தமிழ் ஜோதிடம் களஞ்சியம்

தமிழ் ஜோதிடம் களஞ்சியம்


கொலைவெறிக்கு ஒரு கடிதம்

Posted: 24 Apr 2012 06:53 PM PDT

பல வருடங்களுக்கு முன்.. "கடவுளே!! இந்த மனித இனத்தின் கொடுமைக்கு அளவேயில்லையா ? எங்களை அழித்து வரும் இவர்களுக்கு நீ தண்டனை தர மாட்டாயா" என அனைத்து மரங்களும் கடவுளிடம் முறையிட்டன. சற்று நேரம் யோசித்தக் கடவுள் சொன்னார் கவலை வேண்டாம். இன்று நான் பூமிக்கு அனுப்பப் போகும் ஒருவனால் உலகமே அல்லோலகலப் படப்போகிறது. உங்களை அழித்து காகிதமாக்கி அதை வீணடிக்கும் மூடர்களை அந்த காகிதம் மூலமே பாடம் புகட்டுகிறேன். அவர் சொன்னது போலவே கலிகாலத்தில் கடவுளின் ஏற்ப்பாட்டின் படி பூமிக்கு வந்தார் ...

இன்று (25/04/2012) தமிழ்ப் பேராசிரியர் மு.வரதராசனார் பிறந்த நாள்

Posted: 24 Apr 2012 06:35 PM PDT

இருபதாம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றிலும், தமிழ் இலக்கிய வரலாற்றிலும் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர்.மு.வரதராசனார் அவர்களின் சீரிய தமிழ்த்தொண்டு முதன்மையான இடம் பெறுவதாகும். அவர் ஈடு இணையற்ற பெரும் எழுத்தாளராக விளங்கினார். உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கவர்ந்த தமிழராக அவர் திகழ்ந்தார். மு.வ என்ற செல்லப்பெயர் ஒலிக்காத தமிழ் இல்லங்களும் நல் உள்ளங்களும் இல்லை எனலாம். அவர் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி முதலிய மொழிகளைக் கற்று பன்மொழிப்புலவராக திகழ்ந்தார். இவர் சென்னை பச்சையப்பன் ...

Google கண்ணாடி( அதிசயம்)

Posted: 24 Apr 2012 02:07 PM PDT

google நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருகண்ணாடி பற்றிய தகவல் இது சாதாரணமாக நடந்துசெல்லுபவர்களுக்கு உதவியாக இது எந்தவிதத்தில் உபயோகப்படப் போகிறது என நீங்களே கண்டு கொள்ளுங்கள்

அபூர்வமான சூரிய ஒளிக்கற்றைகள் (காணொளி இணைப்பு) _

Posted: 24 Apr 2012 11:01 AM PDT

சூரியனிலிருந்து வெளிவரும் ஒளிக்கற்றைகளை நாசா படம் பிடித்து வெளியிட்டுள்ளது. சூரியனின் கிழக்குப் பகுதியில் இருந்து வெளியாகிய ஒளிக்கற்றைகளே இவ்வாறு படம் பிடிக்கப்பட்டுள்ளன. நாசாவின் செயற்கைக்கோள் ஒன்றே இதனை படம்பிடித்துள்ளது. அக்காட்சியினை நீங்களும் கண்டு இரசியுங்கள். [youtube]http://www.youtube.com/watch?feature=player_embedded&v=YF1Psoufuac[/youtube]

இளையராஜாவின் திருவாசகம் பாடல்கள் இங்கு தரவிறக்கம் செய்யுங்கள்

Posted: 24 Apr 2012 10:59 AM PDT

இளையராஜாவின் திருவாசகம் பாடல்கள் இங்கு தரவிறக்கம் செய்யுங்கள் Muthu Natramam.mp3 Pollaa Vinayen.mp3 Pooerukonum Purantharanum.mp3 Poovar Senni Mannan.mp3 Puttril Vazh Aravum Anjen.mp3 Umbarkatkarasaey.mp3

டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்க மத்திய அரசு முடிவு: விலை கடுமையாக உயரும்!

Posted: 24 Apr 2012 10:44 AM PDT

பெட்ரோலைப் போலவே டீசலின் விலையையும் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது. இன்று ராஜ்யசபாவில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயண் மீனா இதனைத் தெரிவித்தார். இதுவரை பெட்ரோலின் விலையை மட்டுமே சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதித்து வருகிறது. அதுவும் எந்த மாநிலத்திலாவது தேர்தல் வந்துவிட்டால், பெட்ரோல் விலையை உயர்த்தவும் மத்திய அரசு அனுமதிப்பதில்லை. சமீபத்தில் ...

சேட்டை செய்த சிறுவனை ஒரு ஆண்டாக சுரங்க அறையில் அடைத்து கொடுமை

Posted: 24 Apr 2012 10:42 AM PDT

சேட்டைகள் அல்லது சொல்லுக்கு கீழ்படியாத குழந்தைகளை சில பெற்றோர் கண்டிப்பது சாதாரண விஷயம். ஆனால் அதற்காக எல்லை மீறி நடந்து கொள்ளக்கூடாது. அது தண்டனைக்குரிய குற்றமாகி விடும். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 10 வயது சிறுவனை, அவனது தாயும், தந்தையும் கடுமையான கொடூர தண்டனை வழங்கிய தகவல் தெரியவந்துள்ளது. ஆனால் அந்த கொடுமைக்கார தம்பதியின் பெயரை போலீசார் வெளியிடவில்லை. அந்த சிறுவன் பெற்றோர் பேச்சை கேட்காமல் சேட்டைகள் செய்து வந்திருக்கிறான். இதனால் அவனை திருத்துவதாக கூறி சுரங்க அறை ஒன்றில் இரவு முழுவதும் ...

வேகத்தை அதிகரிக்க வழி என்ன...?

Posted: 24 Apr 2012 10:38 AM PDT

கடந்த தினங்களில் நன்றாக, வேகமாக இயங்கிய எனது கணணியின் இணைய வேகம் இன்று மிகவும் வேகம் குறைவாக இயங்குகிறது.

அதாகப்பட்டது, ஆம்புலன்ஸ் வேகத்தில் சென்றது இப்போது அமரர் ஊர்திபோல் செல்கிறது.

இதனை சரி செய்வதற்கு வழி ஏதும் இருந்தால் தயவுசெய்து குறிப்பிடுங்கள் நண்பர்களே.

கிரிஷ்ண தெளிவு !!!

Posted: 24 Apr 2012 09:23 AM PDT

கீதை 4:11 என்னிடம் எல்லா விசயங்களையும் கற்றுக்கொண்டு என்னை பின்பற்றி நடந்து கடவுளை முழுசரணாகதி அடைந்தவர்கள் அனைவருக்கும் கடவுள் அவரவருக்கேற்ற கூலியை வழங்குவார்!! கீதை 4:12 இப்பூமியில் பலன் கருதி பணியாற்றும் மனிதர்கள் சிலர் தாங்கள் நினைத்ததை அடைய அசுரர்களை வழிபடுகிரார்கள் ! அதனால் பூமிக்குரிய வாழ்வில் பல பலன்களையும் பெற்றுகொள்கிறார்கள் ! கீதை 4:13 மூன்று வகையாகிய மனித குணங்கள் மற்றும் அவற்றோடு தொடர்புள்ள உலகியல் செயல்பாடுகள் செவ்வையுற நடக்க நால்வகை தொழில்பிரிவுகள் சமுதாயத்தில் கடவுளால் ...

எழுத படிக்க தெரியாத பெண்ணின் நூதன மோசடி: ரூ.5 கோடிக்கு பணம், நகைகளை இழந்தவர்கள் புகார்

Posted: 24 Apr 2012 09:22 AM PDT

மலர்கொடி கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது வாகையூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி மலர்கொடி. இவர்களுக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். இரண்டு மகன்களும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். அவ்வப்போது வாகையூருக்கு வருவார்கள். வாகையூரைச் சேர்ந்த 18க்கும் மேற்பட்ட பெண்கள் ராமநத்தம் காவல்நிலையத்தில் தங்களிடம் ரூ.5 கோடி அளவுக்கு ஏமாற்றிவிட்டார் என்று மலர்கொடி மீது புகார் கொடுத்துள்ளனர். புகார் குறித்து விஜயராணி, பனிமலர், தனம், தேவகி, வளர்மதி ஆகியோர் நம்மிடம் ...

2 வது கவிக்கொத்து 10 கவிகள்

Posted: 24 Apr 2012 09:20 AM PDT

ஆசீர்வதியும் இயேசுவே! ஆண்டவரே எமை மீட்கவென - பல ஆண்டுகள் முன் பிறந்தீர் வேண்டிநின்றோர் தம் பாவங்களை - உங்கள் இரத்ததினால் துடைத்தீர் மாண்டு அழும் இந்த ஏழைகளை - நீர் மறுபடி காக்கவென மீண்டும் பிறந்திந்தப் பூமியிலே எமை மீட்டிட வாரீரோ ஆண்டுபல பெரும் மேடுபள்ளம் - என அலைந்தே நிலையழிந்தோம் வேண்டுமென நல்வாழ்வையெண்ணி - விடி வெள்ளியின் திசைநடந்தோம் மீண்டுமொரு நல்வாழ்வு இதோ - எனும் வேளையிற் பலமிழந்தோம் நீண்டு செல்லும் இத்துன்பங்களை - நீர் நிறுத்திட வாரீரோ தேடுகிறோம் பசும்புல்வெளிகள் ...

பில்லா 2 சூட்டிங் ஸ்பாட் - புகைப்பட தொகுப்பு

Posted: 24 Apr 2012 09:10 AM PDT



காதல் .........

Posted: 24 Apr 2012 08:41 AM PDT

காதல் ....
அவளது துரு துரு ....
பார்வைகளை .....

காணமல் என் .....

குருந்தசைகளும் ........
துரு பிடிகிறதே ......

ஆட்சியர் அலக்சை உடனடியாக மீட்க வேண்டும் கவிஞர் இரா .இரவி

Posted: 24 Apr 2012 08:34 AM PDT

ஆட்சியர் அலக்சை உடனடியாக மீட்க வேண்டும் கவிஞர் இரா .இரவி ஆட்சியர் அலக்சு இணையத்தில் எழுதுபவர் ,ஹைக்கூ கவிஞர் ,சுதந்திரமாக மனதில் பட்ட கருத்தை என்னைப் போல எழுதுபவர் .அவர் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் உலக அளவில் இந்தியாவிற்கு மிகப் பெரிய அவமானமாகும் .ஏற்கெனவே ராணுவ ஊழல் காரணமாக இந்தியாவின் மானம் காற்றில் பறக்கின்றது. ஆட்சியர் அலக்சை உயிரோடு உடனடியாக மீட்டு இந்தியாவின் மானத்தைக் காக்க வேண்டும் . ஏவுகணை அனுப்புவதில் ,செயற்கைக் கொள் அனுப்புவதில் இந்தியா மார் தட்டிக் கொள்வதில் ...

இன்றய செய்திகள்

Posted: 24 Apr 2012 08:23 AM PDT

புதியதாக முப்பதாயிரம் காவல்துறையினர்:ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த நான்கு ஆண்டுகளில் புதியதாக முப்பதாயிரம் காவல்துறையினர் நியமிக்கப்பட உள்ளதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.சட்டசபையில் நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்ன் போது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்

Posted: 24 Apr 2012 07:58 AM PDT

* இறைவனுக்கு நம் நன்றியை அர்ப்பணிக்கவே கோயில்களை அமைக்கிறோம். ஆனால், பொதுவாக நம் குறைகளை நிவர்த்தி செய்து தரும்படியே பகவானிடம் வேண்டிக்கொள்கிறோம். சில சமயங்களில் நிவர்த்தி உண்டாகிறது. சில சமயங்களில் நம் விண்ணப்பம் நிறைவேறுவதில்லை. * நாம் பிரார்த்தனை செய்தும் பலனில்லை என்றால் கடவுளுக்கு கருணை இல்லையா என்று தோன்றும். நம் பூர்வ ஜென்மவினைப் பயனால் தான் துன்பம் ஏற் படுகிறது. பகவான் நாம் விரும்பும் பிரார்த்தனைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருந்தால், மேலும் மேலும் அது வேண்டும் இது வேண்டும் என்று ...

திருமண வாழ்த்துக்கள் - jotheshree

Posted: 24 Apr 2012 07:53 AM PDT

புதிதாக திருமண பந்தத்தில் இணைந்திருக்கும் நம் சகோதரி ஜோதிஸ்ரீ - விஸ்வநாதன் தம்பதியர் வாழ்வின் அனைத்து வளங்களையும் பெற்று இனியமையான வாழ்வு வாழ ஈகரை தமிழ்க்களஞ்சியத்தின் சார்பாக வாழ்த்துகிறேன். நன்றி அன்பு மலர்

அனைவரும் வாழ்த்துங்கள் உறவுகளே

மைடியர் குட்டி சாத்தான் புகழ் அப்பச்சன் மரணம்!

Posted: 24 Apr 2012 07:26 AM PDT

புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த பிரபல மலையாள டைரக்டரும், தயாரிப்பாளருமான அப்பச்சன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88. 1924ம் ஆண்டு கேரள மாநிலம் ஆலப்புழாவில் பிறந்தவர் அப்பச்சன். சினிமா மீதுள்ள ஆர்வத்தில் சினிமா துறைக்கு வந்த அப்பச்சன், மலையாளத்தில் பல்வேறு படங்களை இயக்கியும், தயாரித்தும் இருக்கிறார். அதுமட்டும் அல்ல இந்தியாவின் முதல் 3டி படமான மைடியர் குட்டி சாத்தான் படத்தை இவர் தான் தயாரித்தார். மலையாளம், தமிழ், இந்தி என்று பல்வேறு மொழிகளில் வெளியான இப்படம் அன்றைய சூழலில் வசூலிலும் சாதனை ...

என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !!

Posted: 24 Apr 2012 07:25 AM PDT

நானின்றி உன்னை - யார் பார்த்துக்கொள்வார் உயிரே நீ முதலில் சென்றுவிடு - பின்னர் நான் வந்து சேர்வேன் நான் முன்னே சென்றால் - கண்ணே உன்பெயர் வேராகி போகும் - உன் பூநிறைந்த கூந்தல் - புயல்கண்ட நிலம்போல ஆகும் திலகம் நிறைந்த - உன் நுதலோ வெறிச்சோடி போகும் - நானொருவன் போனாலே பின்னாலே - இவையனைத்தும் வந்துன் மங்களம் கெடுக்கும் - சபையினில் வாழ்த்திடும் உரிமையை பறிக்கும் இந்த வேதனை வேண்டாம் என்னன்பே நீ சென்றுவிடு சுமங்கலியாக - உன்னவன் உன் முந்தானை பிடித்து பின்னாலே வருவேன் ஒவ்வொரு ...

ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு: கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர்

Posted: 24 Apr 2012 07:23 AM PDT

ஆத்தூர் கெங்கவல்லி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொது மக்களை நேரில் சந்தித்து மனுக்கள் பெற்றார். அப்போது கொண்டையம்பல்லியில் உள்ள ரேஷன் கடை ஒன்றிற்கு நேரில் சென்ற விஜயகாந்த், ஆய்வு செய்தார். அப்போது ரேஷன் கடையில் 5 லிட்டர் மண்ணெண்ணைக்கு பதிலாக 4 லிட்டர் மட்டுமே வழங்கப்படுவதாகவும், தரமற்ற அரிசி வழங்கப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் ரேஷன் கடை நிர்வாகியிடம் இது குறித்து விஜயகாந்த் கேட்டதற்கு, 4 லிட்டர் மட்டுமே வழங்க வேண்டும் என அரசு உத்தரவி்ட்டுள்ளதாக ...

இன்று சச்சின் பிறந்த தினம்..

Posted: 24 Apr 2012 07:22 AM PDT

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், தனது 39வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இந்த ஆண்டு தனது பிறந்த நாளை எளிமையாக கொண்டாட சச்சின் முடிவு செய்துள்ளார். மொகாலியில் தான் தங்கி இருக்கும் ஹோட்டலில் தனது குடும்பத்தினர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியினருடன் கேக் வெட்டி கொண்டாட உள்ளார். இன்றைய பயிற்சி முடிந்த பிறகு மாலையில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. சச்சின் தனது 100வது சதத்தை பூர்த்தி செய்த பிறகு அவர் கொண்டாடும் பிறந்த நாள் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிறந்தநாள் ...

பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _

Posted: 24 Apr 2012 06:57 AM PDT

பச்சோந்தி தான் இருக்கும் இடத்துக்கு ஏற்றாற் போல் தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் ஆற்றல் படைத்தது. இதற்குக் காரணம் அதன் தோலில் உள்ள நிற செல்களுக்கும் அதன் மூளைப் பகுதிகளுக்கும் இடைவிடாது தொடர்பு இருந்து கொண்டேயிருப்பது தான். பச்சோந்திக்குக் காக்கை, கழுகுகளால் ஆபத்து அதிகம். அது மட்டுமல்லாமல் ஒரு பயந்த சுபாவம் கொண்ட பிராணி. அதனால் ஒரு நிமிடத்துக்கு மேல் அது தன்னுடைய நிறத்தை மாற்றிக் கொள்ளும். பச்சோந்திக்கு இன்னொரு குணமும் உண்டு. அது தனது ஒரு கண்ணால் ஓரிடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்தையும் ...

கண்காட்சி உதவி

Posted: 24 Apr 2012 06:51 AM PDT

கண்காட்சி உதவி

நண்பர்களோ எமது பாடசாலையில் 75 வருட ஆண்டு நிறைவை ஒட்டி கண்காட்சி ஒன்று நடத்த உள்ளார்கள் ஆகவோ பழைய மாணவர்களும் ஏதாவது செய்ய நினைத்து உள்ளோம்.

கணணி மூலம் செய்யக்கூடிய நிகழ்ச்சிகள் இருந்தால் அறியதரவும்
உதாரணமாக
கூகிள் எர்த்
Body mass index calculating போன்ற வேடிக்கையான பயனுள்ள விடயங்கள்
உங்களிடம் ஏதும் பயனுள்ள மென்பொருட்கள் இருந்தால் தரவும்
உங்கள் ஆலோசனை களை தரவும்

"பதுங்கி அசைந்து வரும் இரவு"

Posted: 24 Apr 2012 06:50 AM PDT

பதுங்கிப் பதுங்கி அசைந்து வருகிறது இரவு. சூனியம்........ வரைய முடியாத ..... ஒரு பெரும் கரிய யானையாய் வளர்ந்து கிடக்க இரவில் அடைகாக்கப்படும் பெரிய முட்டைகளுக்குள் வளர்ந்து கொண்டிருந்தது சாத்தானின் சிறகுகள். ஒரு பறத்தலும்,...ஒரு பாடலும் இல்லாத அதன் முன்னே கைவிடப் பட்ட அகதியாய் நின்று கொண்டிருந்தது காலம். சபிக்கத் தெரியாத...கூடுகள் பிய்த்தெறியப்பட்ட சிறு பறவைகளின் கண்களிலிருந்து வழிகிறது..... காலம் துடைத்தெறியாத துயரத்தின் நதியொன்று. வழி தவறிய ஆடுகளென.......வசிப்பிடம் தேடித் தொலைந்த சில ...

கீதை துளிகள்

Posted: 24 Apr 2012 06:50 AM PDT

கீதை 4:38 உயிரோட்டமான--நித்தமும் வளர்கிற அறிவிற்கு ஈடுஇணையானதும் அதைப்போல தூய்மையானதும் இந்த உலகில் ஏதுமில்லை! அது எல்லா யோகங்களின் முற்றிய பலனால் விளைவது!! யார் ஆன்மீக பயிற்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளுகிராறோ அவர் தனக்குள்ளாகவே இந்த அறிவை ஏற்ற காலத்தில் துய்க்க தொட்ங்குவார்!!! கீதை 4:39 இந்த உயிரோட்டமான அறிவில் லயித்த பக்தன் தனது புலண்களை அடக்குவதில் வெற்றி பெற்று ஞானம் சித்திக்கபெறுகிறான்! ஞானம் சித்திக்க பெற்று உண்ணதமான தெய்வீக சமாதானம் நிறம்பியவனாய் மாறுகிறான்!!! கீதை 4:40 ...

உன்னை எதிர்பார்த்தே ..........

Posted: 24 Apr 2012 06:50 AM PDT

உன் பார்வை தருணங்கள் ... என்னுள்ளே ஆயிரம் ஆயிரம் வர்ணங்கள் .... தினம் புதிய புதிய எண்ணங்கள் .... இவை என்றுமே வர்ணம் போக .. வானவில்லின் வர்ணங்கள் .... மாலையில் மரணம் என தெரிந்தும் ... தினம் காலை தவறாமல் வரும் ... கதிரவன் போலவே .... காலை முதல் மாலை வரை ... உனை காணவே நாளை கழித்த நான் .... நாளையாவது பூஞ்சோலையாக ... பூப்பாய் என சாலை பார்த்தே நிற்கின்றேன் ... நீயோ உன் தோழிகளுடன் .... நகை ஆடுகிறாய் .... ஆனால் உன் விழியோ என்னுடன் அல்லவா !பகையாடுகிறாய் ... சிலை போலவே நீ .... நானோ ...

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -18

Posted: 24 Apr 2012 06:44 AM PDT

வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியாது என்று இன்னொரு பிரிவினரும் கூறிக்கொண்டு இருக்கிறார்கள் ,அவர்கள் அவ்வாறு கூற காரணமாக இருப்பது மாயன் , அதான் தெரியுமே மாயன் கலெண்டர் 2012 ல முடியுது அதனால அழியும் னு சொல்றாங்க இது எல்லாருக்கும் தெரியுமே புதுசா நீ என்ன சொல்லபோரன்னு கேட்குறீங்களா ? கண்டிப்பா இது ஒரு புது விஷயம் தான் ,இந்த கட்டுரை யை இப்போ படிக்கிறவங்களுக்கு ஒரு புது விஷயம் தான் உதாரணமா இந்த கட்டுரை ல இருக்குற 2 சின்ன தகவல்கள் 1.இப்போ உலகமே பயப்படுற ...

பிரிவு வேண்டாம்

Posted: 24 Apr 2012 06:38 AM PDT

உன்னை எத்தனையோ
தடவை பிரிந்து இருக்கிறேன்
ஆனா இப்போது பிரிவது
வழைமையயை விட
பிரிவு என்னை வாட்டுகிறது
நாம் அப்போது நண்பர்கள்
இப்போது நாம் காதலர்கள்
நீ அங்கே இருப்பதும் நான்
எமக்குள் பிரிவு காணும்
இந்த இடைவெளி இனியும் வேண்டாம்
நிரந்தரம் இல்லை எண்டாலும்
நித்தம் வாட்டுகிறது என்னை
உனக்கு ஆறுதல் சொல்லி வந்தேன்
எனக்கு ஆறுதல் சொல்வது யார்

புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!

Posted: 24 Apr 2012 06:26 AM PDT

முடிவுத்தொடங்கி(அந்தாதி) என்பது முடிவு(அந்தம்), தொடக்கம்(ஆதி) என்ற சொற்பிணையலால் ஏற்பட்டதே! மரபுக் கவிதையில் முதலடியில் தொடங்கிய சீரும் ஈற்றடியில் முடியும் சீரும் ஒன்றாக அமைதலையே அந்தாதி என்கிறார்கள். அதாவது, முடிகின்ற சீராலே தொடங்கியோ தொடக்கிய சீராலே முடித்தோ பா புனையும் திறன் முடிவுத்தொடங்கி(அந்தாதி) என்றழைக்கப்படுகிறது. மரபுக் கவிதை புனைவது இலகுவானதல்ல, அதிலும் இவ்வகைப் பாக்களை புனைவது இலகுவாக அமைய வாய்ப்பில்லை. புதுக்கவிதை விரும்பிகள் பலர் மரபுக் கவிதை அமைப்பைப் பேணி வருவதை நாம் அறிவோம், ...

மதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா

Posted: 24 Apr 2012 06:08 AM PDT

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழா, நேற்று மீனாட்சியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.,30ல் பட்டாபிஷேகம், மே 2ல் திருக்கல்யாணம், மே 6ல் ஆற்றில் அழகர் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. நேற்று காலை ஆடி வீதிகள் வழியாக, சுவாமி சன்னிதி கொடி மரத்திற்கு யானை மீது கொடி கொண்டுவரப்பட்டது. பச்சை பட்டில் அம்மனும், வெண்பட்டில் சுவாமியும் வீற்றிருக்க, மோகன் பட்டர் தலைமையில் ரிஷப யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன. காலை 9.46 மணிக்கு கொடியேற்றப்பட்டு, அபிஷேகம், தீபாராதனைகள் நடத்தப்பட்டன. ...

கூகிள் எர்த் --ஒரு பார்வை

Posted: 24 Apr 2012 05:44 AM PDT

இந்த பதிவு கூகிள் எர்த் பற்றியது ,இதை பற்றி பெரிய முன்னுரை தேவை இல்லை நாம் அனைவரும் ஒருதடவையாவது உபயோகித்து பார்திருப்போம் பூமி ,நிலா ,வானம் ,செவ்வாய் போன்றவைகளை இங்கிருந்தபடியே காணலாம், கூகிள் இன்னும் பல சேவைகளை இணைத்துக்கொண்டு தான் இருக்கிறது , சரி பதிவுக்கு வருவோம் இதில் நீங்கள் இதுவரை என்ன பார்த்திருபீர்கள் ? உங்கள் வீடு எங்கிருக்கிறது ,வழிகள் சரியாக உள்ளதா என்று தேடியிருபீர்கள், இதை தவிர்த்து உங்களிடம் இரண்டு மூன்று ஆப்ஷன் இருக்கும் (வேலை செய்த இடம் ,சுற்றுலா சென்ற இடம்) வேறு ...

சாதலே இல்லா காதல்...!

Posted: 24 Apr 2012 05:30 AM PDT

சுமையென நினைக்காமல் சுகமென சுமந்த தாயின் காதல் தாய்ப்பாலில் முடிகிறது அழகை நினைக்காமல் அன்பை பகிர்ந்த தந்தையின் காதல் முதலெழுத்தில் முடிகிறது மழலை மணியோசையில் மனதை களவாடிய சுற்றத்தின் காதல் முத்தத்தில் முடிகிறது கனவாய் இல்லாமல் காதலாய் மலர்ந்த பெண்மையின் காதல் பள்ளியில் முடிகிறது இடைப்பட்ட இன்பத்தில் இருகைப் பற்ற தொடரும் கல்லூரி காதல் கண்ணீரில் முடிகிறது பிறவிப் பயனை பின்னோக்கும் காலத்தின் காதல் கடமையில் முடிகிறது மீண்டும் தாய்மையின் ...

பெயர்

Posted: 24 Apr 2012 05:27 AM PDT

எனது மகன் முதல் எழுத்து சே சோ தா தீ புதுமையான பெயர் சொல்லுங்கள் ...

சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்!

Posted: 24 Apr 2012 05:23 AM PDT

`பேஸ்புக்', `டுவீட்டர்' போன்ற சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஈடுபாடு காட்டுபவர் களில் 58 சதவீதம் பேர் பெண்கள் என்று தெரியவந்திருக்கிறது. பியூ ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். அப்போது, 2008-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2010-ல் சமூக வலைத்தளங்களில் இணைவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி 85 கோடியாகியிருக்கிறது. ஆனால் இந்த வலைத்தளங்களில் இணையும் ஆண்களின் எண்ணிக்கை ...

திக்......திக்....... - ராதிகா

Posted: 24 Apr 2012 05:11 AM PDT

ரோஜாவைப் போல் மென்மையாக இருப்பதனால் தானோ என்னவோ அவளுக்கு அவள் பெற்றோரும் அப்பெயரையே வைத்தனர். ரோஜா உண்மையில் வர்ணிக்க இயலாத பேரழகிதான். உண்மையில் சொல்ல வேண்டுமானால் ஒவியன் வரைய மறந்த ஒவியம். கவிஞன் எழுத மறந்த காவியம். கலை கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவி. அதே கல்லூரியில் தன்னுடன் படிக்கும் அரவிந்தன் தான் இந்த ரோஜாவின் ராஜா. ஆம் இருவரும் கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் இணைபிரியா காதலர்கள். ஒருவர் மேல் ஒருவர் உயிராய் இருந்தனர். அன்று..... ரோஜாவின் மடியில் சாய்ந்து கொண்டு அரவிந்தன் ...

ரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை

Posted: 24 Apr 2012 05:10 AM PDT

இயக்குனர் ஷங்கரின் ரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 24, 2012, சினிமாவில் எங்கும் பிரம்மாண்டம், எதிலும் பிரம்மாண்டத்தை காட்டி பிரம்மிக்க வைத்த இயக்குனர் ஷங்கர், தனது கார் விஷயத்திலும் தனது பிரம்மாண்ட எண்ணத்தை பிரதிபலித்துள்ளார் ஆம், உலகின் ஒவ்வொரு பணக்காரரும் விரும்பும் விஷயங்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி இந்த முறை தனது பெயரை செய்தியாக்கியுள்ளார் ஷங்கர். பல கோடீஸ்வரர்களின் அந்தஸ்தின் அடையாளமாக ரோல்ஸ் ராய்ஸ் காரை கருதுகின்றனர். தமிழனை திரும்பி பார்க்க ...

நம்ம ஊரு நல்ல ஊரு இது எந்த ஊர் கண்டுபிடியுங்க..!!

Posted: 24 Apr 2012 05:07 AM PDT

சிறுக கட்டி பெருகி வாழ்வது இதுதானோ

Posted: 24 Apr 2012 05:01 AM PDT

உண்மை ...!

Posted: 24 Apr 2012 04:45 AM PDT

இலையுதிர்காலம் உண்மை .... இனியொரு வசந்தக் காலத்தை தேடியபடியே ....! பனியுதிர்காலம் உண்மை .... பரந்த உலகில் பசியை தேடியபடியே ....! கனியுதிர்காலம் உண்மை .... விதியின் நிழலில் சுவையைத் தேடியபடியே ....! மனமுதிர்காலம் உண்மை ..... மரணம் அழைக்கும் போது மண்ணை தேடியபடியே .....! இருந்தும் ..... மரணத்தையே வெல்லும் உண்மை ..... மறு ஜென்மமாய் பிறக்கிறது இம் மண்ணில் .....!

ஹிஷாலீ - ஹைக்கூ

Posted: 24 Apr 2012 04:44 AM PDT

வாடிய பயிர்களுக்கு வலிகள் தெரிவதில்லை வருத்தத்தில் நிலம் வானில் மின்சாரம் கூறு போடாத நிலா புன்னைகையில் இரவு காணி நிலமும் கட்டிடமானால் ஊண் உண்ணிகள் அழிந்துவிடும்...! தொகுதி பகுதி மூல காரணி பணம்...! பத்துமுறை சுற்றினால் களிமண் பானை மனிதன் என்றுமே...! மனிதனின் உயிர் மருந்து ஆசனம் சுவாசனம்...! சூரியன் வருகை கடலின் பிராணாயாமம்...! நன்றாக கட்டிய வீடு நற் சிந்தனை உள்ளம் தீயவை நுழையாது..! நிலம் பிளந்து உயிர்கள் விதையானது சுனாமி...!

வார/மாத இதழ்கள்: புதியவை - குங்குமம் 30/4, வண்ணத்திரை 30/4, அவள் விகடன் 8/5

Posted: 24 Apr 2012 04:08 AM PDT

வார/மாத இதழ்கள் இங்கு தொடர்ந்து பதிவிடபடுகிறது. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ குமுதம் 21-03-2012 http://www.4shared.com/office/TM4ii-zp/Kumudam_21032012.html http://www.mediafire.com/?ba9svax396b3aog http://letitbit.net/download/69849.64cdf40f94e05fe0e876965b0c35/Kumudam21032012.pdf.html குறிப்பு: அனைத்து பதிவுகளும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது.இணையத்தில் கிடைத்த லிங்கையே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கடத்தப்பட்ட ஆட்சியரின் உடல் நிலை மோசம்: மருத்துவ உதவி கேட்டு மாவோயிஸ்டுகள் கோரிக்கை

Posted: 24 Apr 2012 04:03 AM PDT

ராஞ்சி: சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட ஆட்சியர் அலெக்சின் உடல் நிலை, சற்று கவலைக்கிடமாக இருப்பதால் உடனடி மருத்துவ உதவி அவருக்கு தேவைப்படுவதாகவும் மாவோயிஸ்டுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கால தாமதம் இன்றி எவ்வளவு விரைவாக மருந்துகளை அனுப்பி வைக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அனுப்பி வைக்குமாறு மாவோயிஸ்டுகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.இந்த அறிக்கையால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. மருத்துவ உதவி அளிக்க தாமதமாகி அதனால் ஏதாவது விபரீதம் நிகழ்ந்தால் அதற்கு அரசே முழு பொறுப்பு என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நன்றி ...

மேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்களுக்கு நிபந்தனை

Posted: 24 Apr 2012 03:53 AM PDT

புதுடெல்லி : மேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்கள் உறுதிமொழி பத்திரம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை இந்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் நேற்று டெல்லியில் அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவ மேல்படிப்புக்காக 3,000 டாக்டர்கள் அமெரிக்காவுக்கு சென்றனர். அவர்கள் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பவில்லை. அமெரிக்காவிலேயே டாக்டர் தொழில் செய்கின்றனர். ஒரு டாக்டரை உருவாக்க அரசு லட்சக்கணக்கில் அவர்களது படிப்புக்காக செலவழிக்கிறது. ...

வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?

Posted: 24 Apr 2012 03:13 AM PDT

அனைவருக்கும் வணக்கம் எனது அலுவலகத்தில் சில ஆன்மீக நண்பர்கள் வெள்ளையங்கிரி மலைக்கு சென்று (ஏழு மலை கடந்து சென்று) ஈஸ்வரனை தரிசனம் செய்து வந்தார்கள். அதிலிருந்து எனக்கும் அங்கே சென்று ஈசனை காண வேண்டும் என்ற ஆவல் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டேயிருக்கிறது. பெண்கள் மலை ஏற முடியாது, மிகவும் கடினம் என்று பலர் சொன்னார்கள். எனினும் எனது உள் மனது ஈசனை காண எவ்வளவு ரிஸ்க் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்ற அளவிற்கு வந்து விட்டது. இப்படியிருக்கும்போது இன்னும் சிலர் வெள்ளையங்கிரி மலையில் அடிவாரத்தில் உள்ள ...