I tamil web

I tamil web


ஈழத் தமிழருக்கு கைகொடுக்கத் தயாராகியுள்ள அமெரிக்க மாணவர் சமூகம்! (வீடியோ,படங்கள்)

Posted: 29 Apr 2012 09:58 AM PDT


சர்வதேச பொது மன்னிப்பு சபை(Amnesty International) என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பில், அமெரிக்க உயர்கல்வி மாணவ சமூகத்தினால், நியூயோர்க் நகரில் சிறிலங்கா தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வொன்று, பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
"Get on the Bus for human rights " எனும் தலைப்பில், சிறிலங்கா தொடர்பில் ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு நிகழ்வானது, உள்ளக அரங்க நிகழ்வாகவும், வெளித்திடல் கவனயீர்ப்பு போராட்டமாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.




உள்ளக அரங்க நிகழ்வில், அம்னெஸ்ரி அமைப்பின் மேலாளர் Director Susan Nossel ,சிறிலங்காவில் இருந்து தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள பிரபல ஊடகவியலாளர் ஏ.எஸ்.திசநாயகம் மற்றும் பர்மா ,இந்தோனேசிய பிரதிநிதிகள் பலரும் உரையாற்றியிருந்தனர்.


காணமல்போயும் , கடத்தி வைக்கப்பட்டும் உள்ளவர்களது நிலையினை வலியுறுத்தும் வகையில் இடம்பெற்றிருந்த நிகழ்வரங்கொன்று, பர்மிய பெண்ணொருவரினால் மேற்கொள்ளப்பட்டமை அனைவரது கவனத்தினையும் பெற்றது.


அண்ணளாவாக 700க்கும் மேற்பட்ட உயர்கல்வி மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர். உள்ளரங்கினைத் தொடர்ந்து, சிறிலங்காவின் உயர்ஆணையத்தினை நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள், சிறிலங்காவே உன்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றோம் என தொடர் முழக்கமிட்டனர்.


இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி சான் சுந்தரம், அமெரிக்கர்கள் இவ்வாறு சிறிலங்கா தொடர்பில் அணிதிரள்வதும், குறிப்பாக மாணவ சமூகம் சிறிலங்காவின் விவகாரத்தினை கையிலெடுத்திருப்பது நம்பிக்கையினைத் தருவதாக உளள்ளதென தெரிவித்தார்.சிறிலங்காவின் முள்வேலிக்குள் அகப்பட்ட தமிழர்கள் மற்றும் வெள்ளைக்கொடியேந்திய தமிழர்களை சிறிலங்கா இராணுவத்தினர் படுகொலை செய்திருந்தமை ஆகியனவற்றை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருந்த ஒவியங்கள் இவ்விரு நிகழ்வுக்களிலும் முக்கிய இடத்தினைப் பிடிந்திருந்தது.





கடற் கன்னிகள் எனும் பெயரால் கடலடியில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் கனவுக் கன்னிகள்! (வீடியோ இணைப்பு)

Posted: 29 Apr 2012 06:56 AM PDT


கடற் கன்னிகள் பற்றி கேள்விப்பட்ட யாவரும் அவர்களை தரிசிக்க முடியாமல் தவித்திருப்பார்கள். ஆனால் இக்குறையை அமெரிக்காவின் புளோரிடா மானிலத்தில் காணப்படும் வீக்கி வாச்சி ஸ்பிறிங்ஸ் என்ற பூங்காவிற்குச் சென்றால் நிறைவேற்றிக் கொள்ளலாம்.


ஆம், அப்பூங்காவில் காணப்படும் நீர்த்தடாகம் ஒன்றில் கடற்கன்னி வடிவத்தில் ஆடையணிந்த சில கனவுக் கன்னிகள் தோன்றுவார்கள் அவர்களைப் பார்க்கும் போதே அசல் கடற்கன்னிகள் போன்றே தோற்றமளிப்பார்கள்.

பேரினவாத அரசை தூக்கில் தொங்க வைப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் கிளஸ்டர் குண்டு ஆதாரங்கள்! (படங்கள்)

Posted: 29 Apr 2012 02:19 AM PDT


விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடையப் போகின்ற நிலையில், போர்க்குற்ற விசாரணைகள் பற்றிய சர்ச்சை தீர்வதற்கு முன்னர், அரசாங்கத்துக்கு இன்னொரு பிரச்சினை முளைத்திருக்கிறது.விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது அரசபடைகளால் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஐ.நா.வின் வெடிபொருள் நிபுணர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவலே இந்தப் பிரச்சினைக்கான மூலகாரணம்.


புதுக்குடியிருப்பில் அண்மையில் இடம்பெற்ற ஒரு வெடிவிபத்தில் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்தே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.உலோகங்களாக விற்பதற்காக, வன்னியில் சிதறிக் கிடந்த குண்டுகளின் பாகங்களை சேகரித்து வைக்கப்பட்டிருந்த வீட்டில்தான், அந்த வெடிவிபத்து ஏற்பட்டது.கிளஸ்டர் குண்டின் ஒரு பகுதியான சிறிய குண்டு ஒன்று வெடித்தே, சிறுவன் மரணமானதாக, ஐ.நா கண்ணிவெடி அகற்றும் திட்டத்தின் தொழில்நுட்ப ஆலோசகரான அலன் போஸ்டன் தெரிவித்துள்ளார்.











இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்தான், முதல்முறையாக கிளஸ்டர் குண்டு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.இந்தச் செய்தி உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கிளஸ்டர் குண்டுகள் உலகின் மிகமோசமாக ஆயுதங்களாக கருதப்படுபவை.ஒரு குண்டை விமானத்தில் இருந்து வீசும் போது, அது கீழே விழுந்து, அதிலுள்ள நூற்றுக்கணக்கான சிறிய குண்டுகள் பிரிந்து, வெடித்துச் சிதறி பரவலான சேதங்களை ஏற்படுத்தும்.பேரழிவு ஆயுதங்களில் ஒன்றாக கருதப்படும் இந்தக் கிளஸ்டர் குண்டுகள் உள்நாட்டுப் போர்களில் பயன்படுத்தப்படுவதை சர்வதேச போர்ச்சட்டங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.உள்நாட்டுப் போர்களில் பயன்படுத்தப்படக் கூடாது என்று கூறப்படும் விமானக் குண்டுகளும், ஆட்டிலறிகளும் இலங்கைப் போரில் மிகச் சாதாரணமாகவே பயன்படுத்தப்பட்டன.


இந்தநிலையில்தான் கிளஸ்டர் குண்டு பற்றிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.பேரழிவு ஆயுதமாக கருதப்படுவதால், கிளஸ்டர் குண்டுகளை உலகில் இருந்தே நாடுகளுக்கிடையிலான போர்களின் போதும் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சர்வதேச உடன்பாடு ஒன்று 2010ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்டுள்ளது.உலகில் உள்ள 60 நாடுகள் இதில் ஒப்பமிட்டுள்ளன.இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர்தான், கிளஸ்டர் குண்டுகளைத் தடை செய்யும் உடன்பாடு கையெழுத்திடப்பட்ட போதும், இலங்கை அதில் கையெழுத்திடவில்லை.கிளஸ்டர் குண்டுகளைத் தாம் பயன்படுத்தவில்லை என்று கூறும் அரசாங்கம், இந்த உடன்பாட்டில் கையெழுத்திட மறுப்பது சந்தேகத்துக்குரியதே.பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய கிளஸ்டர் குண்டுகள் உள்நாட்டுப் போர்களில் பயன்படுத்தப்படுவதை கிட்டத்தட்ட ஒரு போர்க்குற்றமாகவே சர்வதேச சமூகம் கருதுகிறது.அதுவும், இலட்சக்கணக்கான மக்கள் குவிந்திருந்த குறுகலான போர் தவிர்ப்பு வலயப்பகுதி ஒன்றின் மீது இத்தகைய குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது சாதாரண விடயமாக ஏற்றுக் கொள்ள முடியாது.புதுக்குடியிருப்பில் தான் இந்த கிளஸ்டர் குண்டு பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா நிபுணர் கூறியுள்ளார்.2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், ஐ.நா முதல் முறையாக கிளஸ்டர் குண்டு பற்றிய குற்றச்சாட்டை சுமத்தியிருந்தது.ஆட்டிலறி ஷெல்களின் மூலம் கிளஸ்டர் குண்டுகள் ஏவப்படுவதாக அப்போது சந்தேகம் எழுப்பப்பட்டது.அதற்குக் காரணம், ஆட்டிலறி ஷெல்கள் வீசப்பட்ட சற்று நேரத்தில் அடுத்தடுத்து சிறிய வெடிப்புகள் பல நிகழ்ந்ததுதான்.


அரசாங்கம் அப்போது அதை நிராகரித்தது விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் புதுக்குடியிருப்புச் சமர் மிகவும் உக்கிரமானது.சிறியதொரு நகரான புதுக்குடியிருப்பைக் கைப்பற்றுவதற்கான சமர் பல வாரங்களாக நீடித்தது.புதுக்குடியிருப்பையே தமது இறுதித் தளமாகக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளுக்கு, அது வாழ்வா சாவா என்ற போராட்டமாகவே இருந்தது.இதனால் எல்லா வளங்களையும் ஒன்று திரட்டி அவர்கள் கடுமையாகப் போரிட்டனர்.இதனால், புலிகளைப் பின்தள்ளுவதற்கு அரசபடைகள் கடுமையாகப் போரிடவும் விலை கொடுக்கவும் வேண்டியிருந்தது.எனவே, அந்தப் பகுதியில் கிளஸ்டர் குண்டுகளுக்கான ஆதாரங்கள் சிக்கியிருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.2009 ஏப்ரல் முதல் வாரத்தில் புதுக்குடியிருப்பை அடுத்து ஆனந்தபுரம் பகுதியில் நிகழ்ந்த சமர் தான், விடுதலைப் புலிகளின் மிகப்பெரிய வரலாற்றுத் தோல்விக்குக் காரணமாகியது.அதுவே அவர்கள் சந்தித்த மிகப்பெரிய இறுதிப் போராகவும் அமைந்தது.


இந்தப் போரில் விடுதலைப் புலிகளின் முக்கியமான தளபதிகள் உள்ளிட்ட 600 வரையான போராளிகள் கொல்லப்பட்டனர்.அந்தச் சமரின் போது, அரசபடைகளின் முற்றுகையில் சிக்கியிருந்த புலிகளை அழிக்க, கிளஸ்டர் குண்டுகள், எரிகுண்டுகள் போன்ற தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.இந்தச் சமரின் பின்னர் அரசபடைகளால் மீட்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் உடல்கள் மோசமாக சிதைந்து காணப்பட்டதும், எரிந்து போயிருந்ததும் குறிப்பிடத்தக்கது.எனினும், இது பொதுமக்களைச் சார்ந்த ஒரு சம்பவமாக இல்லாததால், இதுபற்றி எந்தவொரு குழுவும் கவனத்தில் எடுத்து விசாரணை மேற்கொள்ளவில்லை.இந்தநிலையில், புதுக்குடியிருப்பில் கண்டறியப்பட்டுள்ள கிளஸ்டர் குண்டு பற்றிய ஆதாரம், சர்ச்சையாக உருவெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


போன்போது கிளஸ்டர் குண்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஏற்கெனவே ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.ஆனால், கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும், அதுபற்றி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் ஐ.நா நிபுணர்குழு கூறியிருந்தது.அதேவேளை, நல்லிணக்க ஆணைக் குழுவின் முன்னால் சாட்சியமளித்தவர்களும் கிளஸ்டர் குண்டுகள் வீசப்பட்டதாக கூறியிருந்தனர்.பலரின் காயங்களில் அதற்கான தடயங்கள் இருந்தன.விமானத்தில் இருந்தும், ஆட்டிலறிகளின் மூலம் வீசப்பட்ட குண்டுகள் அடுத்தடுத்து பல சிறிய குண்டுகளாக வெடித்ததாகவும், தாமதித்து வெடித்ததாகவும் பலர் சாட்சியமளித்திருந்தனர்.ஆனாலும் இலங்கை அரசாங்கம் அதனை மறுத்து வந்துள்ளது.இந்தநிலையில் தான் புதிய ஆதாரங்களை ஐ.நா நிபுணர் கூறியுள்ளார்.


இது இலங்கைக்கு கடும் நெருக்கடி ஒன்றை உருவாக்கக் கூடும்.ஏனென்றால், அரசாங்கமே போர் தவிர்ப்பு வலயமாக அறிவித்த பகுதிகளில், இலட்சக் கணக்கான மக்கள் குவிந்திருந்த பகுதிகளில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை சர்வதேச சமூகம் நியாயமானதென்று ஏற்றுக் கொள்ள வாய்ப்பில்லை.எனவே சர்வதேச விசாரணை வலியுறுத்தும் அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கலாம்.ஏற்கெனவே, பல்வேறு நெருக்கடிகள், அழுத்தங்களில் சிக்கிப் போயுள்ள அரசாங்கத்துக்கு புதியதொரு சிக்கலாக கிளஸ்டர் குண்டும் உருவெடுக்கப் போகிறது.தாம் கிளஸ்டர் குண்டுகளைப் பாவிக்கவில்லை என்று கூறும் அரசபடைகள், புலிகள் அதனைப் பாவித்தற்கான ஆதாரம் இல்லை என்கிறது.


அப்படியானால் போர் நடந்த பிரதேசத்தில் இவை எப்படி வந்தன என்ற கேள்விக்கு அரசாங்கம் நிச்சயம் பதிலளித்தேயாக வேண்டியிருக்கும்.வன்னியில் போர் இடம்பெற்ற பகுதிகளுக்கு, பொதுமக்களையோ சர்வதேச அமைப்புகளையோ அரசாங்கம் உடனடியாக அனுமதிக்கவில்லை.சர்வதேச சட்டங்களுக்கு முரணான சம்பவங்களின் ஆதாரங்களை வெளிப்படுத்தும் தடயங்கள் அகற்றப்பட்ட பின்னர் தான், அங்கு வெளியார் அனுமதிக்கப்பட்டனர்.ஆனாலும் அதையும் மீறி ஒரு சான்று ஐ.நாவிடம் சிக்கியுள்ளது.கிளஸ்டர் குண்டுகள் வன்னியில் வீசப்பட்டதற்கு ஏற்கனவே ஆதாரங்கள் பல வெளியாகின.விமானத்தில் இருந்து வீசப்பட்டு வெடிக்காத கிளஸ்டர் குண்டின் நிழற்படங்களும் வெளியிடப்பட்டன.ரஷ்யத் தயாரிப்பான அந்தக் குண்டின் எழுதப்பட்டிருந்த ரஷ்யமொழி எழுத்துகள் பெயின்ற் பூசப்பட்டு அழிக்கப்பட்டிருந்தன.


அப்போது சர்வதேச சமூகம் அதைக் கண்டு கொள்ளவில்லை.ஐ.நாவின் கையில் இப்போது ஆதாரமாகச் சிக்கியுள்ள நிலையில், கிளஸ்டர் குண்டு விவகாரத்தை சர்வதேசம் இனிமேல் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் சர்வதேச சமூகத்தை எவ்வாறு திருப்திப்படுத்துவது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கும் அரசுக்கு கிளஸ்டர் விவகாரம் பெருந்தலைவலியாகவே அமையப் போகிறது.


சுபத்ரா

பச்சை முகில்களின் தோற்றம் உலக அழிவின் அறிகுறியா? (படங்கள், வீடியோ இணைப்பு)

Posted: 29 Apr 2012 12:30 AM PDT


ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவுக்கு மேலாக கடந்த 26 ஆம் திகதி வானத்தில் திடீரென்று பச்சை நிற முகில்கள் பரவலாக தோன்றி இருந்தன. இதனால் அந்நாட்டில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.


வேற்றுக் கிரகவாசிகளின் வேலையாக இருக்குமோ? என்று சிலர் சந்தேகப்பட்டனர். உலகத்தின் இறுதி நாள் வந்து விட்டது என்று சொல்லி இன்னும் சிலர் திகிலை ஏற்படுத்தினர். கடவுளுடைய அருளின் வெளிப்பாடு என்கின்றனர் வேறு சிலர். ஆனால் இரசாயன பேரழிவு ஒன்றை இது கட்டியம் கூறுகின்றது என்றே அநேகர் நம்பினர். மக்கள் அமைதியாக இருக்க வேண்டும், பதற்றம் அடைய வேண்டாம் என்று அரசு கோரியது.


மொஸ்கோவில் உள்ள பாரிய இரசாயன தொழில்சாலை ஒன்று தீப்பற்றி எரிந்தது என்றும் இங்கிருந்து கிளம்பி சென்ற இராசாயன பொருட்கள்தான் பச்சை முகில்களாக சூழ்ந்து நிற்கின்றன என்றும் பொதுமக்கள் விசுவாசிக்கின்றனர்.ஆனால் பூச்ச மரங்கள் பூத்து உள்ளன என்றும் இவற்றில் இருந்து வெளியேறிய மகரந்தங்கள்தான் பச்சை முகில்களாக சூழந்து நிற்கின்றன என்றும் இவை பாரதூரமான ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும் என்பதால் மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்து உள்ளது. மொஸ்கோவில் பாடசாலைகள் மூடப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றார்கள்.எனினும் அரசு உண்மையை மறைக்கின்றது என்றே பெருமளவிலானோர் சந்தேகிக்கின்றனர்.





உல்லாசம் தேடிவந்த அழகிகளின் உயிரை உறையவைத்த சம்பவம்! (வீடியோ இணைப்பு)

Posted: 29 Apr 2012 12:17 AM PDT

அழகிகள் மூவர் வீட்டிலிருந்து வெளியே சென்று சாப்பிங் செய்தனர். சாப்பிங் முடிந்ததும் வீடு திரும்பிய அவ் அழகிகள் மூவருக்கும் அங்கு உயிரை உறையவைக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அப்படி என்ன சம்பவம்? வீடியோவைப் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்....





கட்டுடல் அழகிகளின் ஜொலிப்பின் ரகசியம்! (படங்கள் இணைப்பு)

Posted: 29 Apr 2012 12:06 AM PDT

தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் கட்டுடல் அழகை காட்டி போட்டிகளில் பங்கேற்பதற்கு தயாரக உள்ளனர். இதன் அடிப்படையில் ரஷ்ய கட்டுடல் அழகிகள் சிலர் போட்டியில் பங்குபற்ற முன்பு என்னென்னவெல்லாம் செய்கின்றார்கள் என்பதை எடுத்துக்காட்டும் புகைப்படங்கள் இணையத்தளங்களில் உலாவி வருகின்றன.







நாங்களும் அழகிகள் தானே? (வீடியோ,படங்கள் இணைப்பு)

Posted: 28 Apr 2012 07:11 PM PDT


முதன்முறையாக பிரான்சின் கறுப்பழகிக்கான போட்டி இன்று பரிசிலுள்ள Salle WAGRAM இல் நடைபெற உள்ளது. 1000 போட்டியாளர்களுள் தேர்ந்தெடுக்கப்பட்ட 17 முதல் 28 வயதுடைய 18 இளம் பெண்கள் இவ்விறுதிப் போட்டியில் கலந்து கொள்கின்றனர். இது கறுப்பர்களுக்கான சங்கங்களின் கூட்டமைப்பின் ஆதரவுடன் நிகழ்கின்றது.


'பிரான்சின் அழகிகளுக்கான போட்டியில் கறுப்பின அழகிகளுக்கான இடம் மிகவும் அரிதாகவே கிடைக்கின்றது. கறுப்பின அழகிகள் மீது விழாது இருக்கும் ஊடகங்களின் பார்வையை இவர்கள் மீது திருப்புவதே எனது நோக்கம்' என அமைப்பாளர் Fred ROYER தெரிவித்திருந்தார். மேலும் 'இதில் பங்குபெறும் அழகிகள் பலரால் பார்க்ப்படாமலும் நிறவேறுபாட்டால் பல விடயங்களிலும் ஒதுக்கப்பட்டிருந்தார்கள். இவர்களது அழகும் கம்பீரமும் இவர்கள் அணிந்து வலம்வர இருக்கும் ஆடைகளிலும் நீச்சல் உடைகளிலும் இன்று வெளிப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.









மாப்பு... மலேசியாவில் மட்டும்தான் இப்படியாம்! (வீடியோ இணைப்பு)

Posted: 28 Apr 2012 06:39 PM PDT


மலேசியாவில் மட்டும் இவை சாத்தியம் எனும் பொருத்தமான பெயருடன் வேடிக்கையாக இவ் வீடியோவை உருவாக்கியிருக்கிறார்கள்.மலேசிய வானொலியான hitz.fm முடன் இணைந்து மக்களுக்காக மக்களே எழுதி உருவாக்கியிருப்பதாக கூறியுள்ளனர்.


இதுவரை மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்து யூடியூப்பில் ஹிட்டாகியுள்ள இவ் வீடியோவில் அப்படி என்னதான் உள்ளது நீங்களே பாருங்கள்.

வை திஸ் கொலைவெறியைத் தொடர்ந்து பில்லா-2ன் மெகா ஹிட் பாடல்! (வீடியோ இணைப்பு)

Posted: 28 Apr 2012 06:39 PM PDT


நடிகர் தனுஸ் பாடிய வை திஸ் கொலைவெறி பாடல் உலகளாவிய ரீதியில் ஹிட் ஆனதுடன் அனைவரது வரவேற்பையும் பெற்றிருந்தது. இப்பாடலை சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டிருந்தது.


தற்போது அதே சோனி மியூசிக் நிறுவனம் அஜித் குமாரின் பிரம்மாண்டமான நடிப்பில் வெளியாகும் பில்லா-2ன் "டான் டான்" என ஆரம்பிக்கும் பாடலை வெளியிட்டுள்ளது. இப்பாடலும் தற்போது பிரபலமடைந்து வருகின்றது.

நயன்தாராவின் கர்ப்பைச் சூறையாடிய சி(வ)ம்பு! (வீடியோ இணைப்பு)

Posted: 28 Apr 2012 06:39 PM PDT

திரையுலகில் அறிமுகமாகி சில காலத்திலேயே பல கிசு கிசுக்களைச் சம்பாதித்தவர் நடிகை நயன்தாரா. இவர் நடிகர் சிம்புவுடன் காதல், ஊடல் எனத் திரிந்த காலத்தில் மிகவும் நெருக்கமாக பழகியதுடன் படப்பிடிப்புக்களிலும் உள்ளம் கூசாமல் வெளிப்படையாக பல காட்சிகளில் நடித்துள்ளனர் என்பது யாவருக்கும் வெளிச்சம்.

மீனுக்கு எமனாகிய இராட்சத சிலந்தி! (படம் இணைப்பு)

Posted: 28 Apr 2012 06:38 PM PDT


எட்டுக்கால்களைக் கொண்டதும், பயங்கரத் தோற்றத்தைக் கொண்டதுமான சிலந்திகள் வாயிலிருந்து வெளியேறும் திரவத்தைப் பயன்படுத்தியே இரைகளைக் கொல்கின்றன.


இருந்தும் பசியின் கொடுமையால் இங்கு வழமைக்கு மாறாக நீர்நிலையில் இறங்கி அங்குள்ள மீனை இரையாக்கியுள்ளது.