் துவங்குகையில் உள்ள தை அறிந்துகொள்ள உதவும் சாப்ட்வேர்.

Posted: 30 Apr 2012 11:53 PM PDT

அதிகபடியான சுமை கொடுத்து ஒருவரை மலைஏறச்சொன்னால் மிகவும் சிரமப்பட்டு மலையேறுவார். ஆனால் அவருக்கே கொஞ்சமாக சுமைகொடுத்து ஏற சொன்னால் விறுவிறு என்று ஏறிவிடுவார்.அதுபோல நமது கம்யூட்டர் ஆன்ஆகும் சமயம் அதிகப்படியான ப்ரேகிராம்களை ஸ்டார்ட்அப்பில் வைத்தால் நமது கம்யூட்டர் ஆன்ஆகவே சற்று நேரம் எடுக்கும். அதனை தவிர்த்து அவசியமானவையை மட்டும் நாம் ஸ்டார்அப்பில் கொண்டுவரலாம்.நீங்கள் கம்யூட்டரில் நன்கு பழகியவராக இருந்தால் -Start -Run -msconfig--தட்டச்சு செய்து கீழ்கண்ட விண்டோவில் ஸ்டாப்அப் ப்ரோகிராம்களை கண்ட்ரோல் ...

48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார்: மாவோயிஸ்ட் தரப்பு அறிவிப்பு

Posted: 30 Apr 2012 11:10 PM PDT

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன், 48 மணி நேரத்தில் விடுவிக்கப்படுவார்' என, அரசு தரப்பு மத்தியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மாவோயிஸ்ட்களால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்ட கலெக்டரான, தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால் மேனனை, கடந்த 20ம் தேதி, மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர். அவரை விடுவிப்பது குறித்து பேச்சு நடத்துவதற்காக, மாவோயிஸ்ட் தரப்பில், பேராசிரியர் ஹர்கோபால், பி.டி.சர்மா ஆகியோரும், அரசு தரப்பில், நிர்மலா ...

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான உணவுப் பழக்கங்கள்

Posted: 30 Apr 2012 11:02 PM PDT

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான உணவுப் பழக்கங்கள் பற்றி இலங்கை கல்முனையை சேர்ந்த எங்களது நண்பர் எழுத்தாளர் திருமதி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்கள் அருமையான கட்டுரை எழுதியிருக்கிறார்கள். அவரது அனுமதியின் பேரில் அந்த கட்டுரையை எனது பதிவாக இன்று வெளியிட்டிருக்கிறேன். திருமதி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றிகளும், வாழ்த்துகளும். நம் உடம்பிற்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் தண்ணீர் என நான்கு வகையென நாம் தெரிந்து கொண்டோம். ...

மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா?

Posted: 30 Apr 2012 10:54 PM PDT

பெஸ்தாரி ஜெயா (பத்தாங் பெர்ஜுந்தை) தாமான் தென்னமரம் மைதானத்தில் நடைபெற்ற 'ஒரே மலேசியா' உதவித் திட்டம் குறைந்தபட்சம் இருவரின் உயிரைப் பலிகொண்டுள்ளது என்ற செய்தி தற்போது காட்டுத்தீ போல் பரவிவருகிறது. ஆனால், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தேசிய முன்னணி பேராளர்கள் அச்சம்பவத்தை எப்படியாவது மூடிமறைக்க வேண்டும் என்பதில் கண்ணுங்கருத்துமாகவும் உறுதியாகவும் இருக்கின்றனர். சுற்றுவட்டார மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் எந்த மரணமும் பதிவு செய்யப்படாதது அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது. 'ஒரே ...

தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Posted: 30 Apr 2012 10:37 PM PDT

உறவுகளுக்கு வணக்கம் தரவிறக்க வேண்டுகோளுக்காக ஒரு திரி தொடங்கலாம் என நினைத்தேன் .. இங்கே நீங்கள் வேண்டும் தரவிறக்க லிங்க்களை பகிரலாம் என்று இருக்கிறேன் .. மேலும் இதில் சீரியல் எண்கள் , காப்பி ரைட் மென்பொருட்கள் போன்றவை ஈகரையில் தடை செய்ய பட்டு உள்ளதால் , அதை உறவுகள் கேட்க வேண்டாம் ... ஈகரையின் ஜாம்பவான்கள் இங்கு உங்களுக்கு உதவி செய்வார்கள் .. ஈகரையோடு தொடர்ந்து இணைந்து இருங்கள் ..